கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 26, 2010

நெல்லை - திருச்சி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் கருணாநிதி கலந்துரையாடல்


சட்டப்பேரவை தேர்தலை முன் னிட்டு, மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் கருணாநிதி கலந்துரையாடல் நடத்தி வருகிறார். அதன்படி, திருநெல்வேலி மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல், கலைஞர் அரங்கில் 22.12.2010 அன்று நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல் வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பரிதி இளம்வழுதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன், அமைச்சர்கள் மைதீன்கான், பூங் கோதை, தங்கவேலு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மாலை ராஜா, அப்பாவு மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் கூட்டம் நடந்தது. தேர்தல் பணிகள் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

முன்னதாக, முதல்வர் கருணாநிதியிடம் வெங்காய விலை உயர்வு பற்றி நிருபர்கள் கேட்டதற்கு ‘பெரியாரிடம் கேளுங்கள்’ என்றார். காங்கிரஸ்& அதிமுக உறவு ஏற்படும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு ‘அது பற்றி எனக்கு தெரியாது’ என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

திருச்சி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன், முதல்வர் கருணாநிதி 21.12.2010 அன்று கலந்துரையாடல் நடத்தினார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, தேர்தலுக்கு தயாராகும் நடவடிக்கையாக, முதல்வர் கருணாநிதி மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார்.
திருச்சி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் 21.12.2010 அன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை கலைஞர் அரங்கில் இந்த கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பரிதி இளம்வழுதி, நேரு, என். செல்வராஜ், மத்திய அமைச்சர் நெப்போலியன், திமுக துணை பொதுச்செயலாளர் சற்குணபாண்டியன்,
அமைப்பு செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், பெ.வீ.கல்யாணசுந்தரம், திருச்சி சிவா எம்.பி., முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி, எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், ராணி, சவுந்தரபாண்டியன், திருச்சி துணை மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment