கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 18, 2010

சிறுபான்மை மொழிகள் கற்பிக்க 4 பாடவேளைகள் ஒதுக்கீடு - முதல்வர் கருணாநிதி உத்தரவு


தமிழக அரசு 15.12.2010 அன்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 11ம் தேதி சென்னையில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், 'பள்ளிக் கல்வித்துறையில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் சிறுபான்மை மொழிகள் கற்பித்தல் தொடர்பான கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை அரசு எடுக்கும்’ என்று அறிவித்தார்.
அதனை நிறைவேற்றும் வகையில், பள்ளிகளுக்கான சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் பள்ளிகளில் தற்போதுள்ள உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் அரபிக் போன்ற சிறுபான்மை மொழிகளையும் கற்பித்திட வாரத்துக்கு 4 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மொழிப் பாடங்கள் மற்றும் சிறுபான்மை மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்படும் என்றும், சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான மதிப்பெண்கள் இடம்பெறும் என்றும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் அறிக்கை: சிறுபான்மையினரின் பாதுகாவலராகவும், அவர்களுக்கு பல நன்மை களை செய்துள்ள முதல்வர், சமச்சீர் கல்வியில் சிறு பான்மை மொழிப் பாடங்களுக்கு இடம் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளார். இதற்காக, முதல்வர் கருணாநிதிக்கு சிறுபான்மை மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment