கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, June 2, 2010

கலைஞரின் கோபாலபுரம் வீடு அரசிடம் ஒப்படைப்பு




கடந்த ஆண்டு ஜுலை மாதம் கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடக்க விழா நடந்த போது, கோபாலபுரம் வீட்டை மக்களுக்காக தானமாக வழங்க முதல்வர் கருணாநிதி விருப்பம் தெரிவித்தார். முதல்வர் கருணாநிதி நாளை (வியாழன்) தன் 87 வது பிறந்த தினத்தை கொண்டாட உள்ளார்.

இதையொட்டி கோபாலபுரம் வீட்டை முறைப்படி தானம் செய்ய தீர்மானித்தார். இதற்காக அவர், அன்னை அஞ்சுகம் அறக்கட்டளையை உருவாக்கினார்.

இந்த அறக்கட்டளையிடம் கோபாலபுரம் வீட்டை ஒப்படைக்க இன்று பத்திரப்பதிவு செய்யப்பட்டது. சென்னை கோபாலபுரம் வீட்டை காலை 9.15 மணியளவில் அரசுக்கு முதல்வர் தானமாக வழங்கினார். கோபாலபுரம் இல்லத்தில் நடந்த பத்திரப்பதிவு நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி காலை 9.45 மணிக்கு பத்திரத்தில் கையெழுத்துப் போட்டார்.

முதல்வர் வீட்டை தானம் வழங்கிய போது துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி ஆகியோர் உடன் இருந்தனர். பத்திரப்பதிவு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஹரிஹரன், மூத்த வக்கீல்கள், ஐகோர்ட் வக்கீல்கள் சுதர்சனம், பழனி ஆண்டவர், ஆகியோர் உடன் இருந்தனர்.

கோபாலபுரம் வீடு அஞ்சுகத்தம்மாள் அறக்கட்டளை மூலம் கலைஞர் இலவச மருத்துவமனையாக செயல்படும். அஞ்சுகத்தம்மாள் அறக்கட்டளையில் டி.கே.ரங்கநாதன், ராமநாராயணன், வைரமுத்து, மத்திய அமைச்சர் ராஜா, ஜெகத்ரட்சகன் ஆகியோர் அறங்காவலர்களாக இருக்கின்றனர்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டை மருத்துவமனையாக மாற்றுவதற்கான பத்திரத்தை அறக்கட்டளையிடம் ஒப்படைத்தார் முதல்வர் கருணாநிதி. இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி: நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்த இந்த வீட்டை ஏற்கனவே அறிவித்தபடி இன்று ஒப்படைத்து விட்டீர்கள். உங்கள் உணர்வு எப்படி இருக்கிறது?

பதில்: நான் ஆஸ்திகனாக இருந்தால் ஆத்ம திருப்தி என்று சொல்லி இருப்பேன். நான் ஒரு நாத்திகன் என்பதால் மனநிறைவுடன் இருக்கிறேன்.

கேள்வி: நீங்கள் இப்படியொரு முடிவு எடுத்த போது உங்கள் வீட்டையே தானமாகக் கொடுக்க முன்வந்த போது உங்கள் பிள்ளைகளின் உணர்வுகள் எப்படி இருந்தது?

பதில்:
என் எண்ணத்தை மீறி என்னுடைய பிள்ளைகள் யாரும் நடக்க மாட்டார்கள். இந்தப் பிரச்சினையிலும் அவர்கள் நடக்கவில்லை.

கேள்வி: உங்களுடைய இந்த வீட்டில் எத்தனையோ தலைவர்கள் வந்து உங்களைச் சந்தித்திருக்கிறார்கள். எத்தனையெத்தனையோ நிகழ்வுகள், திருப்பங்கள், முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்தத் தலைவர்கள் சந்திப்பில் முக்கியமானதாக எதைக் கருதுகிறீர்கள்?

பதில்:
எவ்வளவோ பெரிய தலைவர்கள் எல்லாம் வந்திருக்கின்றனர். அதிலே நான் குறிப்பிட்டு சிலரை மட்டும் சொல்வது நல்லதல்ல.

கேள்வி: இந்த வீட்டைப்பற்றி நினைவிலே கொள்ளத்தக்க நிகழ்ச்சி மலரும் நினைவுகள் என்பார்களே அதைப் போல?

பதில்:
நினைவிலே கொள்ளத்தக்க நிகழ்ச்சி இன்றைக்கு நடைபெறுகின்ற நிகழ்ச்சி தான்.

கேள்வி: உங்களுக்குப்பிறகு இங்கே அமையவுள்ள உங்கள் பெயரிலான மருத்துவமனை எவ்வாறு இயங்கும் என்பதைப்பற்றி அறங்காவலர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறீர்களா?

பதில்:
இதைப்பற்றியெல்லாம் நீங்கள் அறக்கட்டளை உறுப்பினர்களை எதிர்காலத்தில் அணுகி அந்த விவரங்களையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி: சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பு தி.மு.க. தலைமையில் மாற்றம் இருக்குமா?


பதில்: மாற்றமும் இருக்காது, ஏமாற்றமும் இருக்காது என்றார்.



No comments:

Post a Comment