கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, June 28, 2010

தமிழை செம்மொழியாக ஏற்கச் செய்த பெருமை கலைஞரையே சாரும்! செம்மொழி மாநாட்டில் நிதியமைச்சர் பேராசிரியர் உரை


கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி ஆய்வரங்க மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டு உரையாற்றிய நிதியமைச்சர் பேராசிரியர் அவர்கள், தமிழை செம்மொழியாக ஏற்கச் செய்த பெருமைக்குரியவர் கலைஞர். செம்மொழியான தமிழுக்கு கிடைத்த வெற்றி. அந்தத் தமிழை தாய் மொழியாகக் கொண்ட சமூகத்திற்கும் கிடைத்த வெற்றி! என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

நிதியமைச்சர் பேராசிரியர் ஆற்றிய உரை வருமாறு:

இந்த மகாநாட்டில் நடைபெறுகின்ற ஆய்வரங்கத்-தினுடைய தொடக்கமாக அமைந்துள்ள இந்த நிகழ்ச்சியில் - இதைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு ஆய்-வறிக்கை திரு. சிவத்தம்பி அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினரால் தயாரிக்கப்பட்டு இங்கே வழங்கப்பட்டிருக்கிறது.

நேற்றைய தினம் மகாநாட்டிற்காக சிறப்பு மலர் ஆளுநர் அவர்களால் வெளியிடப்பட்டு முதல்வர் அவர்களிடத்திலே வழங்கப்பட்டிருக்கிறது. இந்த எழுச்சி மிகுந்த மகாநாட்டில் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்-கின்றன. பல மலர்கள் வண்ண மலர்களாக சிறு சிறு மலர்களாக எழுத்து ஓவியங்களாக நம்முடைய இனத்தை பெருமைபடுத்தும் முயற்சியாக உருவாகியிருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு தனிச்சிறப்பு மிகுந்த மாநாடாக இந்த மாநாடு விளங்குவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்த மாநாடு நம்முடைய தாய்மொழியான தமிழுக்கு செய்கிற சிறப்புக்கு அடையாளமான மாநாடு. மனித வாழ்வில் தாய்மொழியை விட ஆழமான இடத்தைப் பெறக் கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது. மனிதன் என்று சொல்கிறபோதே அவனவன் தாய்-மொழியோடு கலந்தவனாகிறான். தாய்மொழியோடு கலக்காதவன் தாய் மொழியின் அடையாளத்தை இழக்கிறான். இந்தத் தாய்மொழி நம்முடைய தாய்மொழி. இந்த தாய் மொழியிடத்திலே பற்றுடைய பெருமக்கள் செய்யுட்கள், பாடல்கள் அவற்றை-யெல்லாம் தொகுத்து எழுதிப் பார்ப்பீர்களேயானால் அது மிக விரிவுடையதாகும்.

இந்த தமிழ் அவ்வளவு இனிமையுடையது. அமுதத் தமிழ், இன்பத் தமிழ் என்றெல்லாம் பாராட்டப்படும் தமிழுக்கு அதன் ஏற்றத்தை உணர்த்தும் செம்மொழி மாநாடாக இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நேற்றைய தினம் குடியரசுத் தலைவர் அவர்கள் உரையாற்றுகிறபோது சொன்னதைப்போல இந்த மகாநாடு, முதல்வர் கலைஞர் அவர்களுடைய திட்டத்தின்படி பெரிய முயற்சியினாலே அவருடைய திறமையினாலே நடைபெறுகிற ஒரு வெற்றி மாநாடு என்ற கருத்தை குடியரசுத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டு, இந்த மாநாட்டுக்காக அமைக்கப்பட்டி-ருக்கிற இந்த எழுச்சிப்பணி, தமிழ்ப்பணி, கலைஞர் அவர்களுடைய அற்புதமான திறமையினாலே உருவான ஒன்று என்பதையும் அவர் எடுத்துக்காட்டி பாராட்டினார். அப்போது அவர்கள் சொல்கிற-போது, பல ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து 19 ஆண்டுகளுக்கு மேலாக முதல்வர் பொறுப்பை ஏற்று நிருவகித்து அப்படிப்பட்ட பணி-களுக்கு இடையில் தமிழ் தொடர்பான பல்வேறு துறைகளிலும் ஆற்றல் மிக்க ஒருவராக பல திறம்வாய்ந்த ஓர் தமிழ் அறிஞராக கலைஞர் அவர்கள் விளங்குவது மிகப்பெரிய பாராட்டுக்-குரியது என்று குறிப்பிட்டார்கள். அதை நான் இங்கே சொல்வதற்குக் காரணம் தேசியக் கவி பாரதியாரைப் பற்றி புரட்சிக்கவிஞர் சொன்னார். பாரதியால் தமிழ் தகுதி பெற்றதும், தமிழால் பாரதி தகுதி பெற்றதும் என்று சொன்னார். அதைப்போல தமிழ் செம்மொழியால் கலைஞர் தகுதி பெற்றதும், கலைஞடைய திறனால் தமிழ் செம்மொழி பெற்றதும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உள்ளது. தமிழுக்கு செம்மொழி தகுதி இயற்கை என்று சொன்-னா-லும்கூட அது அதனுடைய வளத்தோடு ஒட்டி-யது என்றாலும் கூட அதற்கு திருக்குறள் ஒன்றே போதும் என்று வாதிட்டாலும்கூட, தங்கத் தமிழ் செப்பாத செம்மொழியா என்று கேட்டாலும்கூட, தொல் காப்பியம் இருக்கிறபோது அதை மிஞ்சு-வதற்கு வேறு என்ன இருக்கிறது என்று சொன்னா-லும்கூட, அவற்றையெல்லாம் மிஞ்சி தமிழை செம்மொழி என்று ஏற்காத உலகம் இருந்தது. ஏற்க மறுத்த நிலைகூட இருந்தது. அதை எற்கச் செய்த பெருமை கலைஞருடையது. அவருடைய தொண்டு, திறமை, ஆற்றல்தான். இன்னும் சொல்லப்போனால் அறிஞர் அண்ணா கலைஞர் அவர்களிடத்திலே ஒப்-படைத்த ஆற்றல், இந்த இயக்கத்தின் மூலமாக அவர் பெற்ற உணர்வு, அவரே தனது தலைமை உரையிலே சொன்னதைப் போல இளமையிலே இருந்து அவர் பெற்ற பயிற்சி, ஊக்கம், ஆர்வம்தான் தமிழுக்கு அந்த ஏற்றத்தைத் தந்திருக்கிறது. தமிழ் இந்த வாழ்வைப் பெற்றிருக்கிறது.

நிறைவான வெற்றி

நம்முடைய வா.செ. குழந்தைசாமி அவர்கள் பேசுகிற போது சொன்னார்கள். ஒரு நிறைவான வெற்றி கிடைத்திருக்கிறது என்று சொன்னார்கள். இன்னும் தொடர வேண்டிய போராட்டம் இருக்கிறது என்றும் சொன்னார்கள். நமக்கு வெற்றி; ஆனால், நம்முடைய வெற்றியை நிலை நாட்ட விடுவார்களா? என்பது வேறு பல எண்ணங்கள் காரணமாக குறுக்கீடு இருக்கிறது. உண்மையாகவே தமிழ் மொழி செம்மொழி என்ற பெயரை அது இயற்கையிலேயே பெற்றது.

அமிழ்தமிழ்து என்று உரைத்தாலே அதில் தமிழ் என்ற உச்சரிப்பு வருமென்று கவிஞர்கள் சொன்-னார்கள். தமிழ்தான் அமிழ்து, அமிழ்துதான் தமிழ். தமிழுக்கு அமிழ்தென்று பேர், இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றெல்லாம் பாடினார்கள். அந்தத் தமிழ் தொடக்க காலத்திலேயிருந்து தமிழகத்திலே செந்தமிழ் என்றும் கொடுந்தமிழ் என்றும் விளங்-கியது. என்ன காரணத்தாலே என்றால் இலக்கணத்-தோடு நெருங்கி வருகிற நடை ஒத்துப்போகிற நடை. ஒரு பொது நடை அது செந்தமிழ் நடை, ஒத்துப்-போகாத நடை கொடுந்தமிழ் நடை என்று பிரிக்கப்-பட்டது. ஒரு வகையிலே வட்டார மொழிகளாக வழங்குகிற மொழி களெல்லாம் கொடுந்தமிழாக அந்தக் காலத்திலேயே சித்திரிக்கப்பட்டது.

ஆனால், இலக்கியத்தோடு தொடர்புடைய அந்த மொழி செந்தமிழாக ஏற்கப்பட்டது. ஆனால் செந்தமிழாக ஏற்கப்பட்டாலும் இந்திய மொழி-களோடு ஒரு மொழியாக எண்ணப்பட்ட காரணத்-தால் பரிதிமாற் கலைஞர் விரும்பியதற்கு மாறாக இந்திய மொழிகளிலே ஒன்று தமிழ்; ஆகவே இது ஒரு வட்டார மொழி என்று கருதப்பட்ட காரணத்-தால் செம்மொழிச் சிறப்பு செந்தமிழுக்குக் கிடைக்-க-வில்லை.

இந்த கலைஞர் முடித்து வைக்கிற...

எனவேதான், தமிழ்மொழியினுடைய உயர்வுக்காக நடைபெறுகிற போராட்டத்தில் பரிதிமாற் கலைஞர் தொடங்கி இந்த கலைஞர் முடித்து வைக்கிற இந்த போராட்டத்தில் தமிழ் செம்மொழி என்பதை மத்திய அரசு ஏற்று அறிவித்து உலகமெல்லாம் வரவேற்கக் கூடிய நிலை இருந்தாலும்கூட இந்த செம்மொழி தமிழ். தமிழர்களுக்கெல்லாம் வாழ்வளிக்கின்ற மொழி. செம்மொழி என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலை நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி அளித்-தாலும்கூட ; இது வெறும் மொழியினுடைய வெற்றி-யல்ல. தமிழ் மொழி யினுடைய தனி வெற்றி அல்ல. தமிழ் மொழியை தாய் மொழியாகப் பெற்ற சமூ-கத்தினுடைய வெற்றி.

தமிழ்மொழியே தாழ்ந்த மொழி. அதைப் பேசுகிற மக்கள் தாழ்ந்தவர்கள் என்று எண்ணப்பட்ட காலம் ஒன்று இருந்த காரணத்தால்தான். மேல் நாட்டு அறிஞர் ஜி.யு.போப் சொன்னார், நாலடியாரும், திருவாசகமும் திருக்குறளும் போல அறநெறி உரைக்கின்ற நூல்களை தன்னுடைய தாய்மொழியாக பெற்றிருக்கிற தமிழ்நாட்டு மக்கள் எவ்வகையிலேயும் பிற மொழியைவிட தங்களுடைய தாய்மொழி தமிழ் என்று எண்ணி தலை குனிந்து நடக்கத் தேவை-யில்லை. பிற மொழிகளை உயர்வென்று கருதி தமிழை தாழ்வென்று கருதி தலை குனிந்து நடவாதீர்கள் என்று ஜி.யு.போப் நம்மவர்களுக்கு அறிவுரை சொல்-லக்கூடிய அளவிற்கு அந்த தமிழ் அதைப் பேசுகிற மக்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தார்கள்.

நான் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். உயர்ந்த கருத்துக்களின் உறைவிடம் தமிழ். ஞான முதல் மொழி தமிழ்மொழி. மிகச்சிறந்த கருத்துக்-களுக்கு இருப்பிடமான மொழி தமிழ்மொழி. அந்த உயர்ந்த கருத்துக்கள் உலகத்திற்கு அறிய அறியத்தான் திருக்குறளை அறிந்து தான் தமிழை அறிந்தார்கள். தொல் காப்பியத்தை அறிந்துதான் தமிழின் தொன்-மையை ஏற்றார்கள். மேல் நாட்டு அறிஞர்கள் எல்லாம் ஏற்றுக் கொள்வதற்கு அந்த இலக்கியங்கள் துணை நின்றன. அந்த இலக்கியங்கள் வழியாக தமிழனு-டைய பெருமை உலகத்திலே நிலை நாட்டப்பட்டது.

அது ஞான முதல் மொழி. இந்திய மொழி-களி-லேயே முதன்மையான மொழி என்பதைவிட தொன்மை வளம் பெற்ற மொழி தனித்து இயங்கும் ஆற்றல் பெற்ற மொழி. இலக்கிய வளம் பெற்ற மொழி, இயல், இசை, கூத்து என மூன்றாக வளர்ந்த மொழி. இன்றும் வாழ்கிற மொழி. இலக்கியச் செம்-மையுடைய மொழி, ஊடயளளஇஉயட டுயபேரயபந என்பதெல்லாம் என்றோ வாழ்ந்த மொழியாக இருக்க வேண்டும் என்ற ஒரு தவறான கருத்து தமிழ் மொழியை புறக்கணிக்கக்கூட காரணமாக இருந்தது. அதைப் பரிதிமாற் கலைஞர் சுட்டிக் காட்டுகிறார். இந்தத் தமிழ் வாழ்கிறது என்ற காரணத்தால், பேசுகிறோம் என்ற காரணத்தால் - இலக்கிய மொழி-யாக classical language ஆக ஏற்கப்படக்-கூடாதா? என்ற கேள்வியை அவர் கேட்கிறார். ஆகவே அப்படிப்பட்ட மொழி நம்முடைய தாய்மொழி. அதிலே உயர்ந்த கருத்துக்கள் எல்லாம் இடம் பெற்றிருக்கின்றன.

நிறைவாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன். ஒரு பாடல் நேற்றும்கூட இங்கே அறிஞர்களாலே மகாநாட்டிலே எடுத்துச் சொல்லப்பட்டது.

உண்டால் அம்மஇவ் உலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்

தமியர் உண்டலும் இலரே முனிவிலர்

துஞ்சலும் இவர்பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின் உயிரும் கொடுக்குவர் பழிஎனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்

அன்ன மாட்சி அனைய ராகித்

தமக்கென முயலா நோன்தாள்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே

தமக்கென்று வாழாமல் சுயநல நோக்கத்தோடு வாழாமல் பிறக்கென்று வாழ்கிறவர்கள்; இந்திரனு-டைய அமிழ்தம் கிடைத்தால்கூட தான் மட்டுமே உண்டு மகிழாமல் பலரோடும் பகுத்து உண்கிற மனப்பக்குவம் பெற்றவர்கள். பழி என்று சொன்னால் உலகமே கிடைத்தாலும் ஏற்காதவர்கள், புகழ் என்றால் உயிரும் தருபவர்கள் என்று சொல்லப்-பட்டுள்ளது

இன்னொரு பாடல் யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று இந்த இரண்டு பாடல்களையும் இணைத்துப் பார்ப்பீர்களேயானால் எப்படிப்பட்ட உச்சமான நிலையில் தமிழன் வாழ்ந்தான் பொது நோக்கத்தில் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற பரந்த நோக்கத்தைக் கொண்டவன். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்தான். தீதும் நன்றும் பிறர்தர வாராது என்று கருதியவன். இப்படி உயர்ந்த எண்ணங்கள் மலர்கிற சோலையாக நம்முடைய செம்மொழி தமிழ் விளங்குகிறது. தொடர்ந்து விளங்கும் வளரும்; வாழும். வாழ்த்துவோம்! வணக்கம்! இவ்வாறு பேராசிரியர் உரையாற்றினார்.

No comments:

Post a Comment