கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, June 29, 2010

முதலமைச்சர் வெளியிட்ட 15 அம்சத் திட்டங்கள்



கோயம்புத்தூரில் கடந்த ஜூன் 23 முதல் 27 முடிய நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவுரையில் (27.6.2010) முதலமைச்சர் சிறப்புமிக்க 15 அம்சத் திட்டங்களை வெளியிட்டார்.

மாநாட்டின் நிறைவு விழாவில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிறைவு விழா நிகழ்ச்சியின் தலைவர் மத்திய நிதியமைச்சர், நம்முடைய அன்பிற்குரிய நண்பர் பிரணாப் முகர்ஜி அவர்களே, முன்னிலை வகித்துள்ள மத்திய உள்-துறை அமைச்சர் அருமை நண்பர் ப. சிதம்பரம் அவர்களே,

சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிட்ட மத்திய அமைச்சர் தம்பி ராஜா அவர்களே, தமிழக நிதிய-மைச்சர் இனமானப் பேராசிரியர் அவர்களே, துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே, மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி அவர்களே, தயாநிதி மாறன் அவர்களே, வரவேற்புரையாற்றிய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிறீபதி அய்.ஏ.எஸ்., அவர்களே, நன்றியுரை நவிலவிருக்கின்ற, நன்றிபல பாராட்டப் படவேண்டிய அய்.ஏ.எஸ். அதிகாரி, இந்த மாநாட்டிற்கான சிறப்பு அலுவலர் அலாவுதீன் அய்.ஏ.எஸ்., அவர்களே,

எத்தனையோ இன்னல்களுக்கிடையேயும், இடையூறுகளையெல்லாம் தாண்டி இந்த மாநாட்டை அல்லும் பகலும் உழைத்து வெற்றிகர-மாக நடத்துவதற்கு தானும், தன்னுடைய அலுவ-லாளர்களும் மாவட்டத்திலே உள்ள அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி, வெற்றிக் கனியைப் பறித்துத் தந்துள்ள மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் உமாநாத் அய்.ஏ.எஸ்., அவர்களே, (கைதட்டல்)

பெரியோர்களே, தாய்மார்களே, வெளிநாட்டி-லிருந்து வந்துள்ள தமிழ் அறிஞர்களே, என் உயி-ரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே (கைதட்-டல்) இந்த மாநாட்டினைத் தொடங்கி வைத்து நம்மை வாழ்த்திப் பாராட்டிச் சென்ற_ இந்திய நாட்டினுடைய குடியரசுத் தலைவர் அவர்களுக்குப் பிறகு இன்று, இந்த மாநாட்டின் நிறைவு விழாவிலே நிறைந்த மனதோடு மகிழ்ச்சிப் பெருக்கோடு வந்து கலந்துகொண்டு _நம்மையெல்லாம் மகிழ்ச்சியிலே ஆழ்த்-தி-யுள்ள மத்திய நிதியமைச்சர் பிரணாப் அவர்-களுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் நண்பர் சிதம்-பரம் அவர்களுக்கும் என்னுடைய தனிப்பட்ட முறை-யிலும், இந்த மாநாட்டுப் பந்தலிலே குழுமியிருக்கின்ற உங்கள் அத்தனை பேருடைய சார்பிலும் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழக முதலமைச்சர் கலைஞர் நேற்று (27.6.2010) கோவையில் நடைபெற்ற உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு மற்றும் தமிழ் இணைய மாநாட்டு நிறைவு விழாவில் பேருரையாற்றினார். அவரது உரையைக் கேட்க மத்திய _ மாநில அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்த காட்சி.

இந்த மாநாட்டின் விளைவாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் நம்முடைய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்கள் இங்கே எடுத்துரைத்தார்கள். நான் பக்கத்திலே நிதிய-மைச்சர் இருக்கிறார் என்ற (கைதட்டல்) தைரியத்தில், அவர் சொன்னதையெல்லாம் செய்வதாக ஒப்புக் கொண்டிருக்கிறேன். (கைதட்டல்)

நடைபெறக் கூடுமென்று எதிர்பார்த்து, முன்-கூட்டியே நான் அவைகளையெல்லாம் இந்த மாநாட்-டிலே என்னுடைய பேச்சோடு பேச்சாக, இரண்டு நாள்களுக்கு முன்பு நான் அறிவித்தவாறு ஏறத்தாழ ஒரு நிதிநிலை அறிக்கையைப் போல என்னுடைய பேச்சைத் தயாரித்திருக்கின்றேன்.

பிரணாப் முகர்ஜியும் - சிதம்பரமும் இருக்கும்போது நிதியைப் பற்றி கவலையில்லை

நிதிநிலை அறிக்கை என்றதும் நம்முடைய பிரணாப் அவர்கள் பயந்து விட வேண்டிய அவ-சியமில்லை. நான் நம்பிக்கையோடு இருப்பதற்குக் காரணம், பிரணாப் அவர்கள் என்னிடத்திலே கொண்டுள்ள அன்பு தமிழ் மக்களிடத்திலே அவருக்-குள்ள அன்பு, ஆர்வம் -தமிழின்பால் உள்ள பற்று - இவைகளின் காரணமாக நான் இந்த மாநாட்டிலே வெளியிடுகின்ற பல்வேறு காரியங்களுக்கு நிதி உதவி அதிகம் தேவைப்படுகிறது. அந்த நிதி உதவியை மத்திய பேரரசுதான் வழங்க வேண்டும். வலது புறத்திலே பிரணாப்பும், இடது புறத்திலே சிதம்-பரமும் இருக்கும்போது நான் நிதியைப் பற்றிக் கவ-லைப்படத் தேவையில்லை என்ற அந்த உணர்வோடு உங்கள் முன்னால் என்னுடைய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிறைவுரையை வைக்க விரும்புகின்றேன்.

அய்ந்து நாட்களாகக் கோவை மாநகரில் எழுச்சியும், ஏற்றமும் கொண்டு நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இன்று நிறைவு விழா காண்கிறது. உள்ளமெல்லாம் தமிழ் நிறைந்திருக்கும் வேளை_- ஊனும், உயிரும் தமிழோடு கலந்திருக்கும் வேளை_- எதைப்பற்றிப் பேசினாலும், தமிழைப் பற்றிப் பேசிடும் வேளை_- எதையும் தமிழோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வேளை_ என இந்த அய்ந்து நாள்களும் நமது சிந்தனை, சொல், செயல் அனைத்தும் தமிழ், தமிழே என்றாகி; இந்த மாநாட்டில் நாம் அனைவரும் மனநிறைவும், மகிழ்ச்-சி-யும் கொள்ளத்தக்க அளவுக்கு; விளைத்திருக்கும் பயன்களோ பலப்பல என பாரோர் போற்றிட நடைபெற்று, நிறைவுவிழாக் கட்டத்தை இப்போது இந்த மாநாடு எய்தியிருக்கிறது.

விரிந்து பரந்து கிடக்கும் கடல் போல எத்திசை நோக்கினும் - மக்கள் வெள்ளம் கூடியுள்ள பேரழகு கண்ட பெருமித உணர்வோடு இந்த நிறைவு விழாவில் எனது எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ள ஒரே இந்திய மொழி என்னும் சிறப்புக்குரியது தமிழ்மொழி. தமிழ்மொழியின் தொன்மையை ஏனைய உலக மொழி-களோடு ஒப்பிட்டு நோக்கினால், அதன் அருமையும், பெருமையும் மேலும் உயர்வதை அனைவரும் உணரமுடியும்.

வரலாற்று மொழியாக தமிழ் திகழ்வதால் அறிஞர்கள் பலர் கூடியுள்ளனர்

இன்று உலக மொழியாகத் திகழும், ஆங்கில மொழியின் முதல் எழுத்து வடிவம் கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அறிவியல் மொழியாகிய ஜெர்மன் மொழியின் முதல் எழுத்து வடிவம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.

பிரெஞ்சு மொழியின் முதல் எழுத்து வடிவம் கி.பி.9ஆம் நூற்றாண்டில்தான் கிடைத்தது. ரஷ்ய மொழியின் பழைமையான எழுத்து வடிவம் கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. லத்தீன் மொழியில் இருந்து உருவான இத்தாலிய மொழி 10ஆம் நூற்றாண்டில்தான் எழுத்து வடிவம் பெற்றது.

ஆனால் கிறித்து பிறப்பதற்கு பல நூற்றாண்டு-களுக்கு முன்பே - முதல் எழுத்து ஆவணமாக, தொல்காப்பியம் நூலைப்பெற்று, இலக்கண வரம்பு கொண்டு வாழ்ந்த தமிழ்மொழி இன்றும் சாமானியர் முதல் ஆன்றோர், சான்றோர் வரை வாழும் மொழி-யாக-வும், வளரும் மொழியாகவும், வரலாற்று மொழி-யாகவும் திகழ்வதனால் தான், இன்று உலக அளவில் அறிஞர்கள் கூடி விழா எடுக்கும் பெருமையைப் பெற்றுள்ளது.

காதல், வீரம் இரண்டும் தமிழர்களுக்கு எத்தகைய உணர்வு பூர்வமான பெருமை அளித்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக நம்முடைய சங்கப்பாடலில் இதோ இரண்டு காட்சிகள்!

குழந்தைப் பருவத்தில் எனது தாயார் விளையாடியபோது மணலில் அழுத்திய விதை, பின் முளைத்து புன்னை மரமாக வளர்ந்துள்ளதாம். இந்தப் புன்னை மரம், எனக்கு முன் தோன்றியதாம்; எனவே இதனை என் அக்காள் என்று எனது அன்னை ஏற்கனவே கூறியுள்ளாள்.

என் அக்காளாகிய இந்தப் புன்னை மரத்தின் முன் உன்னொடு காதல் மொழி பேச என்மனம் கூசு-கிறது; வேறிடம் செல்வோம் வா எனக் காதலனை வேறிடத்திற்கு அழைக்கிறாள் மங்கையொருத்தி;

நற்றிணையில் ஒரு பாடல்

சங்க இலக்கியத்தில் நற்றிணையில் இது கவிதை வரிகளாக வருகின்றது.

விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி

மறந்தனம் துறந்த காழ்முளை அகைய

நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப

நும்மினும் சிறந்தது நுவ்வை யாகுமென்று

அன்னை கூறினள் புன்னையது சிறப்பே

அம்ம நாணுதும் நும்மொடு நகையே

என நற்றிணை நவில்கிறது.

ஒருத்தியின் குழந்தை பருவத்தில் _ இவளுக்கு மூத்த வளாக இன்னொரு குழந்தை. ஒரு இடத்திலே நட்ட -_ பதித்துவைத்த விதை வளர்ந்து அது புன்னை மரமாக நின்று கொண்டிருக்கிறது. அதற்குப் பக்கத்-திலே காதலனும் காதலியும் சந்திக்கிறார்கள். நெருங்கு-கிறான் காதலன். அப்போது காதலி சொல்கிறாள். இந்தப் புன்னை எனக்கு அக்காள் முறை. ஏனென்-றால் எனக்கு முன்னால் என் தாயாரால் விதை புதைக்-கப்பட்டு, அது இங்கே வளர்ந்து நிற்கின்றது. எனவே அது எனக்கு அக்காள் முறை. அந்த அக்காளுக்கு முன்னால் உன்னோடு காதல் பேசுவதற்கு வெட்கமாக இருக்கிறது என்று அந்தக் காதலி சொல்வதாக சங்க இலக்கியத்திலே ஒரு அழகான கவிதை.

இப்படி அகவாழ்க்கையின் நாகரிகத்தைச் சமு-தாயத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கட்டிக் காத்துப் புகழ் ஈட்டியுள்ளது தமிழ்நாடு!

குழந்தைக்கும் வீரம்

ஒரு குழந்தை இறந்தால்கூட - விழுப்புண் படா-மல் இறந்துவிட்டதே என வருந்தி வீரச்சின்னம் விளங்க அந்தக் குழந்தையின் மார்பை வாளால் பிளந்து பிறகு குழந்தையைப் புதைத்து, வீரத்தைப் போற்றும் நாடு தமிழ்நாடு! இதனைத்தான் குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆளன்று என்று வாளில் தப்பார்

- எனப் புறநானூறு கூறுகிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

_ என்று அய்யன் திருவள்ளுவர் கூறியதிலிருந்து; சமதர்ம சமுதாய நெறியைப் போற்றிப் பின் பற்றிய நாடு தமிழ்நாடு!

கி.பி. இரண்டு, மூன்றாம் நூற்றாண்டுகளில் ரோமர்கள் தமிழர்களோடு நெருங்கிய வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். பழைய ரோம் நாண-யங்கள் தமிழ் நாட்டுக் கடற்கரைகளில் ஏராளமாகக் கண்டெடுக்கப் பட்டுள்ளன. தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் கிடைத்தவற்றை விட, ரோமானிய நாணயங்கள் இந்தக் கொங்கு நாட்டுப் பகுதியில்தான் மிகுதியாகக் கிடைத்துள்ளன. ரோமானியப் பேரரசர்களான அகஸ்டஸ், டைபீரியஸ் காலத்து நாணயங்கள் பொள்ளாச்சியிலும்; ஜெர்மானியஸ், கிளாடியஸ் காலத்து நாணயங்கள் வெள்ளளூரிலும்; நீரோ, நெர்வா காலத்து நாணயங்கள் கலைய-முத்தூரிலும் கிடைத்துள்ளன. இதிலிருந்து, கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து, மூன்று, நான்கு நூற்றாண்டுகள் ரோமர்கள் கொங்கு நாட்டுப் பகுதி-யுடன் வாணிகம் செய்து வந்தனர் என்பதை நாம் அறிய முடிகிறது.

கிழக்கே சீனா முதலிய பல நாடுகளுடனும் ஜாவா, சுமத்ரா, மலேயா முதலிய தீவுகளுடனும் தமிழ்நாடு வாணிகம் காரணமாகத் தொடர்பு கொண்டிருந்தது.

தமிழர்களின் கலைத்திறன்கள் உலக அறிஞர்கள் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. இசை, நடன, நாடகக் கலைச் சிறப்புகளைச் சிலப்பதிகார அரங்கேற்றுக் காதை புலப்படுத்துகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் கரிகாற்சோழனால் கட்டப்பட்ட கல்லணை தமிழரின் பொறியியல் கலைத் திறனுக்கு தகுதிமிக்க சான்றாக விளங்குகிறது. கி.பி.6ஆம் நூற்றாண்டு கால மாமல்லபுரச் சிற்பங்கள், தமிழரின் அரிய சிற்பக் கலைச் சின்னங்களாகத் திகழ்கின்றன. அழகோவியமாகத் திகழும் தஞ்சைப் பெரிய கோவில் - 10ஆம் நூற்றாண்டில், கட்டடக் கலையில் தமிழகம் பெற்றிருந்த ஆற்றலுக்குச் சான்றாக விளங்குகிறது.

தமிழ்ச் சமுதாயத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தும் முத்திரைக் குறியீடாக இலங்குவது தமிழ்மொழி. தொன்மையால், இலக்கண இலக்கியங்கள் வாயிலாக வெளிப்படும் வாழ்வியல் நெறிகளால், நீதி நிர்வாக, அறநெறி வழிகளால், இன்னபிறவற்றால், மிக உயர்ந்த மாண்புகளைக் கொண்டுள்ளது செம்மொழியாகிய தமிழ்மொழி !

தமிழ் வளர்த்த மன்னர்களை போற்றி வணங்குகிறேன்

தமிழ்ச் செம்மொழியெனும் தகுதிபெறத்தக்க இலக்கியச் செல்வங்களைப் படைத்தளித்த சங்ககாலப் புலவர் பெருமக்களை - சான்றோர்களை - அவர்கள் அனைவரையும் ஆதரித்து தமிழ் வளர்த்த மன்னர்-களை இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து போற்றி வணங்குகிறேன்!

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கண்ட அறிஞர் டாக்டர் கால்டுவெல்; தமிழ்மொழியின் அருமைகளை அவனிக்கு எடுத்துரைத்த ஜி.யு. போப், வீரமாமுனிவர்; தமிழ் செம்மொழியே என அறிவித்த சூரியநாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற்கலைஞர்; சங்க இலக்கியச் செல்வங்களை ஓலைச்சுவடிகளில் இருந்து மீட்டெடுத்து, அச்சு நூல் வடிவம் பெறச்-செய்த டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர்; அவரைப் போலவே, தமிழ் நூல்களை ஆராய்ந்து, அச்சிட்டு அளித்த சி.வை. தாமோதரம் பிள்ளை; இருபதாம் நூற்றாண்டில் தமிழ் புத்துயிர் பெற உழைத்த தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடி-களார்; தமிழ்த் தென்றல் திரு.வி.க.; நாவலர் வேங்கட-சாமி நாட்டார்; மகாகவி பாரதியார்; புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்; ஈழத்து தனிநாயகம் அடிகளார்; வ.அய்.சுப்ரமணியனார், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தந்த தந்தை பெரியார்; தமிழ் - தமிழர் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பேரறிஞர் அண்ணா போன்ற எண்ணற்ற தமிழ்ச் சான்றோர்களையும் இந்த இனியவேளையில் நினைவு கூர்ந்து, வணங்கிப் போற்றுகிறேன்.

அரசர்களும், புலவர்களும், அறிஞர்களும், கவிஞர்-களும், ஆன்றோர்களும், சான்றோர்களும், பன்னாட்டு ஆய்வாளர்களும் வளர்த்து வாழ்வித்துள்ள அன்னைத் தமிழ்மொழியை, எதிர்வரும் காலத்தில், நாளும் மலரும் அறிவியல் புதுமைகளுக்கேற்ப, வளர்த்துக் கட்டிக் காப்போம்! வருங்காலத் தலை முறைக்கு வற்றாத செல்வமாய் வழங்கிக் களிப்போம்! என இந்த மாநாட்டில் நாம் அனைவரும் உறுதியேற்போம்!

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நாள் முதல் இம்மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிவடை- கின்ற இந்நாள் வரை, அல்லும் பகலும் அயராமல், ஒல்லும் வகையிலெல்லாம் ஓய்வின்றி உழைத்துப் பாடுபட்டுள்ள ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்துப் பாராட்ட வேண்டும்; ஆனால், அதற்கு நேரமும், இடமும் பொருந்தாத நிலையில் அனைவரும் என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து என்னை அணி செய்கிறீர்கள் என்னும் மகிழ்வோடு, உங்கள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த பாராட்டு-களையும், நல்வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.

தமிழக அரசின் சார்பில் நான் விடுத்த அழைப்-பினை ஏற்று, இம்மாநாட்டிற்கு வருகை தந்து, தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்து, தமிழ்மொழியின் மேன்மைக்குப் பங்காற்றியுள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த - தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த அனைத்துத் தமிழ் பேரறிஞர்களுக்கும், குறிப்-பாக, கோவை மாநகர மக்களுக்கும் எனது நன்றி-களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்-கிறேன். இந்த மாநாட்டின் சிறப்புக்குக் காரணமாக இருந்த மத்திய, மாநில அமைச்சர் பெருமக்களையும், அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும், நான் மனமாரப் பாராட்டி நன்றி தெரிவித்துக் கொள்-கிறேன்.

நமது அன்பான அழைப்பினையேற்று, இன்று இங்கே வருகை தந்துள்ள மத்திய அமைச்சர் நண்பர் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கும், நண்பர் ப.சிதம்பரம் அவர்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். மாநாட்டைத் தொடங்கிவைத்து, உரையாற்றிய மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களுக்கும், தொடக்க விழாவில் கலந்து கொண்ட மேதகு தமிழ்-நாடு ஆளுநர் அவர்களுக்கும், எனது இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிவிப்புகள்

தமிழ்மொழி வரலாற்றில் தனி இடம் பெற்றுள்ள இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை யொட்டி, 26.6.2010 அன்று மாநாட்டுப் பந்தலிலே உள்ள தொல்காப்பியர் அரங்கில் பேராசிரியர் ஈழத்து கா.சிவத்தம்பி அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வரங்க அமைப்புக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்-பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும் பொது மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட பல்வேறு கருத்துக்-களின் அடிப்படையிலும்இங்கே நான் சில தீர்-மானங்களையும் அறிவிப்புகளையும் வெளியிட விரும்புகிறேன்:

1. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சங்க காலத்தில் தமிழகத்தைச் சூழல் இயலின் அடிப்-படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நமது முன்னோர் அய்ந்திணை நிலங்களாகப் பிரித்திருந்தனர். ஒவ்வொரு சூழல் இயல்பகுதியும், அதற்குகந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் கொண்டவை. இந்த இயற்கை வளம் - உணவு உத்தர-வா-தத்திற்கும், உடல் நலம் காப்பதற்கும், சித்த மருத்து-வத்திற்கும் பேருதவியாக இருந்து வந்துள்ளன. அய்க்-கிய நாடுகள் மன்றம் 2010ஆம் ஆண்டினை உலக உயிரியல் பன்மை ஆண்டு என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் நினைவாக, தமிழக அரசு சார்பில், அய்ந்திணை நிலவகைகளில் பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள் அமைக்கப்படும். புகழ் பெற்ற வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் எம்.பி அவர்கள் இந்தப் பாரம்பரிய மரபணுப் பூங்காக்களின் அமைப்பாளராக இருப்பதற்கு ஒப்புதல் அளித்து உள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். 2. இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து துன்ப துயரங்களுக்கு ஆளாக்கப்படுவதும், அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல இயலாமல் இன்னமும் முகாம்களில் தங்கவைக்கப்-பட்-டிருப்பதும், முகாம் களிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நல்-வாழ்வும் பாதுகாப்பும் உறுதியளிக்கப்பட்டு முழுமையான அளவுக்கு மறுகுடியமர்த்தம் செய்யப்படாததும், இலங்கை தமிழ் மக்கள் தமது மொழி இன உரிமையை நிலை நாட்டிக் கொள்வதற்கு அவர்கள் நீண்ட நெடுங்காலமாகக் கோரிவரும் அரசியல் தீர்வு காணப்படாததும், அவர்களுக்கு அவ்வப்போது அளிக்-கப்படும் உறுதிமொழிகள் முறையாக நிறைவேற்றப்-படாததும்; கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் திரண்டுள்ள இலட்சோ-பலட்சம் உலகத் தமிழர்களுக்கு வேதனையைத் தரு-கிறது. எனவே, இலங்கைத் தமிழர்களின் அனைத்-துப் பிரச்சினைகளுக்கும் உடனடியாகத் தீர்வு காண்பதற்கேற்ற முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்திய அரசு வலி-யுறுத்திட வேண்டுமென்று; இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

3. மத்தியில் தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட வேண்டு-மென்பது தமிழக மக்களின் நீண்ட காலக் கோரிக்கை ஆகும். இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளையும், மத்திய ஆட்சி மொழிகளாக ஆக்குவதில் தாமதம் ஏற்படுமேயானால், முதல்கட்ட-மாக - செம்மொழியாம் எம் தமிழ்மொழியை மத்திய ஆட்சிமொழியாக ஆக்கவேண்டுமென்று; கோவை-யில் நடைபெறும் இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்-கிறது.

உயர் நீதிமன்றத்தில் தமிழுக்கு பயன்பாட்டு மொழியாக அங்கீகாரம்

4. சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ் பயன்-பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டு-மென்பதற்காக; 2006ஆம் ஆண்டு தமிழக அரசு, சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறை-வேற்றி, மேதகு தமிழக ஆளுநரின் பரிந்துரை-யினையும், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் பரிந்துரையினையும் பெற்று, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. எனவே, தாமதமின்றி உடனடியாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் பயன்பாட்டு மொழியாக அங்கீ-கரிக்கப்பட வேண்டுமென்று; இந்த மாநாடு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

5. சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும், ஆய்வுக்கும் வழங்கப்படுவதைப் போன்று; தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், ஆய்வுக்கும் தேவையான அளவு மானியத் தொகையினை வழங்கிட முன்வர வேண்டு-மென்று இந்த மாநாடு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

6. இதுவரை இந்திய மொழிகள் அனைத்திலும் சேர்ந்து தோராயமாக ஒரு இலட்சம் கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள், குறைந்தது 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்க் கல்-வெட்டுகள் ஆகும். இதனையும், இனிக் காணப்பெற வேண்டிய தமிழ்க் கல்வெட்டுகளின் எண்ணிக்கையை-யும் கருத்தில் கொண்டு; மத்திய அரசு உருவாக்க முடிவு செய்துள்ள இந்திய தேசியக் கல்வெட்டியல் நிறு-வனத்தை தமிழகத்தில் அமைத்திட வேண்டுமென, இந்தியப் பிரதமர் அவர்களுக்கு, ஏற்கனவே நான் எழுதிய கடிதத்தில், எழுப்பியுள்ள கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டுமென்று இந்த மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

7. கடல் கொண்ட பூம்புகார் பகுதியையும், குமரிக் கண்டத்தையும், ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்திடத் தேவையான திட்டம் வகுத்துச் செயல்படுத்திட வேண்டு-மென்று மத்திய அரசை, இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

8. தமிழகத்தின் ஆட்சிமொழியாக - நிருவாக மொழியாகத் தமிழ் ஆக்கப்பட வேண்டும் எனும் நீண்டநாள் கனவு இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை. அதனை நிறைவேற்றிட தமிழக அர-சுக்கு, அலுவலர்களும், பொது மக்களும் தேவை-யான ஒத்துழைப்பு வழங்கிச் செயல்பட வேண்டுமென்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

9. தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்திட, உரிய சட்டம் தமிழக அரசின் சார்பில் இயற்றப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரையில் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்

10. தமிழ் மென்பொருள்களுள் சிறந்த மென்-பொருள் ஒன்றைத் தேர்வு செய்து, அதனை உருவாக்கியவருக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் வைரமணிமொழிகளை வையகத்திற்குத் தந்துள்ள கணியன் பூங்குன்றனார் பெயரில் ஒரு இலட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் விருதும், பாராட்-டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று நான் ஏற்கனவே அறிவித்ததற்கிணங்க, இன்றைய நிகழ்ச்-சியில் அந்த விருதும், ஒரு இலட்ச ரூபாய் பரிசுத் தொகையும் பனேசியோ டிரீம் வீவர்ஸ் சாப்ட்வேர் நிறுவனத்திற்கு இந்த மேடையிலே வழங்கப்-பட்டுள்ளது. இந்தப் பரிசளிப்பு ஆண்டு தோறும் தொடரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

11. தமிழகத்தின் பள்ளி - கல்லூரி - பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களில்; தமிழ்ச் செம்மொழி என்ற தலைப்பு அடுத்த கல்வியாண்டு முதல் இடம் பெறுவதற்கு ஆவன செய்யப்படும் என்ற உறுதியை அளிக்கிறேன். 12. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் இடம் பெற்று மதுரை மாநகரில் தொடங்கப்பெற-வுள்ள தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் பின் வரும் பொறுப்புகளை ஏற்று நிறைவேற்றும்:-

(1) குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்து-வதற்-கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல்; இப்போது இந்த உலகத் தமிழ் மாநாடு பதினைந்து ஆண்டு கால இடைவெளிவிட்டு, இதுவரை நடைபெறாமல் இருந்து இப்போது தான் நடைபெறுகிறது. இனி இப்படிப்பட்ட இடைவெளிகள் ஏற்படாமல் குறிப்பிட்ட கால இடை வெளியில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

(2) திராவிடர் மொழி, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றைத் தொகுத்து நிரந்தரக் கண்காட்சி ஒன்றை அமைத்தல்;

(3) தமிழ்மொழியின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஆவணக் காப்பகம் ஒன்றை உருவாக்கி அதனைப் பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்படும். (4) பல்வேறு தனித்தனித் தீவுகளைப் போலத் தற்போது சிதறுண்டு கிடக்கும் தமிழ் ஆராய்ச்சி உலகத்தை ஒருங்கிணைத்தல்;

(5) மொழி ஆராய்ச்சி, மொழித் தொண்டு போன்ற-வற்றில் தன்னலம் கருதாது செயல்படும் தமிழ் அறிஞர்களை உரியமுறையில் ஆதரித்து, அவர்களை தமிழ்மொழி வளர்ச்சிக்கு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுதல்.

(6) உலகம் முழுவதும் உள்ள தமிழறிஞர்களைப் பற்றிய விவரத்துடன் கையேடு தயாரித்து வெளி-யிடுதல்; உலக அளவில் உள்ள தமிழ் அமைப்பு-களு-டன் தொடர்புகளை மேற்கொள்ளுதல்.

கோவையில் செம்மொழிப் பூங்கா

13. கோவையில் இந்த மாநாட்டின் நினைவு என்றென்றும் நிலைத்திருக்கச் செய்யக்கூடிய செம்மொழிப் பூங்கா அமையவுள்ள காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் களைய ஒரு மேம்பாலம் அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக கோவை மக்களிடையே உள்ளது, நகரின் மிக முக்கிய வணிகப் பகுதியான இங்கு பெரிய பேருந்து நிலையங்களும் இருப்பதால் போக்குவரத்து அதிகமாக உள்ளது, இதனைக் கருத்தில் கொண்டு குறுக்குச் சாலை மற்றும் நூறு அடிச்சாலை ஆகிய சாலைகள் சத்தியமங்கலம் சாலையைக் கடக்கக் கூடிய சந்திப்புக்களில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நீளமுள்ள பெரும் மேம்-பாலம் ஒன்று சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

14. தமிழ்மொழியின் சிறந்த படைப்புகளைப் பிற இந்திய மொழிகளிலும், அய்ரோப்பிய ஆசிய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும்; பிறமொழி இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்திடவும்; அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கணினியியல், மருத்துவம் போன்ற அறிவியல் திறனை வளர்ப்பதற்குத் தேவையான நூல்களை பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்-திடவும் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும்.

15. கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடர்ச்சியாக; தமிழ் வளர்ச்சிக்கென்றே தனியாக தமிழக அரசின் சார்பில் நூறு கோடி ரூபாய் சிறப்பு நிதியம் (திஸீபீ) உருவாக்கப் பட்டு உரிய முறைகளை வகுத்துக் கொண்டு செயல்படுத்தப்படும்.

நான் இங்கே செய்துள்ள இந்த அறிவிப்புகளுக்கு மத்திய அரசினுடைய உதவியும் எதிர்பார்க்கப்-படுகிறது என்பதையும் தெரிவித்து, அதை நிறை-வேற்றித் தர வேண்டும் என்று மத்திய அரசினுடைய நிதி அமைச்சர் அவர்களையும், அதற்கு துணையாக நம்முடைய உள்துறை அமைச்சர் அவர்களையும் பாடுபடவேண்டும், அதை நீங்கள் உங்களுடைய கைதட்டல் மூலமாக அதை தெரிவிக்க வேண்டு-மென்று (அப்போது மாநாட்டில் குழுமியிருந்த லட்சோப லட்சம் மக்கள் கை தட்டினர், மேலும் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், உள் துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கை தட்டினர்) அவர்களே கை தட்டுகிறார்கள். நன்றி.

இந்த மாநாட்டிற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து, பல நாடுகளிலிருந்து, தமிழகத்திலே கூட பல்வேறு மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், குக்-கிராமங்கள் இங்கெல்லாம் இருந்து தமிழை வாழ வைக்க, வலுப்பெற வைக்க, வளர வைக்க, இந்த மாநாட்டை நடத்துகின்ற எங்களுக்கெல்லாம் ஆதரவு தருகின்ற வகையிலே வந்து குவிந்துள்ள இலட்சக்கணக்கான உடன்பிறப்புக்களாகிய உங்களுக்கெல்லாம் நான் என்னுடைய தலைதாழ்ந்த வணக்கத்தையும், என்னுடைய அன்பான நன்றியையும் நெஞ்சை பிளந்து காட்டி தெரிவித்துக் கொள்-கின்றேன்.

நீங்கள் மாநாடு முடிவுற்று இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஊருக்கு திரும்புகின்ற உடன்பிறப்புக்கள் செல்லுகின்ற கார்களெல்லாம் மிக மெதுவாகவும், வேகமின்றியும் அவசரப்படாமலும் மிகுந்த எச்சரிக்-கையோடு ஊர்களுக்கு திரும்ப வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். (கைதட்டல்) நீங்கள் பத்திரமாக ஊர் திரும்பினீர்கள் என்று கேள்விப்-பட்டால்தான் என் மனம் நிம்மதியாக இருக்கும். இல்லையேல், கவலையில்ஆழ்வேன் (பலத்த கைதட்டல்) என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அரசியல் சாயல் இல்லை

அந்த நிலையில் இந்த நான்கைந்து நாட்களாக கோவை மாநகரில் பத்திரிகைகளில் எல்லாம் கூட, பாராட்டி எழுதுகின்ற அளவிற்கும் மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்ற அளவிற்கும் மாநாடு நடைபெற்று, அரசியல் சாயலே இல்லாமல் கட்சி சாயலே இல்லாமல் தமிழர்கள், தமிழுக்காக கூடினார்கள் என்ற அந்த ஒரே குறிக்கோளுக்காகத்தான் இந்த மாநாட்டை நடத்தினோம். அந்த ஒரே குறிக்கோளை இன்றைக்கு நாம் நிறைவேற்றியிருக்கின்றோம். நிறைவேற்றுவதற்கான கால் நட்டிருக்கிறோம் என்ற அந்த உணர்ச்சியை பெற வேண்டும்.

நான் அய்ம்பது நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்து இந்த மாநாடு நடக்கின்ற இடத்தை காண வந்த போது, நானும் நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவர், மற்றும் உள்ள நண்பர்களெல்லாம் அகன்று விரிந்த சாலைகளில் சென்றபோது சில இடங்களிலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரு வண்ணக் கொடிகள் இருந்ததைப் பார்த்து - நாம் நடத்துகின்ற ஒரு பொது மாநாடு _- மொழி மாநாடு -_ நம்முடைய தாயை வணங்குகின்ற ஒரு நிகழ்ச்சி _- அதில் கட்சியின் சாயல் ஒரு குண்டு மணி அளவு இருந்தால்கூட கட்சி மாநாட்டை நடத்தினோம் என்ற களங்கம் நமக்கு ஏற்பட்டுவிடக் கூடும் என்பதற்காகத் தான் மறுநாளே நம்முடைய கழகத்திலே உள்ள தோழர்களுக்கு ஒரு அறிக்கை விடுத்தேன். இது வேண்டுகோள் _- இது கட்டளை அல்ல என்று கனிவோடு நான் விடுத்த அந்த அறிக்கையில் எந்த இடத்திலும் நம்முடைய கொடி ஒன்று கூட இருக்கக்கூடாது. காணும் இடமெல்லாம் தமிழ்க் கொடியைத்தான் காண வேண்டும் _- நம்முடைய மாநாட்டிற்கான அந்த சின்னத்தைத்தான் காண வேண்டும் என்று சொன்னேன்.

வெறும் அறிவிப்புகள் அல்ல!

என்னுடைய வார்த்தைக்கு கட்டுப்பட்டு எவ்வளவு கட்டுப்பாடானது இந்த இயக்கம் என்பதை நிலைநாட்டும் வகையில் இங்கே உள்ள - கோவையிலே உள்ள எல்லா கட்சிகளையும் சேர்ந்த செயல்வீரர்கள் - தமிழ்க் கொடியைத் தவிர, இந்த மாநாட்டுச் சின்னம் அமைந்த கொடியைத் தவிர, வேறு எந்த கொடியும் கட்டாமல் எந்த வண்ணத்தையும் காட்டாமல் நடந்து கொண்ட அந்த பாங்கு , என்னை மிக மிக மகிழ வைக்கின்றது. அதற்காக இன்னொரு முறை என்னுடைய தலைதாழ்ந்த வணக்கத்தை உங்களுக்-கெல்லாம் நான் தெரிவித்துக் கொண்டு, இந்த மாநாடு பூரிப்போடு, புன்னகையோடு, குதூகலத்தோடு, கொட்டு முழக்கத்தோடு தொடங்கி, இன்றைக்கு எழிலுடன் நிறைவுறுகிறது. இதைத் தொடர்ந்து தமிழை வளர்க்க, தமிழுக்கு வலு சேர்க்க, நாமெல்லாம் இந்த மாநாட்டிற்கு வந்தோம், கலைந்தோம் என்றில்லாமல் தொடர்ச்சியாக தொடர் பணிகளைத் தொடங்க வேண்டும்; அதற்கான தீர்மானங்களை இந்த மாநாட்டிலே நீங்கள் சொன்ன கருத்துக்களை தீர்மானங்களாக ஆக்கி நான் வழங்கியிருக்கின்றேன். மேலும் பல அறிவிப்புகளை செய்திருக்கின்றேன். அறிவிப்புகள் நிச்சயமாக நடைமுறைக்கு வரும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு இந்த மாநாட்டில் கலந்துகொண்டு இடர்ப்பாடுகளையெல்லாம் பொருட்படுத்தாமல் மாநாடு நடத்தியவர்களுக்கும் எனக்கும் மகிழ்ச்சியைத் தந்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை உங்கள் கால் மலர்களில் சமர்ப்பித்து இந்த அளவோடு விடைபெற்றுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment