கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, June 29, 2010

சிந்து சமவெளி நாகரிகம்- திராவிடர் நாகரிகம் என்ற கண்டுபிடிப்பு மிகவும் சிறப்பானது! மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கருத்து


திராவிடக் கலாச்சாரத்துக்கும், சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் இருந்த தொடர்பு-களையும், அக்கால மக்களின் வாழ்க்கை, வரலாறு மற்-றும் காலம் ஆகியவற்றை சிறப்பான இம்-மாநாட்டில் வெளியிட்டு இருப்பது சிறப்பானது என்றார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.

கோவை _ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவுக்குத் தலைமை வகித்து அவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதிலும், தலைமை தாங்குவதிலும் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழை செம்மொழியாக மத்திய அரசு அறிவித்த-தற்குப் பிறகு நடைபெறும் இந்த முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக நடத்த நட-வடிக்கைகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் கலைஞரை நான் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். அவரோடும், இந்தியாவிலும், உலகளவிலும் உள்ள ஏனைய அறிஞர்களோடும் இணைந்து தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிப்பதற்கு ஒரு வகையில் அய்க்கிய முற் போக்குக் கூட்டணி துணை நின்றதை அறிந்து பெருமைப்படுகிறேன்.

பெரும் வெற்றி பெற்ற மாநாடு

இந்த மாநாட்டில் நடைபெற்ற ஆய்வரங்கங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகள், 50_-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த மாநாடு பெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த ஆய்வரங்கங்களில், பொதுவிவாதங்கள், ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தல் ஆகியவற்றில் பல்-வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் கலந்து-கொண்டு சொற்பொழிவாற்றி, விவாதித்து, ஆய்வுக் கட்டுரை-களை சமர்ப்பித்திருப்பதை அறிகிறேன். முதல்வர் கலைஞரையே மிகப் பெரிய அரசியல் மேதையாக, தமிழறிஞராக, கவிஞராக, தலைசிறந்த எழுத்தாளராக பன்முகங்களை பெற்ற ஒருவர். எனவே, இந்த மாநாட்டை அவர் திட்டமிட்டு வெற்றி கரமாக நடத்தியிருப்பதில் ஆச்சரியம் இல்லை. தமிழக மக்கள் தங்களது சிறந்த பாரம்பரியத்தின் மூலமாக இந்திய வரலாற்றுச் செழுமைக்கு சிறப்பான பங்களிப்பை தந்திருக்கிறார்கள். தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தமிழ் நாகரிகம் இவற்றை பொறுத்தவரை இதுவரை காணாத புதிய உற்சாகத்தையும், எழுச்சியையும் எல்லா முனைகளிலும் பெற்றிருப்பதைக் காண முடி-கிறது என்று கலைஞர் முன்பு குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ் இணைய வளர்ச்சிக்கு உதவும்

தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழ் பர-வலாக பயன்படுத்தப்பட்ட பிறகு, இது உண்மை என்பதையும் உணரமுடிந்திருக் கிறது.

அதன் தொடர்ச்சியாகத்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன், தமிழ் இணைய மாநாடும், உலக தமிழ் தகவல் தொழில்நுட்ப அமைப்புடன் சேர்ந்து நடத்தப்படுகிறது. இந்த இணைய மாநாட்டுக்கு சிறப்பான வரவேற்பும் கிடைத்திருக்-கிறது. இந்த முயற்சிகள் எல்லாம் தமிழ் இணைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். தமிழ் இணைய மேம்பாட்டு முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தமிழ் ஆர்வலர்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கும் இந்த இணைய மாநாடு பெரிதும் உதவியிருக்கிறது.

வெளிநாட்டு அறிஞர்கள் பாராட்டு

இந்த இணைய மாநாட்டுக்குச் சிறப்பான வரவேற்பும் கிடைத்திருக்கிறது. இந்த முயற்சிகள் எல்லாம் தமிழ் இணைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இந்த மாநாட்டில் பல பன்னாட்டு தமிழறிஞர்கள் சொற்பொழிவாற்றி, தங்களது ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்கள். ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல அறிஞர் அஸ்கோ பர்போலா, இம்மாநாட்டில் கலந்து-கொண்டு, சிந்து சமவெளி எழுத்துக்களுக்கான திராவிட தீர்வு என்ற ஆய்வுக்கட்டுரையையும் சமர்ப்-பித்துள்ளார். அது திராவிட கலாசாரத்துக்கும், சிந்து-சமவெளி நாகரிகத்துக்கும் இருந்த தொடர்பினையும், அக்கால மக்களின் வாழ்க்கை, வரலாறு மற்றும் காலம் ஆகியவற்றை சிறப்பான முறையில் வெளிப்படுத்த பெரும் துணையாக உள்ளது. அது ஒரு சிறந்த கண்டுபிடிப்பாகும். சங்ககால இலக்கியத்தில் இருந்த சிறப்புகள், அதன் சமகாலத்தில் இருந்த வேறு எந்த இலக்கியங்களிலும் காணமுடியாது என்று பர்போலா கூறியிருக்கிறார். இம்மாநாட்டில், அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ஜார்ஜ் ஹார்ட் கலந்து-கொண்டு தனது ஆய்வுக் கட்டுரையையும் சமர்ப்-பித்தார். அதில் செம்மொழியின் தனித்துவமும், சங்க செய்யுள்களின் சிறப்பு குறித்தும், அவர் சொல்லியி-ருக்கிறார். அது சங்ககால மக்களின் வாழ்க்கை முறையையும் சிறப்பாக சொல்வதாக உள்ளது.

இக்கால தமிழ் நாவல்களில், பழைமை மாறாமல், சங்ககால வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்படு-வதை பற்றி குறிப்பிடுகிறார். அந்த நாவல்களில் சங்க கால வார்த்தைகளை குறிப்பிட்டாலும், அதன்மூலம் அவற்றின் பொருள்களை தெளிவாக, துல்லியமாக அவர்கள் விளக்குவதை பார்த்து வியப்பதாகவும் ஹார்ட் கூறியிருக்கிறார். அந்த வார்த்தைகளில் பெரும்-பாலானவை சங்க இலக்கியங்களில் இருந்து பெறப்பட்டவையாக இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

தமிழ் மொழியின் வளர்ச்சியையும், அதன் தகுதியையும் உணர்ந்த யாராக இருந்தாலும், அதன் செம்மொழித் தகுதிபற்றி மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். உலகத்தில் படைக்கப்பட்ட மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக சங்க இலக்கியம் விளங்குகிறது என்றும் ஹார்ட் கூறுகிறார். காரணம், அதில் காணப்படும் கருத்துக்கள் எவையும் கடன்-வாங்கப்பட்டவை அல்ல. அவை வாய்மொழியாகவும், இலக்கியம் மூலமாகவும், பரிணாம வளர்ச்சி மூலமாகவும், அந்த பழக்கவழக்கங்களும், நுட்பங்களும் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன என்கிறார்.

அத்துடன் மட்டுமல்லாமல், சங்க காலத்தைத் தொடர்ந்து வந்த வரலாற்றில், தெற்காசியாவில் உள்ள இலக்கியங்களில் சங்க இலக்கியத்தின் தாக்கம் இருப்பதை காணமுடிகிறது என்றும் ஹார்ட் கூறுகிறார்.

ரஷியாவை சேர்ந்த பேராசிரியர் துபியான்ஸ்கி சங்ககால இலக்கியங்கள் குறித்து வெளிவந்துள்ள புத்தகங்களை பற்றி விரிவாக ஆராய்ந்து, நூல்களை எழுதியிருக்கிறார். அது மட்டுமின்றி, பனைச்சுவடி-களில் இருந்த சங்க செய்யுள்களையும் ரஷிய மொழியிலும் மொழி பெயர்த்திருக்கிறார். எனவே, தமிழ் மொழிச் செம்மொழியாக உருவாகியிருப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

கண்காட்சி அரங்கம்

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் ஓர் அங்கமாக தமிழ் மொழி வரலாறு, கலாசாரத்தை விளக்கும் விதமாக பொது கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதைப்போல் தமிழ் இணைய கண்காட்சியும், புத்தகக் கண்காட்சியும் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த கண்காட்சிகள் மிகவும் பிரபலம் அடைந்து ஆயிரக்கணக்கான பார்வையா-ளர்கள், அவற்றை கண்டு ரசித்திருக்கிறார்கள். இவை, தொடர்ந்து மக்கள் கூட்டத்தை ஈர்த்து வருகின்றன. அதன் காரணமாக இந்த கண்காட்சிகளை ஜூலை 4-ஆம் தேதிவரை நீட்டிக்க, அதன் ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி மாநாட்டின் தொடக்க நாளில் நடத்தப்பட்ட முக்கிய அம்சமான ``இனியவை நாற்பது என்ற அலங்கார ஊர்தி அணிவகுப்பு, தமிழ் கலாசாரம், வரலாறு, நாகரிகம், இலக்கியம், பாரம்பரியம், கலை, கட்டடக் கலை ஆகியவற்றின் பல்வேறு வடிவங்கள் சிறப்பான முறையில் விளக்குவதாக இருந்தது.

இந்த கண்கவர் அணிவகுப்பானது சிந்தையைக் கவரும் வகையில் இருந்ததால், அதனை சாலையின் இருபுறங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளித்தார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

மாநாடு - சிறப்பான வெற்றி

முதல்வர் கலைஞர் எதையும் சிறப்பாக செய்பவர். அவரது சிறப்பான முயற்சி மற்றும் வழிகாட்டுதலால், இந்த மாநாடு சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது என்பதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை.

இந்த மாநாடு இத்தகைய சிறப்பான ஒரு வெற்றி பெற சிறப்பான முயற்சிகளை மேற்கொண்ட முதலமைச்சருக்கும், அவருக்கு துணையாக இருந்த மற்றவர்களுக்கும் எனது பாராட்டுகள்.

இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூலம் கற்ற பாடங்கள், பிற்காலத்தில் தமிழ்வளர்ச்-சிக்கு சிறப்பாக செயல்பட தூண்டுகோலாக, உதவியாக இருக்கும். _ இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.

No comments:

Post a Comment