கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, January 30, 2011

அரசுத்துறை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர்களுக்கு சம்பள உயர்வு: கலைஞர்



இளநிலை உதவியாளர், தட்டச்சர், உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3, துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோருக்கு சம்பள உயர்வு வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சில கோரிக்கைகளை முன்வைத்து பிப்ரவரி 1 ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இதுகுறித்து முதல் அமைச்சர் கருணாநிதி அறிவுரையின் பேரில் அலுவலர் சங்க பிரதிநிதிகளுடன் கடந்த 28 மற்றும் 29 ந் தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.


அதன்படி, முதல் அமைச்சர் கருணாநிதி உத்தரவின் பேரில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகியோருக்கான சம்பள விகிதம் மாற்றியமைக்கப்பட்டு அவர்களின் தர ஊதியத்தை தற்போது வழங்கப்படும் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 400 ஆக உயர்த்தியும், உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 ஆகியோரின் ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்பட்டு தற்போது வழங்கப்படும் தர ஊதியத்தை ரூ.2 ஆயிரத்து 400 ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 800 ஆக உயர்த்தியும், துணை வட்டாட்சியர்களுக்கு மாதம் ரூ.500 தனி ஊதியமும், வட்டாட்சியர்களுக்கு மாதம் ரூ.1,000 தனி ஊதியமும் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த திருத்தப்பட்ட ஊதிய உயர்வு பிப்ரவரி 1 ந் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்படும்.


இதுதவிர 11 சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த வட்டங்களில் வரவேற்பு பணிக்காக ஒரு துணை வட்டாட்சியர் நிலையில் வரவேற்பு அலுவலர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும், வருவாய் ஆய்வாளர்களுக்கு ஒரு அலுவலக உதவியாளர் பணியிடம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் அரசால் ஏற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் முதல் அமைச்சர் கருணாநிதியை நேற்று தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், தங்களது போராட்டத்தையும் கைவிடுவதாக அறிவித்தனர்.


முதல் அமைச்சர் கருணாநிதியை, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் அதன் மாநிலத் தலைவர் டிழூக் பொன்னுராஜ், பொதுச்செயலாளர் கே.முருகன், பொருளாளர் ஜி.இளங்கோவன், துணைத்தலைவர்கள் கே.சி.ராம்குமார், என்.சுந்தரமூர்த்தி, எஸ்.சிவக்குமார், கே.சுந்தரபாண்டியன், மாநிலச் செயலாளர்கள் ஏ.கில்பாட்ராஜ், த.சிவஜோதி, என்.தட்சிணாமூர்த்தி, பொ.ஆறுமுகம், என்.ஜீவகாருண்யம் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.


இந்த நிகழ்வின்போது தலைமைச்செயலாளர் எஸ்.மாலதி, நிதித்துறை முதன்மைச்செயலாளர் க. சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் ந.சுந்தரதேவன், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் கே.என்.வெங்கட்ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


மு.க.அழகிரி மணி விழா : துணை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து


மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மணி விழாவை முன்னிட்டு அவருக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சகோதரி செல்வி செல்வம் நேரில் வாழ்த்தினர்.
இன்று (30.01.2011) மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி 60வது பிறந்த நாள் மணி விழாவாகும். அவரை வாழ்த்துவதற்காக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது சகோதரி செல்வி செல்வம் ஆகியோர் 29.01.2011 அன்று மதியம் விமானத்தில் மதுரை வந்தனர். இங்கு சத்திய சாயி நகரிலுள்ள அவரது இல்லத்திற்கு சென்ற னர்.
மு.க.அழகிரி, காந்தி அழகிரிக்கு பூங்கொத்து கொடுத்து மணி விழா வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் தளபதி, மூர்த்தி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி, தணிக்கை குழு உறுப்பினர் குழந்தைவேலு உடன் இருந்தனர்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு மு.க.ஸ்டாலினும், செல்வி செல்வமும் புறப்பட்டனர். மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறும்போது “அண்ணன் மு.க.அழ கிரி நாளை மணி விழா நாளில் வெளியூர் செல் வதாக தெரிவித்துள் ளார். எனவே இன்று வந்து வாழ்த்தினோம்“ என் றார்.
அ.தி..மு.க.வில் சேர்ந்த சேகர்பாபு குறித்து கேட்டதற்கு " அவர் சிறந்த தொண்டர், நல்ல உழைப்பாளி. அவர் தி.மு.க.வில் சேர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வரும் வரவேற்றுள்ளார்“ என பதிலளித்தார்.

வெற்றிகொண்டான் மறைவு: கலைஞர் இரங்கல்


தி.மு.க. கட்சியின் மூத்த பேச்சாளர் வெற்றிகொண்டான் மறைவினால் வருந்தி, திமுக தலைவரும், முதல்வமான கருணாநிதி எழுதிய இரங்கல் கவிதை வருமாறு:


காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்து

கழகக் குரலை கர்ச்சித்துக் கொண்டிருந்த

சிங்கம் ஒன்று தலை சாய்ந்து விட்டது

ஆம்; நமது வெற்றிகொண்டானை

சாவு பற்றிக் கொண்டு விட்டது

தம்பீ வெற்றி,

உன்னைத் தோள் மீது

தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதற்கு

தொகை தொகையாய் தோழர்கள் இருந்தாலும்

அவர்களையெல்லாம் விட்டுப் பிரிந்து

எட்டாத தொலைவுக்கு ஏனய்யா சென்றுவிட்டாய்?

அன்பைப் பிழிந்து கொடுக்க

உன் அண்ணன் நானிருக்க

ஆயிரம் ஆயிரம் என் தம்பிமார்கள்

உன் வருகைக்காக காத்திருக்க

வண்ணமிகு சொல்லடுக்கால்

சுயமரியாதை எண்ணங்களை

தொகுத்தளித்து தோகை மயிலாக ஆடத் தொடங்கி

தொகை தொகையாய் பகை வீழ்த்தும்

போர் வாட்களாக நீயொருவன் மின்னிடுவாயே

சொல்லழகைக் கணையாக பூட்டி

மேடையில் நிமிர்ந்து நிற்கும்

உன் வில்லழகைக் கண்டு

நான் வியந்து போற்றிய

காலமெல்லாம் இனி வீண்தானோ?

வார்த்தை சித்தனே

வான் நடுங்க முழக்கமிடும் ஆண் சிங்கமே

எம் உயிரெல்லாம் நடுநடுங்க

எப்படித்தான் அடங்கிற்றோ உன் உயிர்?

நீ மறைந்துவிட்டதாக சொல்கிறார்கள்

நான் நம்பவில்லை

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம்

உன் எக்காளக் குரல்

எதிரொலித்துக் கொண்டிருப்பதை கேட்கும்போது

மறைந்துவிட்டாய் நீ என்பது

நம்ப முடியாத வார்த்தைக் கோவை

இருக்கின்றாய் நீ என்றைக்கும் கழகத்தோடு

அண்ணாவோடு

அவர்தம் தம்பியராம் எங்களோடு


இவ்வாறு முதல் அமைச்சர் கருணாநிதி கவிதை எழுதியுள்ளார்.

Saturday, January 29, 2011

திமுக முன்னணி பேச்சாளர் 'அலைகடல் ' வெற்றிகொண்டான் மரணம்




திராவிட முன்னேற்றக் கழக முன்னணி பேச்சாளர் வெற்றிகொண்டான் 29.01.2011 அன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக ‌சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி 29.01.2011அன்று காலமானார். திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


தன்னுடைய கொள்கைகளில் உறுதியாக இருந்தவர் வெற்றிகொண்டான். தனக்காகவும், தன்னுடைய குடும்பத்தினரின் தேவைகளுக்காகவும் கட்சி தலைமையையும், அமைச்சர்களையும் நெருங்காதவர். தான் கலந்துகொண்டு பேசும் கூட்டங்களில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் பேச்சாற்றலால் ஈர்ப்பவர்.


புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி - சித்தியம்மாள் ஆகிய தம்பதிகளுக்கு பிறந்தவர் வெற்றிகொண்டான். இவருக்கு ஒரு அக்காவும், தங்கையும் உள்ளனர்.


ஜெயங்கொண்டத்தில் காபி தூள் வியாபாரம் செய்து வந்த வெற்றி கொண்டான், ராஜாமணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வெற்றி கொண்டானுக்கு ராணி என்கிற மகளும், உதய சூரியன், கருணாநிதி என இரண்டு மகன்களும் உள்ளனர்.

‡.˜.L. RÛXYŸ L£QÖŒ‡›Á R–² ÚTor• CYÛW ÙT¡‰• LYŸ‹R‰. ARÁ «Û[YÖL ‡.˜.L.«¥ ÚNŸ‹‰ T‚VÖ¼½]ÖŸ.

UeLºeLÖL ‡.˜.L. SP†‡V ÚTÖWÖyPjL¸¥ TjhÙLÖ�| TX˜Û\ ÛL‰ ÙNšV�Ty| pÛ\›¥ AÛPeL�TyPÖŸ. p\‹R ÚToNÖ[WÖ] CYŸ, J£˜Û\ ‡£Y�QÖUÛX›¥ SÛPÙT¼\ ‡.˜.L. UÖSÖyz¥ ÚTpVÛR ÚLyP ˜R¥-AÛUoNŸ L£QÖŒ‡ RU‰ ŒÛ\° EÛW›¥, ``ÙY¼½ ÙLÖ�PÖÁ GÁÛ]� ÚTopÚX ÙY¼½ ÙLÖ�PÖÁ'' GÁ¿ “LZÖW• syz]ÖŸ. ‡.˜.L.«¼LÖL AVWÖ‰ T‚VÖ¼½ Y‹R ÙY¼½ÙLÖ�PÖÛ] TÖWÖy|• YÛL›¥ ‡.˜.L. 1992-• B�| SP†‡V ˜�ÙT£• «ZÖ«¥ RÛXÛUe LZL†‡Á NÖŸ‘¥ LÛXOŸ «£‡Û] ˜R¥-AÛUoNŸ L£QÖŒ‡ YZjf]ÖŸ.

வெற்றிகொண்டான் மறைவு குறித்து தகவலறிந்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சர் அன்பழகன் மற்றும் அமைச்சர்கள் விரைந்து சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.


பின்னர் அவரது உடல், மருத்துவமனையிலிருந்து அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

30.01.2011 அன்று அதிகாலை 2 மணிக்கு ஜெயங்கொண்டம் ஆண்டான் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.


துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்,
30.01.2011 அன்று காலை ஜெயங்கொண்டம் வந்தார். அவர் வெற்றி கொண்டான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, சிவசங்கர், ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்கள்.

30.01.2011 அன்று மாலை 4 மணிக்கு வெற்றிகொண்டான் இறுதி ஊர்வலத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் திரளாக கலந்துகொண்டனர். பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.


இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டு நடைமுறையைக் கண்காணித்திட குழு! - முதல்வர் கலைஞர் ஆணை


இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டு நடைமுறையைக் கண்காணித்திட தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து, முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இஸ்லாமிய சமுதாயத்தினரின் முன்னேற்றம் கருதி அவர்களுக்கு 3.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி முதலமைச்சர் கலைஞர் 15.9.2007 அன்று ஆணையிட்டு, நடைமுறைப்படுத்திவரும் இடஒதுக்கீட்டின்படி, இஸ்லாமிய சமுதாயத்தினர் தமிழக அரசின் கல்வி நிறுவனங்களிலும், வேலைவாய்ப்புகளிலும் உரிய இடங்களைப் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர்.


இந்த 3.5 சதவீத இடஒதுக்கீட்டின் செயல்பாட்டினைத் தொடர்ந்து கண்காணித்து, ஆய்வு செய்வதற்காகவும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதற்காகவும், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அவர்களைத் தலைவராகவும், பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் சிறுபான்மையினர் நலத்துறைச் செயலாளர் அவர்களைச் செயல் உறுப்பினராகவும், உள்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர், ஆசிரியர் தேர்வாணையக் குழுத் தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர், சிறுபான்மையினர் நல ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு ஒன்றை அமைத்து முதலமைச்சர் கலைஞர் இன்று (29.1.2011) ஆணையிட்டுள்ளார்.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


திமுகவில் இணைந்தார் எம்எல்ஏ சேகர்பாபு




முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில், எம்எல்ஏ சேகர்பாபு சனிக்கிழமை (29.01.2011) காலை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். இந்த சந்திப்பின்போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக வடசென்னை மாவட்டச் செயலாளர் வி.எஸ்.பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

"கலைஞர் சுட்டிக் காட்டும் திசையில் எட்டிப் பாயும் சிப்பாய்களில் இனி நானும் ஒருவன் " - பி.கே. சேகர்பாபு :

அ.இ.அ.தி.மு.க. விலி ருந்து விலகி, திமுகவில் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டியில்,

தி.மு.க தலைவர் கலைஞர் அவர்களின் அணுகுமுறையின் சிறப் பையும், அதே நேரத்தில் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளரின் அணுகு முறை குறித்தும் கூறியுள் ளார்.

பத்திரிகையாளர்: அ.தி.மு.க. வினுடைய ஸ்டார் எம்.எல்.ஏ வாக இருந்த நீங்கள்-திறம் படச் செயல்பட்ட ஒரு எம்.எல்.ஏ.வாக இருந்த நீங்கள்- அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா வினுடைய நம்பிக்கைக் குரியவராக இருந்த நீங்கள்- அந்தக் கட்சியி லிருந்து விலகி வந்து தி.மு.கழகத்தில் இணை வதற்கான காரணம் என்ன?

பி.கே.சேகர் பாபு: நான் நம்பியிருந்த தலைமை- என்மீது நம்பிக்கையை இழந்துவிட்டது. என்னை நம்பி அழைத் திருக்கின்ற தலைமை யின் ஆதரவை ஏற்றுக் கொண்டு-நம்பிக்கை யோடு நான் என்னை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டிருக்கிறேன். என்னை அடித்துத் துவைக்க கைகளும், எட்டி உதைக்கக் கால் களும் துணிந்திருந்த நேரத்தில், இதோ அரவ ணைக்க நாங்கள் இருக் கிறோம் என்று இரு கரங்களை நீட்டி தமிழ கத்தின் முதலமைச்சர்-ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் கலை ஞர் அவர்கள் அணைக் கக் கரங்கள் நீட்டிய தால்-இன்றைக்கு நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டி ருக்கிறேன். (பலத்த கைதட்டல்) (டாக்டர் கலைஞர் வாழ்க என பலத்த ஒலி முழக்கம்)

பத்திரிகையாளர்: தொடர்ந்து அ.தி.மு.க விலிருந்து பல முன்னாள் அமைச்சர்கள், முன்ன ணித் தலைவர்கள் எல் லாம் விலகி- தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அ.இ.அ.தி.மு.க.வில் எத்தனை பொதுச்செயலாளர்கள்?

பி.கே.சேகர்பாபு: திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத் தளவில், இந்த இயக்கத் திற்கு ஒரே தலைவர் டாக்டர் கலைஞர் அவர் கள்தான். ஆனால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன் னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், பொதுச்செயலாளர் என்று புரட்சித்தலைவி அவர்கள் அந்த இயக் கத்தில் தொண்டர் களால் ஏற்றுக் கொள் ளப்பட்டிருந்தாலும், பல்வேறு பொதுச்செய லாளர்கள் அந்தக் கட் சியில் திரைமறைவில் இருப்பதால், தொடர்ந்து யாரும் மக்கள் செல் வாக்கு பெற்று, தொண் டர்கள் செல்வாக்கு பெற்று தொடர்ந்து அந்த இயக்கத்தில் இருக்க முடியாது என்ற நிலைக்கு இன்றைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். (சத்தியம்-சத்தியம் என்று தொண்டர்கள் ஒலி முழக்கம்)

பத்திரிகையாளர்: இதுபோன்ற நிலையில் வருகின்ற தேர்தல் முடிவுகள் எப்படியி ருக்கும்?

பி.கே.சேகர்பாபு: வருகின்ற தேர்தலைப் பொறுத்தளவில், தி.மு.கழகத்தினுடைய மக்கள் நலப்பணி களுக்கு, ஏழை, எளிய மக்கள், பாடுபடுகின்ற பாட்டாளிவர்க்கம், தி.மு.க ஆட்சியில் தீட்டப்பட்டிருக்கின்ற திட்டங்களால்-மக்க ளாக மனமுவந்து மீண் டும் 6ஆறாவது முறை யாக டாக்டர் கலைஞர் அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்து வார்கள். (பலத்த கைதட்டல்).

பத்திரிகையாளர்: தலைவர் கலைஞர் அவர்கள் உங்களுக்கு ஏதாவது ஆலோசனை சொன்னாரா? என்ன உத்தரவிட்டார்?

பி.கே.சேகர்பாபு: அ.தி.மு.க.வில் இருந்த போதும், தூய விசுவா சிமிக்க தொண்டனாக இருந்துதான் பணி யாற்றினேன். என்னை வீசியெறிந்த பிறகு, என் னைத் தாங்கிப் பிடித்த கைகளுக்கு விசுவாச மாக அவர்கள் சுட்டிக் காட்டுகின்ற திசை நோக்கி எட்டிப்பாய் கின்ற சிப்பாய்கள் கூட் டத்தில் நானும் ஒருவ னாக இருந்து செயல் படுவேன்.

பத்திரிகையாளர்: அ.தி.மு.க.விலிருந்து விலகிய முன்னணித் தலைவர்கள் செல்வ கணபதி, முத்துசாமி, அழகு திருநாவுக்கரசு, அனிதாராதாகிருஷ்ணன், ஜோதி உள்பட அனை வரும் சொல்கின்ற பொதுவான காரணம், அ.தி.மு.க ஒரு பிரை வேட் லிமிடெட் கம் பெனி என்றும், பொதுச் செயலாளர் ஜெயல லிதா-சசிகலா குடும் பத்தினரின் கஸ்டடியில் இருப்பதாகச் சொல் கிறார்கள். நீங்கள் அ.தி. மு.க.வின் தலைமைக்கு நெருக்கமாக இருந்த காரணத்தால், இதுகுறித்து என்ன சொல்கிறீர்கள்?

பி.கே.சேகர்பாபு: டாக் டர் கலைஞர் அவர் களைச் சந்தித்தபோது, வெளியில் பத்திரிகை யாளர்கள் செய்தி சேக ரிக்க வந்திருக்கிறார்கள் என்ன கூற வேண்டு மென்று கேட்டபோது, அவர் கூறிய கருத்து, என்னை உள்ளபடியே மெய்சிலிர்க்க வைத்தது. அந்த அம்மையாரை எதுவும் காரசாரமாக பேசி விடவேண்டாம் என்று கூறினார். இப் படிப்பட்ட பண்புமிக்க ஓர் இயக்கத்திலே இணைந்திருக்கின்ற நான் விமர்சனத்திற்குள் செல்ல விரும்பவில்லை.

பத்திரிகையாளர்: நீங்கள் சீட் ஏதாவது கேட்டீர்களா?

பி.கே.சேகர்பாபு: நான் முதலில் ஏற்கெனவே கூறியதுபோல், இந்த இயக்கத்தின் தலைமை சுட்டிக்காட்டுகின்ற திசை நோக்கி சீறிப் பாய்கின்ற சிப்பாய்கள் கூட்டத்தில் நானும் ஒருவனாகச் செயல் படுவேன்.

பத்திரிகையாளர்: தொண்டர்களின் நம்பிக்கையை, அவநம்பிக்கையாக மாற்றிக் கொண் டிருக்கின்ற அ.தி.மு. கவின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பி.கே.சேகர்பாபு: ஓர் அரசியல் இயக்கம் என்பது மக்கள் நலனை யும், தன்னை நம்பியி ருக்கின்ற இயக்கத் தொண்டர்கள், இயக்கத் தளபதிகள் நலனையும் நம்பி தேர்தல் களத்தைச் சந்திக்கின்ற இயக்க மாகத் திகழ வேண்டும். இன்றைக்கு ஒரு சிலரின் நன்மைக்காக நடத்தப் படுகின்ற இயக்கமாக அ.தி.மு.க இருப்பதால், வருகின்ற காலகட்டம் என்பது, அ.இ.அ.தி. மு.க.விற்குக் கேள்விக் குறியாக மாறும் என்ப தில் எவ்விதமான அய் யப்பாடும் இல்லை.

சிங்காரவேலர் பிறந்த நாள் அரசு விழா - முதலமைச்சர் கலைஞர் அறிவிப்பு


மீனவர் சமுதாய மேதை சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் அவர்களின் நினை வாக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிங் காரவேலர் மாளிகை எனப் பெயர் சூட்டியும், அங்கு அவரது திரு வுருவச் சிலையை நிறு வியும், மீனவர் இலவச வீட்டு வசதித் திட்டத் திற்கு சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் நினைவு இலவச மீனவர் வீட்டு வசதித் திட்டம் எனப் பெயர் சூட்டியும், அவ ரது நூல்களை நாட்டு டைமையாக்கி, மரபுரி மையர்க்கு 15 இலட்சம் ரூபாய் பரிவுத் தொகை யாக வழங்கியும், பல் வேறு வகையில் சிறப்புகள் செய்துள்ள இந்த அரசு சிங்கார வேலரின் 151-வது பிறந்த நாளான பிப்ர வரி மாதம் 18ஆம் நாளை அரசு சார்பில் கொண்டாடுவதென்று முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் கலை ஞர் அறிவித்துள்ளார்.


முதல்வர் கருணாநிதி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி


காந்தியடிகள் நினைவு தினமான ஜனவரி 30ம் தேதி தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைதினம் விடுமுறை என்பதால் சென்னையில் நேற்று (28.01.2011) முதல்வர் கருணாநிதி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. காந்தி சிலைக்கு முதல்வர் மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்.

Friday, January 28, 2011

காங். எம்.எல்.ஏ போளூர் வரதன் மரணம் : கலைஞர் - ஸ்டாலின் அஞ்சலி


காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ போளூர் வரதன் நேற்று (27.01.2011) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் போளூர் வரதன்(58). சென் னை அடையாறு காந்தி நகரில் வசித்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. இதையடுத்து, சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று (27.01.2011) காலை போளூர் வரதனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
போளூர் வரதன் விவசாய குடும்பத்தில் பிறந்து, வக்கீல் படிப்பை முடித்துள்ளார். மூன்று முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவர். இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்கரிகாத்தூர். இவருக்கு மனைவி, ராஜு என்ற மகன் உள்ளனர். ராஜு, இளைஞர் காங்கிரசில் பொறுப்பில் உள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் மாநில பொதுச்செயலாளர், இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரசில் தலைவர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவராகவும் பதவி வகித்தவர் வரதன். அவரது உடல் காந்தி நகரில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டா லின் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது மகன் மற்றும் மனைவி பிரேமாவுக்கு ஆறுதல் கூறினர். அதை தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, கோ.சி.மணி, துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, தமிழரசி, மதிவாணன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கார்த்தி சிதம்பரம், எம்எல்ஏ அருள் அன்பரசு மற்றும் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்கு இன்று (28.01.2011) காலை பெசன்ட் நகர் மயானத்தில் நடக்கிறது.

மு.க.ஸ்டாலினை சந்தித்து அதிமுக எம்எல்ஏ சேகர்பாபு திமுகவில் சேர்ந்தார்



சென்னை ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் சேகர்பாபு. இவர், வட சென்னை மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.
கடந்த மாதம், திடீரென்று அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ஜெயலலிதா, சேகர்பாபு குறித்து கோபமாக பேசினார். இந்த தகவல் வெளியானதும் வட சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சில நாட்களிலேயே சேகர்பாபுவிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அதோடு, அவரது ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டது. ஆனாலும், தொடர்ந்து சேகர்பாபு புறக்கணிக்கப்பட்டு வந்தார். இதைக் கண்டித்து வட சென்னை நிர்வாகிகள் ஜெயலலிதா வீட்டை முற்றுகையிட்டனர். சில நாட்களுக்கு முன் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்டத்தில் சேகர்பாபு கலந்து கொண்டார்.
அவரை அழைத்ததற்காக கட்சியின் முன்னணி நிர்வாகிகளை ஜெயலலிதா கடிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று (27.01.2011) இரவு 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலினின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு சால்வை அணிவித்து 30 நிமிடங்கள் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். விரைவில் திமுகவில் அவர் முறைப்படி இணைகிறார்.

மணி விழா : கலைஞரிடம் ஆசி பெற்றார் அழகிரி


மத்திய அமைச்சர் அழகிரியின் 60 வது பிறந்த நாள், வரும் 30ம் தேதி வருகிறது. அன்று, நடக்கும் முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, முதல்வர் கருணாநிதி டெல்லி செல்கிறார்.

அதே சமயம், அழகிரியும் வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ளார். அதனால், தன் பிறந்த நாளன்று முதல்வரிடம் வாழ்த்து பெற முடியாது என்பதால்,

(27.01.2011) அன்று மத்திய அமைச்சர் அழகிரி, தன் மனைவி காந்தியுடன் முதல்வர் கருணாநிதி, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சந்தித்து, மணி விழாவுக்காக வாழ்த்து பெற்றனர்.
உடன் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தயாளு அம்மாள், முதல்வரின் அக்கா சண்முக சுந்தரம்மாள், மல்லிகா மாறன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், மு.க.தமிழரசு, செல்வம், செல்வி செல்வம், இயக்குநர் அமிர்தம் மற்றும் குடும்பத்தினர் இருந்தனர்.


மு.க.அழகிரி மணி விழாவில் 70 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் :

மதுரை திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி, புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தென்மண்டல கழக அமைப்பு செயலாளரும், மத்திய மந்திரியுமான மு.க. அழகிரியின் மணிவிழாவை முன்னிட்டு 30-ந்தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம்:


* மணிவிழா நிகழ்ச்சி ராஜாமுத்தையா மன்றத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. அதில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அதே போல் மாலை 5 மணிக்கு கோச்சடை பஸ் நிலையத்தில் 10 ஆயிரம் பேருக்கு உதவிகள் வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.

* மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி மைதானத்திலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அதில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு உதவிகளை வழங்குகிறார்.

* அழகர்கோவில்,“போதி“ மனநல காப்பகத்தில் காலை 10 மணியளவில் பயனாளிகளுக்கு 10 கறவை மாடுகள், 1 கறவை மிஷின், பசுக்களை நிறுத்த ஷெட் ஒன்றும் வழங்கப்படுகிறது.

* மதியம் 12 மணியளவில் ஒத்தக்கடை யோகநரசிம்மர் திருக்கோயிலில் 6 ஆயிரம் பொது மக்களுக்கு சைவ அறுசுவை உணவை, காந்தி அழகிரி, கயல்விழி வெங்கடேஷ், துரை தயாநிதி ஆகியோர் வழங்குகின்றனர்.

மேலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், கள்ளழகர் கோவில், மதன கோபாலசுவாமி கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில்களில் மதியம் 12 மணியளவில் அறுசுவை சைவ உணவு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

அத்துடன் ஏழை, எளிய, நலிந்தோர் மற்றும் மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து அனாதை குழந்தைகள் இல்லம், மனநல காப்பகம், முதியோர் இல்லம் ஆகிய மையங்களிலும் சைவ, அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.

* மாலை 4 மணியளவில் டி.வி.எஸ். நகரிலுள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் பிரசாதம், இனிப்பு மற்றும் 3 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கணித உபகரணங்களை காந்தி அழகிரி, கயல்விழி வெங்கடேஷ், மாநகராட்சி மேயர் தேன்மொழி கோபிநாதன் ஆகியோர் வழங்கு கின்றனர்.

* மாநகர் மற்றும் புறநகர் சார்பாக 70 ஆயிரம் நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. அதுதவிர மாநகர் மற்றும் புறநகர் மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை மதுரை தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

221 வழக்குகளின் தொகுப்பு அடங்கிய சிபிசிஐடி போலீஸ் வரலாற்று நூல்: முதல்வர் வெளியிட்டார்


தமிழகத்தில் சிபிசிஐடி தொடங்கப்பட்டது முதல் இதுவரை நடைபெற்ற புலனாய்வு வழக்கு விவரங்கள் கொண்ட “குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை ஒரு பின்னோக்கம் (1906 - 2010)” என்னும் நூலை காவல் துறை உருவாக்கியுள்ளது.
இந்த நூலை முதல்வர் கருணாநிதி நேற்று (27.01.2011) புதிய தலைமை செயலகத்தில் வெளியிட்டார். உள்துறை செயலர் ஞானதேசிகன், டிஜிபி லத்திகா, கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம், ஐஜி மஞ்சுநாதா, டிஐஜி கண்ணப்பன், எஸ்பி ராஜேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த நூலில் கடந்த காலம் மற்றும் நிகழ்காலம், கொலைகள், மோசடி, இனக் கலவரம், தீவிரவாதம், பயங்கரவாதம், கணினிக் குற்றங்கள், கள்ளநோட்டு குற்றங்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சிலை, தொல்பொருள் பற்றிய வழக்குகள், சிறப்பு வழக்குகள், அகில இந்திய காவலர் பணித் திறன் போட்டி ஆகிய 11 தலைப்புகளில் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த நூல் பயிற்சியில் உள்ள அதிகாரிகளுக்கு அரிய கருவூலமாகும். அதிகாரிகளின் புலனாய்வுத் திறமையை மேபடுத்தும் நூலாகவும் இது அமைந்துள்ளது. இந்த நூல் மற்ற மாநிலங்களின் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட உள்ளது.
221 வழக்குகளின் தொகுப்பு கொண்ட இதில் 1911ம் ஆண்டு மணியாச்சி கொலை, வழக்கு, 1972ல் நடந்த 38 விஷ ஊசி கொலைகள் பற்றிய வழக்கு, சான்சி கும்பல் கொள்ளை, கொலைகள், 1987ல் நடந்த ஆட்டோ சங்கர் செய்த கொலைகள், பிரேமானந்தா கொலை வழக்கு, எம்.கே.பாலன், ஜெயகுமார் கொலை வழக்கு, நந்தகோபால் சாவு, பத்மினி கற்பழிப்பு சம்பவம் போன்றவை இதில் இடம் பெற்றுள்ளன.
எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கு, எல்.ஐ.சி. ஸ்பென்சர் கட்டிடங்கள் தீ விபத்து, நீலகிரியில் நடந்த சட்டவிரோத சுரங்கம், ஸ்ரீரங்கம் ஜீயர் காணாமல் போன வழக்கு, மற்றும் 1953 முதல் நடந்த அகில இந்திய காவல் துறை விளையாட்டு போட்டிகள் போன்றவையும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

இந்த தகவல்களை அரசு செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

உள்நோக்கத்தோடு போக்குவரத்து சங்கங்கள் போராட்டம் - கலைஞர் கண்டனம்


எதிர்க்கட்சி போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்கள் உள்நோக்கத்தோடு போராட்டம் நடத்துகின்றன என்று முதல் வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்று (27.01.2011) வெளியிட்ட கேள்வி பதில்கள் வருமாறு:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும் போது, இலவசங்கள் என்ற பெயரில் ரூ. 91 ஆயிரம் கோடி கடன் வாங்கி அதற்கு ரூ. 14 ஆயிரம் கோடி வட்டி கட்டி வரும் தி.மு.க. அரசு மக்களை கடனில் மூழ்கடித்துள்ளது என்று சொல்லியிருக்கிறாரே?
தமிழ்நாடு அரசின் மொத்தக் கடன் பொறுப்புகள் 2009&2010ம் ஆண்டு இறுதியில் ரூ. 89,149 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு மட்டும்தான் கடன்களை வைத்துள்ளதா? 31&3&2010ல் நம்முடைய அண்டை மாநிலங்கள் எவ்வளவு கடன் வைத்துள்ளன என்று பார்த்தால், மராட்டிய மாநிலம் ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 727 கோடி கடனையும் ஆந்திரப் பிரதேச மாநிலம் ரூ. 1 லட்சத்து 9 ஆயிரத்து 757 கோடி கடனையும் கர்நாடக மாநிலம் ரூ. 79 ஆயிரத்து 644 கோடி கடனையும் மிகச் சிறிய மாநிலமான கேரளா ரூ. 70 ஆயிரத்து 761 கோடி கடனையும், ஏன் இந்தியா ரூ. 35 லட்சத்து 15 ஆயிரத்து 606 கோடி கடன்களையும் வைத்துள்ளன.
தனி நபர் கடன் என்று எடுத்துக் கொண்டால் தென்னக மாநிலங்களிலேயே ஏன் கேரளாவை விடக் குறைவாகத்தான் தமிழ்நாடு உள்ளது. புள்ளி விவரங்களோடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருக்குச் சொல்ல வேண் டுமேயானால் மராட்டிய மாநிலத்தில் தனி நபர் கடன் ரூ. 18 ஆயிரத்து 576, ஆந்திரப்பிரதேசத்தில் தனி நபர் கடன் ரூ. 14 ஆயிரத்து 494, கர்நாடக மாநிலத்தில் தனி நபர் கடன் ரூ. 15 ஆயிரத்து 103 கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடத்தும் கேரளாவில் தனி நபர் கடன் ரூ. 21 ஆயிரத்து 991, தமிழ்நாட்டில் இந்த மாநிலங்களையெல்லாம் விட குறைவாக ரூ. 14 ஆயிரத்து 353 தான்.
எனவே இலவசங்களைக் கொடுப்பதால் தான் தமிழ்நாட்டில் ரூ. 91 ஆயிரம் கோடி கடன் என்பது எவ்வளவு தவறான வாதம் என்பது தெளிவாகிறதா இல்லையா?
மார்க்சிஸ்ட்கள் ஆளும் கேரளாவில் 2009&2010ம் ஆண்டு நிலவரப்படி மொத்தக் கடன் ரூ 70 ஆயிரத்து 761 கோடியாகும். இது அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 31.62 சதவீதமாகும். தி.மு.க. அரசு 2006ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு இலவசங்களை வழங்கியதால் தான் தா. பாண்டியன் கூறியிருப்பதைப் போல ரூ. 91 ஆயிரம் கோடி தமிழக அரசுக்கு கடன் வந்து விட்டதா?
2001&2002ம் ஆண்டில் எனது தலைமையிலான அரசு விட்டுச் சென்ற கடன் ரூ. 32 ஆயிரம் கோடி. அந்தக் கடன் 2005&2006ம் ஆண்டு இறுதியில் அ.தி.மு.க. ஆட்சி பதவியில் இருந்து நீங்குகின்ற காலக் கட்டத்தில் ரூ. 57 ஆயிரத்து 457 கோடியாக உயர்ந்தது எப்படி? இலவசங்கள் எல்லாம் வழங்காத ஜெயலலிதா ஆட்சியிலே கடனே வாங்கவில்லையா?
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொல்லப்பட்ட மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று திரும்பியிருக்கிறாரே?
தமிழகத்திலே இதுவரை பல மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற காலத்திலும் கூட கொல்லப்பட்டு பரிதாபமாக இறந்திருக்கிறார்கள். உதாரணமாக 1991 & 96ம் ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சி நடைபெற்ற போது 38 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள்.
2001 & 2011 வரை 17 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் எந்த ஒரு மீனவர் கொல்லப்பட்டு இறந்ததற்காகவாவது ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வேண்டாம், புகைவண்டியிலோ காரிலோ சென்று இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுண்டா? அப்போதெல்லாம் போகாமல், இன்னும் மூன்று மாதத்தில் தேர்தல் வருகிறது என்றதும், நாகப்பட்டினத்திற்குச் சென்று ஆறுதல் கூறுகிறார் என்றால் அது உண்மையிலே பாசமா, வேஷமா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில் தமிழக அரசை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்களே?
அந்தத் தீர்மானத்தின் இறுதியில் அ.தி.மு.க.வுடன் உடன்பாடு காண முடிவு செய்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்த முடி வினை செயல்படுத்த வேண்டுமென்றால் தி.மு.க. அரசைத் தாக்கித்தானே தீர்மானம் எழுத வேண்டும்.
பட்டினிச் சாவுகள் தமிழகத்திலே இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் அரசின் சார்பில் இந்த ஆண்டு ரூ. 4000 கோடி அளவிற்கு மானியமாகக் கொடுத்து, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், கோதுமை மாவு போன்றவற்றுடன் பத்து மளிகைப் பொருள்கள் அடங்கிய பைகளை பொது மக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் மானிய விலையில் தரப்படுகிறது. துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகிய இரண்டும் கிலோ ஒன்றுக்கு ரூ. 40 என்ற அளவில் விற்கப்பட்டு வந்ததற்கு மாறாக, கிலோ ஒன்றுக்கு ரூ.30க்கு வழங்கப்படும் என்றும்
ஒரு லிட்டர் பாமாயில் ரூ. 30 என்று விற்றதற்கு மாறாக, ரூ. 25க்கே வழங்கப்படும் என்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றால், விலைவாசி உயர்வால் தமிழ்நாட்டு மக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காகத்தான் என்பதை பாமர மக்கள் நன்றாகவே உணருவார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப் பட்ட இலவச நிலம் வழங்கும் திட்டம், வீட்டு மனைப்பட்டா, வேலை வாய்ப்பு போன்ற திட்டங்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டு விட்டன என்று சொல்லியிருக்கிறார்களே?
தி.மு.க. அரசு மீது குற்றஞ்சாற்ற அவர்களுக்கு வேறு காரணங்கள் கிடைக்காததால் இதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். இலவச நிலம் வழங்கும் திட்டத்தின்கீழ், ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 796 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 853 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
வீட்டுமனைப் பட்டாக்கள் 7 லட்சத்து 74 ஆயிரத்து 386 ஏழைக் குடும்பங்களுக்குத் தரப்பட் டுள்ளது. படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 4 லட்சத்து ஆயிரத்து 704 இளைஞர்களுக்கு ரூ. 284 கோடி உதவி நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசு ஐந்தாவது முறையாகப் பொறுப்பேற்ற பிறகு அரசுத் துறைகளில் மட்டும் 5 இலட்சத்து 5 ஆயிரத்து 314 பேருக்கு நிரந்தர வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதெல்லாம் திட்டங்களை கிடப்பிலே போடப்பட்டதற்கான அடையாளமா என்பதை மார்க்சிஸ்ட் தோழர்கள்தான் கூற வேண்டும்.
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்டு, தொழிலாளர்கள் எல்லாம் பெருமகிழ்ச்சி அடைந்து நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், ஒருசிலர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்களே?
எந்தச் சங்கத்தை அழைத்து அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்துவது என்பதற்கான தேர்தல் தொழிலாளர்களிடையே நடைபெற்று, தி.மு.க. சார்புடைய தொ.மு.ச. மகத்தான வெற்றிபெற்றது. பேச்சுவார்த்தையும் நடைபெற்று, முதலில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மீது வெறுப்பு கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய சங்கமும் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு வரும்போது அவர்களை தடுப்பதும் என்பதுமான வன்முறை நடவடிக்கைகளிலே ஈடுபட்டுள்ளார்கள்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக என்னென்ன புதிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது அரசின் சார்பாக விளம்பரமாகத் தரப்பட்டுள்ளது. அதற்குப் பிறகும் எதிர்க்கட்சிகளின் சார்புடைய சங்கங்கள் போராட்டம் நடத்துவது எந்த அளவிற்கு உள்நோக்கத்தோடு நடத்தப்படுகிறது என்பதை தொழிலாளர்களும், பொதுமக்களும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

மீனவர் ஜெயக்குமாரின் மனைவிக்கு அரசு வேலை வாய்ப்பு -


இலங்கைக் கடற் படையினரால் தமிழக மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்ட சம்ப வம் குறித்து அறிந்ததும் அன்று தன்னை சந்தித்த மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் இந்த சம் பவத்திற்கு முதலமைச்சர் கலைஞர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதை சுட் டிக் காட்டி இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் தாக்குதல் செயல்கள் தொடரா வண்ணம் இலங்கை அரசோடு பேசி உரிய நடவடிக்கை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்தத் தாக்கு தலில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ள மத்திய அரசு இலங்கை அரசினை வற்புறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் இறந்த ஜெயக்குமாரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து அன்றே நிவாரண தொகை ஜெயக்குமாரின் மனைவி முருகேஸ்வரியி டம் மாவட்ட நிருவாகம் மூலம் வழங்கப்பட்டது.

இந்த நிவாரண நிதி வழங்கியதை தொடர்ந்து முதலமைச்சர் கலைஞர் ஜெயக்குமாரின் மனைவி முருகேஸ்வரிக்கு அரசு வேலை வழங்க உத்தர விட்டுள்ளதாக ஏ.கே. எஸ்.விஜயன் எம்.பி. தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் கலைஞர் அறிவித்தபடி ஜெயக் குமாரின் மனைவி முரு கேஸ்வரிக்கு ஆறுகாட் டுத்துறை அங்கன்வாடி மையத்தில் உதவியாள ராக பணிபுரிவதற்கான நியமன ஆணை (25.01.2011) அன்று இரவு வழங் கப்பட்டது. இதனை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் வழங்கினார்.

தேவேந்திர குல வேளாளர் பிரச்னை : நீதிபதி தலைமையில் குழு அமைத்து முதல்வர் உத்தரவு


குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய 7 பிரிவுகள், தேவேந்திர குல வேளாளர் என்ற சமூகத்தின் உட்பிரிவுகள் ஆகும் என்றும், அந்த உட்பிரிவுகள் அனைத் தையும் ஒன்றாக இணைத்து தேவேந் திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட வேண் டும் என்றும், தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையின் தலைவர் ம.தங்க ராஜ் அளித்த கோரிக்கை, கடைய நல்லூர் எம்.எல்.ஏ. பீட்டர் அல் போன்ஸ் மூலம் தமிழக அரசின் கவ னத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்தக் கோரிக்கை குறித்து ஜனவரி 26 ஆம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற கலந்தா லோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் க.அன்பழகன், பொன்முடி, பரிதி இளம்வழுதி, தமிழரசி, மதிவாணன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர், ஆதிதிராவி டர் நலத்துறை செயலாளர், ஆணை யர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கோரிக்கையை சட்ட ரீதியாக பரிசீலித்து நடைமுறைப்படுத் திட நீதிபதி ஜனார்த்தனத்தைக் கொண்ட ஒரு நபர் குழு அமைத்து பரிந்துரை பெறலாம் என்று முதல மைச்சர் கலைஞர் ஆணையிட்டுள் ளார்.
- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாநில அரசின் ஆலோசனை பெறாமல் பொது நுழைவுத்தேர்வு பற்றி முன்மொழிவு எடுக்கப்படாது - அமைச்சர் கபில் சிபல்


மாநில அரசுகளிடம் ஆலோசனை செய்யாமல், பொது நுழைவுத் தேர்வு குறித்து முன்மொழிவு எடுக்கப்படாது என்று கபில் சிபல் உறுதியளித்துள்ளார்.
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேல்படிப்புகளில் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு அறிமுகம் தொடர்பாக, தாங்கள் அனுப்பிய கடிதத்தை ஜனவரி 3ம் தேதி பெற்றுக்கொண்டேன். மத்திய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறையின் கட்டுப்பாட்டில்தான் இந்திய மருத்துவக் கவுன்சில் உள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தங்களின் கடிதத்தை மத்திய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்திடம் வழங்கியுள்ளேன். பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக மாநில அரசுகளிடம் ஆலோசனை செய்யாமலும், மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாமலும் எந்த முன்மொழிவும் எடுக்கப்படாது என்று நான் உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

60வது பிறந்த நாள் : மு.க.அழகிரி அறிக்கை


மு.க.அழகிரி வெளியூர் சென்று இருப்பதால் வரும் 30ந் தேதி தனது 60வது பிறந்த நாளன்று வாழ்த்துவதற்கு நேரில் சந்திப்பதை தவிர்க்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரும், தி.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
எனது 60&வது பிறந்த நாளான ஜனவரி 30ந் தேதி, நான் பணி நிமித்தம் காரணமாக வெளியூர் சென்வதாலும், அன்றைய தினம் நான் மதுரையில் இல்லை என்பதாலும் என்னை வாழ்த்த வருகை தரும் அனைவரும் நேரில் வந்து சந்திப்பதை தவிர்த்திட கேட்டுக் கொள்கிறேன்.
பிறந்த நாள் விழாவின் நலத்திட்டங்கள், அன்னதானம், ஏழை எளியோருக்கு உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் மாவட்ட கழகத்தின் சார்பாக பகுதிகள், ஒன்றியங்கள் வாரியாக நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

தியாகிகளுக்கு கவர்னர் தேநீர் விருந்து : முதல்வர் அமைச்சர்கள் பங்கேற்பு


குடியரசு தினத்தை முன் னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கவர்னர் பர்னாலா தேநீர் விருந்து அளித்தார். இதில் முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் பங்கேற்றனர்.
குடியரசு தினத்தை முன் னிட்டு கவர்னர் பர்னாலா (26.01.2011) அன்று சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு தேநீர் விருந்து அளித்தார். கவர்னர் மாளிகையில் நடந்த இந்த விருந்தில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், நீதிபதிகள், தூதரக அதிகாரிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
குடியரசு தின அணிவகுப்பில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பரிசு பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கும், அணிவகுப்பு ஊர்திகளுக்கும் கவர்னர் பர்னாலா பரிசுகள் வழங்கினார்.

நல திட்டம், கட்டமைப்பு வசதியில் தமிழகம் முன்னணியில் உள்ளது - ஆளுநர் பர்னாலா குடியரசு தின உரை


நல திட்டங்கள் நிறைவேற்றுவதிலும் கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதிலும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று ஆளுநர் பர்னாலா கூறியுள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் பர்னாலா வானொலி, தொலைக்காட்சியில் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் சுதந்திரத்துக்காக அனைத்தையும் தியாகம் செய்த தியாகிகளை இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும். 1950ல் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. காந்தி, நேரு போன்ற தலைவர்கள் கண்ட கனவின்படி இந்தியா இன்று தொழில் நுட்பம், கல்வி, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அபரிமித வளர்ச்சி பெற்றுள்ளது. நாட்டை வறுமை, கல்வியறிவு இன்மையிலிருந்து விடுவிக்கும் கடமை அரசுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் உள்ளது. உணவு உற்பத்தியிலும், அறிவியல் துறையிலும் நம் நாடு உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளது.
இதில் தமிழகத்தின் வளர்ச்சி வரலாற்று சிறப்புக்குரியது. நலத்திட்டங்கள் நிறைவேற்றுவதிலும் கட்டமைப்பு வசதிகளை செய்வதிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. தகவல் தொழில் நுட்பம், மோட்டார் வாகன தொழில், மருத்துவ துறையின் முக்கிய கேந்திரமாக தமிழகம் விளங்குகிறது. உலகின் புகழ் பெற்ற 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளன. கணினிப் பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முன்னணியில் உள்ளது. 57 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன.
இலவச கல்லூரி கல்வி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இதன் மூலம் 3.75 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். திருவாரூரில் மத்திய பல்கலை கழகமும், திருச்சியில் ஐ.ஐ.டியும் நிறுவப்பட்டுள்ளன. கிராமங்கள் பயன் பெறும் வகையில் 11 புதிய பொறியியல் கல்லூரிகள், 3 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏழை மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். இலவச வண்ண தொலைக்காட்சி, இலவச எரிவாயு இணைப்புடன் அடுப்பு, நிலமற்ற விவசாயிகளுக்கு இலவசமாக நிலம், பெண்கள் நல திட்டங்கள் போன்ற சமூக நல கட்டமைப்பில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. உணவு உற்பத்தியிலும் முன்னணி பெற்று தமிழ்நாட்டில் 95.6 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தியாகி உள்ளது. விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க் கடன்கள் வழங்கப்படுகின்றன.
மக்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட அரசு வருமுன் காப்போம், நலமான தமிழகம், குழந்தைகள் இதய பாதுகாப்பு திட்டம், உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கும் கலைஞர் காப்பீட்டு திட்டம் போன்ற திட்டங்களிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. நம் நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமைய அனை வரும் பாடுபடுவோம். இந்த நாளில் சுதந்திரம் பெற்று தந்த தியாகிகளை நினைவு கூருவோம்.

இவ்வாறு பர்னாலா பேசினார்.

Wednesday, January 26, 2011

குடியரசு தின விழா





சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழா இன்று (26.01.2011) நடைபெற்றது. முதலமைச்சர் கருணாநிதி காலை 7.48 மணிக்கு விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். 7.52 மணிக்கு கவர்னர் பர்னாலா விழா மேடைக்கு வந்தார். அவரை முதலமைச்சர் கருணாநிதி வரவேற்றார்.

கவர்னருக்கு முப்படை தளபதிகளை அறிமுகம் செய்து வைத்தார். காலை 8 மணிக்கு கவர்னர் தேசிய கொடியேற்றி வைத்தார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மலர் தூவியது.

கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இதையடுத்து தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் அணி வகுப்பு நடந்தது.
முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர்.

இதையடுத்து ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கும், புதுடெல்லியில் நடந்த 19-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்ற வீரர்கள்-வீராங்கனைகளுக்கும் முதலமைச்சர் கருணாநிதி ஊக்கத்தொகையும் பதக்கங்களும் வழங்கினார்.

வீர தீரச்செயல் புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கம், மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்களையும் முதலமைச்சர் கருணாநிதி வழங்கினார்.


சென்னையில் நடந்த குடியரசு தினவிழாவில் அலங்கார வண்டிகளின் அணிவகுப்பு நடந்தது.

அரசு துறையை சார்ந்த 24 அலங்கார வண்டிகள் இதில் அணிவகுத்து வந்தன. அரசு திட்டங்களையும், சாதனைகளையும் விளக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டிருந்தன.
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பினை, ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பார்த்து மகிழ்ந்தனர்.

பரிசு பெற்றவர்கள் விவரம்:
விளையாட்டு துறையில், தடகள பிரிவில் காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற எஸ்.சத்யாவுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. சி.ஸ்ரீதர்(வில் வித்தை) ரூ.15 லட்சம், அ.சரத்கமல் (டேபிள் டென்னிஸ்) ரூ.40 லட்சம், அமல்ராஜ் (டேபிள் டென்னிஸ்) ரூ.10 லட்சம், ஆர்.அபிஷேக் (டேபிள் டென்னிஸ்) ரூ.10 லட்சம், கே.ஷாமினி (டேபிள் டென்னிஸ்) ரூ.15 லட்சம், ருஷ்மி சக்ரவர்த்தி (டென்னிஸ்) ரூ.10 லட்சம், கவிதா (கபடி) ரூ.20 லட்சம், சவுரவ் கோஷல் (ஸ்குவாஷ்) ரூ.20 லட்சம், ஹரிந்தர் பால்சிங் (ஸ்குவாஷ்) ரூ.10 லட்சம், தீபிகா பலிகால் (ஸ்குவாஷ்) ரூ.10 லட்சம், அனகா அலங்காமணி (ஸ்குவாஷ்) ரூ.10 லட்சம், அன்வஷா ரெட்டி (ஸ்குவாஷ்) ரூ.10 லட்சம், ஜோஷ்னா சின்னப்பா (ஸ்குவாஷ்) ரூ.10 லட்சம், அதிபன் (சதுரங்கம்) ரூ.10 லட்சம், சசிகிரன் (சதுரங்கம்) ரூ.10 லட்சம்.
வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் பெற்றவர்கள்:

ரயிலில் அடிபட இருந்த சிறுவனை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரயில்வே ஊழியர் ரே.விவேகானந்தன், மதம் கொண்ட யானையிடம் இருந்து 7 பேரின் உயிரை காப்பாற்றிய கோவையைச் சேர்ந்த வனத்துறை ஓட்டுனர் ஜெ.ரவி, பயணிகளுடன் சென்ற பஸ்சை விபத்திலிருந்து காப்பாற்றிய டெப்போ ஓட்டுனர் கன்னியாகுமரியை சேர்ந்த செ.ராஜகோபால், கடலூர் தலைமை அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட தீயை அணைத்து நோயாளிகளை காப்பாற்றிய கடலூர் தா.ராஜேஷ்குமார் ஆகியோருக்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள அண்ணா பதக்கத்தையும், ரூ.25 ஆயிரம் காசோலையையும் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
திருவண்ணாமலையை சேர்ந்த எம்.இ.ஜமாலுதீனுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கமும், ரூ.25 ஆயிரம் காசோலையும் வழங்கப்பட்டது.
காந்தியடிகள் காவலர் பதக்கம்:

கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுப்பதில் சீரிய பணியாற்றும் காவலர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, தர்மபுரி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ப.சரவணன், சென்னை மாவட்ட உதவி ஆணையர் ஆர்.கஜேந்திரகுமார், தர்மபுரி மாவட்ட காவல் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கமும், ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை, மக்கள் நல்வாழ்வு துறை வாகனங்கள் காண்போரை கவரும் விதத்தில் அமைந்திருந்தன.

செம்மொழி பூங்கா, வனத்துறை, தோட்டக்கலை சார்பில் மலர்களால் அமைக்கப்பட்டிருந்த யானை, சுகா தாரத்துறை சார்பில் வந்த படகு போன்ற வாகனங்கள் வித்தியாசமாக இருந்தன. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் இரண்டு அலங்கார வண்டிகள் குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டம், அண்ணா மறு மலர்ச்சி திட்டம் போன்றவற்றை விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.

இதற்கு முதல் பரிசு கிடைத்தது. தமிழக பண்பாட்டை விளக்கிய செய்தி மக்கள் தொடர்பு துறை வாகனத்துக்கு 2 வது பரிசு அறி விக்கப்பட்டது. கலைஞர் காப்பீட்டு திட்டம், 108 இலவச ஆம்புலன்ஸ் போன்ற திட்டங்களை விளக்கும் மக்கள் நல்வாழ்வு துறை வாகனம் 3 வது பரிசுக்கு தேர்வு பெற்றது.

விழாவில் இடம்பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சிகளுக்கும், பரிசுகள் அறிவிக்கப்பட்டன. கிராமிய நடனம் ஆடிய சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் வெங்கடசுப்பாராவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் பரிசுக்கு தேர்வு பெற்றனர். தமிழ் கலாச்சார நடனத்துக்காக நுங்கம்பாக்கம் சென்னை மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு 2 வது பரிசும், பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனத்துக்காக முருக தனுஷ்கோடி மகளிர் பள்ளிக்கு 3 வது பரிசும் கிடைத்தது.

சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆறுதல் பரிசு பெற்றது. நிகழ்ச்சியில் தேசிய ஒருமைப்பாட்டு நடனம் ஆடிய பாரதி மகளிர் கல்லூரி மாணவிகள் முதல் பரிசுக்கு தேர்வு பெற்றனர். ஒயிலாட்டம் ஆடிய செல்லம் மாள் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு 2 வது பரிசு கிடைத்தது.

தமிழக பாரம்பரிய நடனம் ஆடிய எத்திராஜ் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு ஆறுதல் பரிசு அறிவிக்கப்பட்டது.







இலவசம் அன்றும் நேற்றும் இன்றும் - சோலை


பொங்கல் பண்டிகையின் பொழுது வழங்கப்படும் இலவச வேட்டி,சேலை பற்றி இன்று சிலர் ஏளனம் செய்கிறார்கள் .இது இன்று நேற்றா வழங்கபடுகிறது .இல்லை பல காலமாகவே இது நடை பெற்று வருகிறது .இடைப்பட்ட காலத்தில் சிலரால் நிறுத்தபட்டது. இந்த திட்டத்தை முதல் அறிமுகம் செய்தவர் முதல்வர் கருணாநிதி அவர்கள் .பின்னர் வந்த எம் ஜி ஆர் இதை தொடர்ந்து செய்துவந்தார் .அவருடைய காலத்தில் இந்த திட்டம் மக்களை வெகுவாக கவர்ந்தது .தன் மகனே பொங்கலுக்கு துணி அனுப்புவதை போல் எண்ணி மகிழ்ந்தனர்.அதுவே வாக்குகளாக மாறின .இரட்டை இல்லை சின்னம் இருந்தால் தான் ஓட்டு.கூட்டணி கட்சி சினத்திற்கு கூட கிடையாது .அந்த அளவுக்கு மக்களை கவர்ந்தது இந்த திட்டம் .அவர் மறைந்தார் .பின் கலைஞர் முதல்வர் ஆனார் .இந்த திட்டத்தை மேலும் வலுபடுத்தினார்.ஆனால் அப்பொழுது மக்களுக்கு அதன் அருமை புரியவில்லை .பின்னர் அம்மையார் ஆட்சிக்கு வந்தார் பொங்கல் இலவச வேட்டி சேலை திட்டம் நிறுத்த பட்டது .அப்பொழுதுதான் மக்களுக்கு புரிந்தது .ஏன் தவறு செய்தோம் என்று .

சரி கலைஞர் ஏன் இந்த திட்டத்தை சிரத்தை எடுத்து செய்கிறார் .வெறும் ஓட்டு பெறவேண்டும் என்பதற்கா ? .இந்த திட்டத்தின் மூலம் இரட்டை பயன் ஓன்று கைத்தறி நெசவாளர்களுக்கு இதன் மூலம் நல்ல வேலை கிடைத்து அதன் மூலம் வருமானம் பெருகும் .அனைத்தும் தமிழ்நாட்டில் தான் கொல்ல்முதல் செய்யப்படும் என்பது குறிபிடத்தக்கது.இரண்டு புத்தாடை வாங்க முடியாத ஏழைகளுக்கு பொங்கல் பரிசாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் .

சரி யார் ஏழை எப்பிடி கணக்கு பார்ப்பது .ஏழைகள் அனைவருக்கும் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது .சரி அனைவர்க்கும் வேட்டி சேலை .எந்த வித வருமான உச்சவரம்பும் கிடையாது சரி இலவசத்தின் தரம் எப்பிடி உள்ளது என பார்த்தால் தமிழ்நாட்டின் கைத்தறி ஆடைக்கு உலகம் முழுவதும் நல்ல பெயர் உண்டு அதே போல் தான் இதுவும் தரமானது தான் .வாங்கி பார்த்த ஏழைக்கு தெரியும் அது அது அரசு குடுத்த மாணிக்கம் என்று.

இலவசங்கள் மக்களை சோம்பேறி ஆக்கும் என எதிர் கட்சி தலைவர் கூறி உள்ளார்.அவர் ஆட்சியிலும் தேர்தல் ஆண்டில் ஒரு முறை வழங்க பட்டது .ஆனால் அவை தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்படவில்லை .மத்யபிரதேஷ் மாநிலத்தின் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது .அதன் தரம் என்ன தெரியுமா .காசியில் பிணத்தில் போடும் அந்த ரகம்

தான்.ஆனால் இன்று நல்ல தரமான சேலை .வெட்டி அதோடு மட்டுமா பொங்கல் அன்று சக்கரை பொங்கல் இட்டு கொண்டாட இலவச பொங்கல் பை .

அன்று எம்.ஜி ஆர் ஏழைகளின் ஏந்தல்.இன்று கலைஞர் அவர்களின் மவராசன் .இது தொடரபோகும் ஆட்சி .ஏழைகளின் ஆட்சி .குப்பாடு போடுபவர்கள் அடங்கிவிடுவர்.


நன்றி : நக்கீரன்.