



தி.மு.க. உறுப்பினர்கள் 12.09.2011 அன்று சட்டசபைக்கு வந்தனர். சபாநாயகர் திருக்குறள் வாசித்து கூட்டத்தை தொடங்கியதும் அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். 4வது நாளாக தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்த பிறகு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீண்டும் பேச வாய்ப்பு கேட்டார். அதற்கு சபாநாயகர் ஜெயக்குமார் அனுமதி வழங்கவில்லை. இதனால் அவர் வெளி நடப்பு செய்தார்.
No comments:
Post a Comment