கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, January 24, 2012

தளபதியே உன்னால் காஞ்சி சிலிர்த்தது மாணவர் இனம் விழித்தது


(கழக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் செங்கல்பட்டில் மாணவ - மாணவியர்களுக்கு நடை பெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதை ஒப்பித்தல் இறுதிப் போட்டிகளில் தளபதி பங்கேற்று சிறப்பித்த நிகழ்ச்சியில் நடந்த சிறப்புகள்! )

பெண்கள் புரட்சிகொண்டு பெரியாருக்கு
பட்டம் தந்த செங்கல்பட்டில்!

மாணவரினம் எழுச்சி கொண்ட கொள்கையை
பறைகொட்டியது தளபதி ஏற்பாட்டில்!

இன உணர்வு விதைத்த நிகழ்ச்சி
இளைஞர் அணியின் புதிய எழுச்சி!

இன நன்மைக்கு தளபதியின் தேடல்
இதோ மாணவரிடம் நேரடி நாடல்!

காட்டாறால் மாணவர் இனம் போகாமல்
அணைகட்டி வயலுக்கு விடும் பணி!

கொடி கொடுத்து கொள்கைப் பதித்து
இயக்கத்திற்கு செய்தார் அணி!

அண்ணாபிறந்த காஞ்சி மாவட்டத்தில்
மகிழ்ச்சியில் குடும்பத்தோடு குவிந்தனர்!

விசிலடிக்கும் கூட்டமாய் போகாமல்
விஷயமுள்ள கூட்டமாய் ஆக்கினார்!

தமிழர் பண்பாட்டு பெருமையை உலகம் படிக்க
எழுதவந்த புதுகட்டுரையாளர்கள்

பண்பாட்டு காவலர் கலைஞர் பற்றி
உலகம் பேச பேசவந்த புது உரையாளர்கள்!

அறிஞர் பற்றிய கலைஞரின் கவிதையை
ஒப்பித்தல் செய்த அறிவு நெறியாளர்கள்!

உடல்கொடை தந்த படைதலைவனை
மாணவர்இனமே உயிரில் பிண்ணுங்கள்!

மாணவரினம் மேடையில் விதைத்தனர் சொல்லை
அட! அட! வான்மழையும் நிகரில்லை!

இதோ! மாணவரினத்தின் பேச்சுதுளிகள்
இல்லை சரித்திரம் செதுக்கிய சிலைகள்

மண்ணை தவிர்த்து நதிநகராது
கலைஞரை தவிர்த்து அரசியல் இருக்காது!

தமிழ்நாட்டில் தலைவர்கள் பலர் உண்டு
ஆனால் கலைஞரை போல யார் உண்டு!

கலைஞர் கருப்பு சட்டைகாரன்
மானம் உள்ள சுயமரியாதைக்காரன்!

அனைத்து ஜாதிக்காரனும் அர்ச்சகர்
ஆகலாம் என சட்டம் இயற்றினார்!

தந்தை பெரியாரின் இதயத்திலிருந்த முள்ளை
கலைஞரே அகற்றினார்!

வானில்தோன்றியது துருவ நட்சத்திரம்
அண்ணா எங்களை வாழவைத்த சரித்திரம்!

காமராசர் ஆகட்டும் பார்க்கலாம் என்பார்
கலைஞரோ ஆயிற்று பார்த்தாயா என்பார்!

கலைஞர் அதிகம் படிக்கவில்லை
ஆனால் கலைஞரை உலகம் படிக்கிறது!

ஒரு மாணவன் கல்விக்கு உதவிகேட்டு
கருணை மனு தளபதியிடம் கொடுத்தான்!

தளபதி கல்வி செலவை ஏற்பதாய்
அறிவித்ததும் கண்ணீர் வடித்தான்!

ஒரு மாணவன் தன் ஆசிரியர் பெற்றோரை
சிறப்பு செய்ய போட்டான் அன்பு வட்டம்!

ஒரு மாணவன் தன் தாய்தந்தைக்கு தளபதி
நடத்திய மணவிழா புகைப்படம் காட்டினான்!

மாற்று திறனாளி புதுவை தம்பி நம்
தத்துவத்தை சலங்கைக்கட்டி ஆட்டினான்!

போட்டியில் வெல்லாத புதுவை தம்பிக்கு
பரிசு தந்தார் தளபதி தன் பணத்தில்!

கலைஞரை போல பாசம் காட்டுவதில்
உயர்ந்தார் அனைவர் உள்ளத்தில்!

மாணவரோடு மனதை உலவவிட்டு
தளபதியும் மாணவர் ஆனார்!

அறிமுகம் இல்லாத அவர்களிடம்
நலம்கேட்டு கலந்து நண்பன் ஆனார்!

மாணவரின் பெற்றோர்கள் அனைவருக்கும்
உடன்பிறந்த அண்ணன் ஆனார்!

மாணவ பூக்கள் கூடி தளபதியை
பூங்காவாக்கி மகிழ்ந்தனர்!

மாணவியை பெற்ற தாயும் தளபதியை
தாயாய் கண்டு நெகிழ்ந்தனர்.

ஈரோடு இறைவன்

No comments:

Post a Comment