கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 11, 2010

இராசாமீது ஆதாரமில்லை-எஃப்அய்ஆர் போடவில்லை ஆ.இராசாவையா கைது செய்ய வேண்டும்? குற்றவாளிக் கூண்டில் நிற்கும் ஜெயலலிதா கைது செய்யப்படவேண்டும்! - கி.வீரமணி


முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசாவையா கைது செய்ய வேண்டும் குற்றவாளிக் கூண்டிலே நிற்கின்ற பார்ப்பன அம்மையார் ஜெயலலிதாவை அல்லவா கைது செய்ய வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

பெரம்பலூர் கூட்டம்

ஆ.இராசா அவர்களின் மீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்? என்ற உண்மை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் 6.12.2010 திங்கள்கிழமை மாலை 6மணியளவில் பெரம்பலூர் மேற்கு வானொலித் திடலில் எழுச்சியோடு நடைபெற்றது. திருச்சி மண்டல செயலாளர் சி.காமராஜ் தலைமையேற்க அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர்கள் மு.சிங்காரம், தி.க சுப்பையா, சு.மணிவண்ணன், ஆகியோர் முன்னிலை வகிக்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். தி.மு.க சொற்பொழிவாளர் ச.அ.பெருநற்கிள்ளி தொடக்கவுரையாற்றினார். தொடர்ந்து வரும் ஆரியர்-திராவிடர் போராட்டத் தின் தொடர்ச்சிதான் ஆ.இராசா மீது சுமத்தப் பட்டுள்ள பழி என்று விளக்கி கழக பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு உரையாற்றிய பின்னர், ஊடகவியலாளர் ரமேசு பிரபா சில ஊடகத் துறையினரின் சதிகளை அம்பலப்படுத்தி யும் உரையாற்றினார்.

சுப.வீரபாண்டியன்

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தனதுரை யில், முதலாளித்துவ மற்றும் ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து மீண்டும் ஆ.இராசா முக்கிய பொறுப்புகளை ஏற்கும் காலம் வரும் என்று விளக்கி சிறப்புரையாற்றினார்.

புஸ்வாணம் ஆவதுபோல ஸ்பெக்ட்ரம் பிரச் சினை ஆகிவிடும் அண்ணாவின் கடமை கண் ணியம், கட்டுப்பாட்டை பின்பற்றும் ஆ.இராசா, தலைமையின் கட்டுப்பாட்டை ஏற்று பதவி விலகி லட்சிய வீரனாக திகழ்கிறார். சாமானிய மக்கள் செல்பேசியில் பேசிட கட்டணங்களைக் குறைத்து மாபெரும் தொலைத்தொடர்பு புரட்சி செய்தவர் ஆ.இராசா. இந்த பிரச்சினையின் மூலம் தி.மு.கவை வீழ்த்த நினைப்பவர்களை கருஞ் சிறுத்தை பட்டா ளம் வீழ்த்தும் என்று கூறி சிறப்புரையாற்றினார்.

பங்கேற்றோர்: மாநிலங்களவையின் மேனாள் உறுப்பினர் எஸ்.சிவசுப்பிரமணியன், ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க செயலாளர் துரைசாமி, நகர்மன்ற துணைத் தலைவர் சி.முகுந்தன், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.கலிய மூர்த்தி, மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் இரத்தின.இராமச்சந்திரன், வழக்குரைஞர் மு.ராசா, லெ.அர்ச்சுனன், பொன்செந்தில்குமார், தங்கசிவ மூர்த்தி, இரா.இளங்கோவன், வை.செல்வராஜ், ம.கருணாநிதி, இரா.தமிழரசன், தியாக.முருகன், சிவக்கொழுந்து, மா.சங்கர், சேகர், க.தனபால், சொ.மகாலிங்கம், பி.வெங்கடாசலம், எம்.எஸ். நாராயணன், துரை.பிரபாகரன், சு.கலைவாணன், செ.தமிழரசன், கருக்கை கிருட்டினன், கார்மேகன், பட்டணங்குறிச்சி மணிகண்டன், தங்கசாமி, பரமானந்தம், பாலசுப்பிரமணியன், க.கல்யாண சுந்தரம், கு.பச்சமுத்து பெரம்பலூர் நடராசன் ஆசிரியர் நகர பொறுப்பாளர்கள் ந.ஆறுமுகம், அண்ணாதுரை, பொதுக்குழு உறுப்பினர் ஆனந்தன், விஜயேந்திரன், து.பெரியசாமி, ஆ.ஞானாம்பாள், பச்சமுத்து செல்வராசு உள்ளிட்ட ஏராளமான பொறுப்பாளர்களும் திரளான பொதுமக்களும் பங்கேற்றனர்.

தமிழர் தலைவர் உரை

பார்ப்பன ஊடகங்கள் இராசா மீது குறிவைத்துத் தாக்குவது ஏன்? என்ற தலைப்பில் சிறப்புப் பொதுக்கூட்டம் 6.12.2010 அன்று பெரம்பலூரில் இரவு நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆற்றிய உரை வருமாறு:

பெரம்பலூரில் கடல்

பெரம்பலூரில் கடல் இல்லை. ஆனால், இதோ மக்கள் கடல் கூடியிருக்கிறது என்கிற அளவுக்கு காட்டியிருக்கின்றீர்கள். இராசா அவர்கள் அமைச்சராக இல்லாவிட்டாலும் இராசா எப் போதும் எங்கள் இராசாதான் என்று காட்டுவதற்கு இன்றைக்கு பெரிய அளவுக்கு ஏராளமான மக்கள் திரண்டிருக்கின்றீர்கள். நம்மோடு மழை போட்டியிட்டது. ஆனால் இயற்கை தோற்றது. இயக்கம் வென்றது (இராசா வென்றார்-மக்கள் குரல்) இது சிறப்பான உண்மை விளக்கப் பொதுக்கூட்டம். ஆங்கிலத்திலே ஒரு பழமொழி உண்டு.

முதல் களபலி-உண்மையே!

யுத்த காலத்திலே போர்க் காலத்திலே முதலில் களபலி ஆவது இராணுவ வீரர் அல்ல. பின் யார் என்று சொன்னால் உண்மைதான் முதலில் கள பலியாகும் என்று ஒரு பழமொழி உண்டு (கைதட்டல்). இப்பொழுதும் அமைச்சர் அவர்களது விசயத்தில் அவர்களது பிரச்சினையில் மிகப்பெரிய புரட்சியை அவர்கள் அமைதியாக செய்திருக் கின்றார்.

அவருக்குப் பாராட்டு வழங்குவதற்குப் பதிலாக பழிதூற்றிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் உண்மைகள் களபலியாக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் அதற்கு அடையாளம்.

எனவே, உண்மை களபலியாக்கப்பட்டிருக்கிறது. ராசா அவர்கள் செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பதுபோல அவ்வளவு பெரிய தண்டனையை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

ஆரியத்திற்கும்-திராவிடத்திற்கும் போர்

ஒரு போர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த போர்தான் ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் நடைபெறக்கூடிய போர் (கைதட்டல்). அந்தப் போர்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது- அதில் வெற்றிபெறப்போவது ஆரியம் அல்ல. திரா விடம்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் (கைதட்டல்).

இராசா ஒன்றும் ஏமாளி அல்ல-ஏகலைவனைப் போல கேட்டவுடனே கட்டை விரலை வெட்டிக் கொடுப்பதற்கு. மாறாக இராசா போன்றவர்கள் பெரியார் பாசறையில் படித்த காரணத்தால் கலைஞருக்கு நம்பிக்கைக்குரிய தொண்டனாக, தோழனாக இருக்கின்ற காரணத்தால் அவர்களைப் பொறுத்தவரையில் நிச்சயமாக அவர்களுடைய அந்த உழைப்பு என்பதிருக்கிறதே அது மிகப்பெரிய பலனைத் தரும்.

இராசா வென்றுவிட்டார்

அதுபோல எல்லோரும் மிகப்பெரிய அளவுக்கு சிறப்பாக பணியாற்றுவதன் மூலமாக திராவிட இயக்க உணர்வைக் காட்டியிருக்கின்றார்கள். நடத்தியிருக்கின்றார்கள். சற்று நேரத்திற்கு முன்னாலே பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்தபொழுது உங்களை போன்ற மக்களை எல்லாம் சந்திக்கின்ற பொழுது எங்களுக்கு ஏற்படு கின்ற உற்சாகம் இருக்கின்றதே, இராசா வென்று விட்டார் என்பதிருக்கிறதே, இராசாவை எப்படி? அடையாளம் காட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்திவிட வேண்டும் என்பதற்காக அரசியல் ஊடக சூழ்ச்சிக்காரர்கள் இருக் கிறார்களே, அவர்கள் நிச்சயம் ஏற்கெனவே தோற்றுப்போய்விட்டார்கள். நாளையும் அவர்களுக்குத் தோல்வி என்பது உறுதியாகி விட்டது. என்பதுதான் அடையாளம் (கைதட் டல்). அருமையாக இங்கே எடுத்துச் சொன் னார்கள். ஆதாரத்தோடு நான் எடுத்துச் சொல்லுகின்றேன்.

ஜெயலலிதா கூறுவதென்ன?

இதோ என் கையில் இருப்பது ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை. நான் கேட்கிறேன் ஒரு எதிர்க்கட்சித் தலைவர்-சட்டமன்றத்திற்கே வராத ஒரு எதிர்க்கட்சித் தலைவர்-பார்ப்பன அம் மையார் என்ன சொல்லுகிறார் என்றால் இராசாவை ஏன் விசாரிக்கவில்லை? இராசாவை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்கின்றார். நிச்சயமாக ராசாவை விசாரிப்பதோ, கைது செய்வதோ முடியாது.

குற்றவாளிக் கூண்டில் ஜெயலலிதா

காரணம் இந்த அம்மையாரே குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார் (கைதட்டல்). இன்னமும் குற்றவாளிக்கூண்டிலே இருந்து அவர் வெளியே வரவில்லை.

இது நாடறிந்த ஒன்று. மக்கள் ஏராளமாகத் திரண்டிருக்கிறார்கள். தாய்மார்கள் ஏராளம் திரண்டிருக்கிறார்கள். மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. இராசா எங்கள் வீட்டுப்பிள்ளை. அவரை நாங்கள் எந்த வகையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று உச்சிமுகர்ந்து பாதுகாக் கிறவர்கள் தாய்மார்களாக இருக்கி றார்கள். எவ்வளவு பக்குவமாக ஒரு சதி நடந்தேறியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இராஜா அடையாளப்படுத்ப்பட்ட ஒரு நபர். முழுக்க, முழுக்க திராவிட முன்னேற்றக் கழகத்தை, அதன் ஆட்சியை மீண்டும் வரவிடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக ஆரியம் திட்டமிட்ட ஒரு சூழ்ச்சிப்பொறி. எனவே தொலைத்தொடர்பு என்பதிருக்கிறதே, தொலைவிலே இருக்கிற பலருக்கும் தொடர்பிக்கிறது. உண்மைகள் வெளிவர காலதாமதமாகும்

இனி போகப் போகத் தெரியும். உண்மைகள் எப்பொழுதும் வெளிச்சத்திற்குக் கொஞ்சம் காலதாமதமாகத்தான் வரும். ஒப்பனைகள் அழகாக இருக்கும்.

ஆனால் அது கலைந்துவிடும். உண்மைகளுக்கு ஒப்பனைகள் கிடையாது. இந்த ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையை வைத்துத்தானே ஆட்டம் போடுகிறார்கள்?

இதைமட்டும் ஏன் விசாரிக்க வேண்டும்?

2003ஆம் ஆண்டிலிருந்து 2009-2010 வரையிலே நடைபெற்ற அமைச்சகப் பணியிலே இராசா அமைச்சராக இருந்த காலத்தை மட்டுமே பேசுகிறார்கள் என்று சொன்னால் இது முழுக்க முழுக்க ஆரிய சூழ்ச்சியினுடைய அப்பட்டமான வெளிப்பாடு என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் என்ன தேவை? இது ஒரு ஆடிட்டர் ஜெனரலுடைய அறிக்கை. ஆடிட்டர் ஜெனரலு டைய கணக்குத் தணிக்கை அறிக்கை. தணிக்கை அறிக்கையில் இராசா பெயர் உண்டா?

இந்த தணிக்கை அறிக்கையிலே எங்கேயாவது ஆ.இராசவின் பெயர் இருக்கிறதா? இராசா குற்றவாளி என்று சொல்லப்பட்டிருக்கின்றதா?

இராசாதான் இதற்குப் பொறுப்பாளி என்று சொல்லப்பட்டிருக்கின்றதா? இதில் அடிப் படையிலே இல்லை. ஆனாலும் கூட, எதைப் பற்றியும் கவலைப்படாத இந்த நாட்டு ஊடகங் கள் ஒரு பொய்யைச் சொன்னாலே திரும்பத் திரும்ப என்ன ஆகும் என்ற கருத்திலே இன்றைக்கு ஆட்டம் போடுகிறார்கள்.

பலூன் போலத் தெரியும்

ஆனால், அது பலூன் போல பெரிதாகத் தெரிகிறது. பலூனை நீங்கள் ஊதிக்கொண்டிருக் கின்றீர்கள். இன்னும் வேகமாக ஊதுங்கள். நீங்கள் ஊத, ஊத பலூன் பெரிதாகும் என்று நினைக்கிறீர்கள். ஆனால், அது தானே வெடிக்கும். இப்பொழுது அது வெடித்துக்கொண்டிருக்கிறது. இதுதான் அவர்களுடைய தத்துவம். அதற்கு வேறுயாரும் தேவை யில்லை. எனக்கு முன்னாலே பேசியவர்கள் சொன்னார்கள். நண்பர் சுப.வீர பாண்டியன் அவர்கள் கூட சொன்னார்கள். இருந்தாலும் சொல்லுகிறேன். நம்முடைய மக்களுக்கு அடிக்கடி சொல்ல வேண்டும். திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும். ஏனென்றால் மக்களுக்கு மறதி அதிகம். அதைத் தான் மூலமாகக் கருதுகின்றார்கள். ஆகவே அவர்களுக்குத்தான் சொல்லுகின்றோம். ஆகா, 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி.

பூஜ்ஜியம் பூஜ்ஜியம் என்று நிறைய பூஜ்ஜி யத்தை போட்டிருக்கிறார்கள். ஊடகவிலாளர் ரமேஷ்பிரபா அவர்கள், வடநாட்டுத் தொலைக் காட்சியைப் பார்ப்பவர்களே பூஜ்ஜியத்திற்கும் குறைவானவர்களே என்று சொன்னார்.

யூகத்தில் பேசக்கூடியவர்கள் அல்லர்

இதில் முடிக்கும்பொழுது என்ன எழுதியிருக் கின்றார்கள்? ஆதாரத்தோடு பேசிப் பழக்கப் பட்டவர்கள் நாங்கள். யூகத்திலே பேசக்கூடிய வர்கள் அல்லர். (கைதட்டல்). அனுமானத்தாலே கற்பனை யாகப் பேசக் கூடியவர்கள் அல்லர். எந்த அறிக் கையைக் காட்டி இராசா மீது நீங்கள் அபாண்டமான குற்றச்சாற்றை சொல்லிக் கொண்டிருந்தீர்களோ அந்த அறிக்கையிலிருந்து சொல்லுகின்றேன். உண்மையாக இழப்பு ஏற்பட்டிருந்தால் அல்லது உண்மையான கணக்காக இருந்தால் என்ன சொல்லியிருக்கின்றார்கள்? இராசா குற்றமற்றவர் என்று ஒவ்வொருவரும் திண்ணைப் பிரச்சாரம் மூலம் சொல்ல வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் இன்னொருவருக்குச் சொல்லுங்கள். இந்த ஊடகங்களின் செய்தியைப் பார்த்து நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

இங்கே திரும்பிய பக்கமெல்லாம் பார்த்துக் கொண்டு வந்தேன். வந்தவர்கள் சொல்லிக்கொண்டே வந்தார்கள். இதுதான் பொறியியற் கல்லூரி; இதுதான் மருத்துவக் கல்லூரி என்று சொன்னார்கள். நமக்கு ஒரு இராசா இல்லையே!

இந்த பெரம்பலூர் பகுதிக்கு இராசாவினுடைய தொண்டு இருக்கிறதே, எல்லோரும் வியப்படை கிறார்கள். இப்படி ஒரு அமைச்சர் இல்லை. இப்படி ஒரு மக்கள் தொண்டன் இல்லையே என்று ஏங்கு கிறார்கள். ஒவ்வொரு பகுதியினரும் இராசாவைப் பார்த்து நமக்கு ஒரு இராசா கிடைக்கவில்லையே என்று கருதுகின்றார்கள்.

மலையேறி கொடநாட்டிற்குச் சென்றவர்கள் எல்லாம் இன்றைக்கு சவால்விட்டுக் கொண்டிருக் கின்றார்கள். அவர்களுக்கு ஒன்றைத் தெளிவாகச் சொல்லுகின்றோம். இதே அணியிலே இருக்கிறவர்கள் சென்னையில் பேசினோம். இதே அணியில் இருக்கிறவர்கள் சவால்விட்டு கேட்கிறோம்.

எங்களுடன் வாதாடத்தயாரா?

எங்களோடு வாதாட யாராவது தயாராக இருக் கிறீர்களா? ஆனால் அவர்கள் யாரும் எங்களுடன் வாதாடத் தயாராக இல்லையே. எதை வேண்டு மானாலும் பேசலாம் என்று நினைக்கி றார்கள்.

ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையிலே சொல்லு கின்றார். அதாவது எவ்வளவு நட்டம் ஏற்பட்டது என்று எல்லோரும் முடிவுக்கு வரலாம். அதென்ன கூட்டுப்புள்ளியில் நிதானிப்பது? ஜூனியர் விகடன் பத்திரிகை பார்ப்பனர் பத்திரிகை. அவர்களுக்கு அடிப்படையான புத்திசாலித்தனமே இல்லை. இது ஒரு அதிகாரியினுடைய அறிக்கை அவ்வளவுதான். இது ஒன்றும் குற்றப்பத்திரிகை அல்ல. இது ஒன்றும் சார்ஜ் ஷீட் அல்ல. விருப்பு, வெறுப்பு இல்லாமல் நடுநிலையிலிருந்து கண்டுபிடிக்க வேண் டிய ஒன்று எப்படித் தயாரிக்கப் பட்டிருக்கின்ற தென்றால், இதில் அவர்கள் எழுதும்பொழுது ஒரு உண்மையைக் கக்கிவிட்டார்கள் அவர்களையும் அறியாமல்.

ஜூனியர் விகடன்

ஜூனியர் விகடன் பத்திரிகையில் உள்ள செய்தியைச் சொல்லுகிறோம். இந்திய தபால் மற்றும் டெலிகாம் துறையின் ஆடிட்டர் இயக்குநர் ஜெனரல் ஆர்.பி. சிங்கை சந்தித்தோம். பொதுமக்கள், பத்திரி கைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல அரசுசார் பற்ற அமைப்புகள் எல்லாம் எங்களிடம் வந்து, இந்த முறைகேடு தொடர்பான பல தகவல் களைச் சொன்னார்கள். இதன் அடிப்படையில்தான் எங்களது விசாரணையே நடந்தது.

எங்களால் அறிக்கை மட்டுமே கொடுக்க முடியும். ஆனால், சி.பி.அய். போன்ற அமைப்புகளே தவறு செய்தவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க முடியும். அந்த நடவடிக்கைக்கு இந்த அறிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

2ஜி விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த இவர்கள் இருவரும் இது தொடர்பான ஆவணங் களைத் திரட்டுவதில் இன்னமும் மும்முரமாகவும் இறங்கி இருக்கிறார்கள்.

இது அரசாங்கத்தினுடைய அறிக்கையா? அல்லது பொதுமக்கள் நடத்திய கூட்டத்தின் திட்டமிட்ட செயலா? இதற்கு பதில் சொல்ல வேண்டாமா?

இந்த அதிகாரி மக்களை சந்திக்கலாமா? இதை திட்டமிட்டே செய்திருக்கிறார்கள். ஏன் திட்ட மிட்டே செய்தார்கள்?

இராசாவினுடைய சாதனை என்ன? தகவல் தொழில் நுட்பத்துறையில் ஒரு பெரிய புரட்சி. சாதாரண புரட்சியல்ல. கிராமத்தில் இருக்கின்ற சாதாரண குப்பன், சுப்பன் எல்லோர் கையிலும் டிரிங், டிரிங் சத்தம் கேட்கிறது.

உலகத்திலேயே இங்குதான் குறைந்த கட்டணம்

அது மட்டுமல்ல தொலைபேசி கட்டணம் உலகத்திலேயே மிகவும் மலிவாக இருக்கக்கூடிய ஒரு நாடு என்றால் அது நம்முடைய நாடுதான் என்கிற பெருமை யாரால் உருவாக்கப்பட்டது? அமைச்சர் இராசாவால் உருவாக்கப்பட்டது (கைதட்டல்). அவருடைய குருவின் பேனாவால் உருவாக்கப்பட்டது (கைதட்டல்).

நடு நிலைமையில் உண்மையை எழுத ஆரம்பித்து விட்டார்கள். எக்கனாமிக் டைம்ஸ் என்கிற பத்திரிகை நமக்கு ஆதரவான பத்திரிகை அல்ல. நேற்று முந்நாள் ஆங்கிலத்தில் வந்திருக்கிற கட்டுரை. அந்த கட்டுரை எழுதியவர் ஆர்.பி.அய். ரங்கநாதன்.

பலூன் வெடிக்கப்போகிறது. உண்மைகள் என்கிற குண்டூசி குத்த அது வெடிக்கப் போகிறது. நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று நினைக்காதீர்கள். கடைசி யாக வெற்றி பெற்றவன் தான் சிரிக்கப் போகிறான் (கைதட்டல்). இடையிலே சிரிக்கிறவன் ஏமாந்து போவான் அல்லது கோமாளி.


கொள்கை அடிப்படையில் செய்தார்

ஆ.இராசா எதையும் செய்யவில்லை. அவர் எப்படி குற்றவாளியாக முடியும்? மாறாக இதை செய்தவர்கள் யார்? அவருக்கு அறிவுரை சொன்னார்கள். அந்த அறிவுரைக்கு ஏற்ப அவர்கள் திட்டமிட்டு செய்தார்கள்.

ஒரு கொள்கை உருவாக்கப்பட்டிருந்தது. அந்த கொள்கை உருவானது யாரால்? யார் காலத்தில்? முழுக்க முழுக்க அந்த கொள்கை உருவாக்கப் பட்டது என்பது பிஜேபி காலத்தில் வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்தில். எத்தனை அமைச்சர் கள் இருந்தார்கள் வரிசையாக. பிரமோத் மகாஜன் வாஜ்பேயினுடைய செல்லப் பிள்ளை என்று பெயர் பெற்றவர்.

விற்பதற்கென்றே ஒரு அமைச்சர்

அடுத்து வந்தவர் அருண்ஷோரி. இப்போதும் இவர் இருக்கிறார். பிரமோத் மகாஜன் இறந்து விட்டார். அருண்ஷோரிக்கு இதுவரையில் இல்லாத ஒரு அமைச்சரவையை வாஜ்பேயி கொடுத்தார். அரசாங்கத்தில் விற்பதற்கென்றே ஒரு துறை.

Minister for Disinvestment இராசா இருந்தது Minister for investment எழுபத்து ஏழாயிரம் கோடி லாபத்தை இராசா கொடுத்திருக்கிறார். அதைப்பற்றி யாரும் பேச மாட்டார்கள். இதை வசதியாக மறந்து விடலாம் என்று நினைக்கின்றார்கள். அது உண்மையாக வந்த பணம். ஆனால் இவர்கள் குற்றம் சொல்லுவது கற்பனையான தொகை மதிப்பீடு (கைதட்டல்).

கருஞ்சட்டைப் பட்டாளம் விடாது

யார் விட்டாலும் கருஞ்சட்டைப் பட்டாளம் விடாது (கைதட்டல்). நாங்கள் கருப்பு மெழுகு வர்த்திகள். நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாத வர்கள். அறிவை எடுத்துச் சொல்லுவது எங்கள் வேலை. உண்மையை எடுத்துச் சொல்லுவது எங்கள் வேலை.

பெரியார் ஒரு உதாரணம் சொன்னார். உட்கார்ந்து கொண்டிருந்த ஒருவர் எந்த பேங்க் விழுந்தாலும் எனக்குக் கவலை இல்லை என்று சொன்னாராம். பெரிய அளவுக்கு வங்கிகள் எல்லாம் விழுகிறது. உடனே செய்தியாளர்கள் எல்லாம் கூடிவிட்டார்கள்.

இவர் பெரிய கோடீஸ்வரர். அம்பானியை விட பெரிய ஆளாக இருப்பார் போலிருக்கிறதே என்று நினைத்துக் கொண்டு கேள்வி கேட்டார்களாம். உலகத்தில் எந்த பேங்க் விழுந்தாலும் கவலை இல்லை என்று சொன்னீர்களே, நீங்கள் யார்? இதுவரையில் நாங்கள் தெரிந்து கொள்ளவில்லை. உங்களுடைய வரலாறுகளை கொஞ்சம் சொல்லுங்கள் என்று ஆவலாகக் கேட்டனராம்.

ஒரு வங்கியிலும் ஒரு காசு போடவில்லை

அந்த நபர் அமைதியாக சிரித்துக் கொண்டே பதில் சொன்னாராம். எந்த வங்கியிலும் நான் ஒரு காசு போடவில்லை எனக்கென்னய்யா கவலை என்று சொன்னாராம். (கைதட்டல்). அதுமாதிரி நாங்கள் ஓட்டுக்களை எல்லாம் எதிர்பார்க்கிற வர்கள் அல்லர். ஆனால் நாங்கள் அடையாளம் காட்டுகிறவர்கள்தான் திராவிட இனத்தின் காவலர்களாக இருப்பார்கள் (கைதட்டல்). அப்படிப்பட்ட ஒரு சூழல்.

அது என்ன உத்தேச நட்டம்?

அவர்கள் சொல்லுகிறார்கள். உத்தேச நட்டம் என்று. அது என்னய்யா நட்டத்தில் உத்தேச நட்டம் என்று. இப்படி நடந்திருந்தால், அப்படி செய்திருந் தால் என்று சொன்னால் என்ன அர்த்தம்? கலைஞர் ஆட்சி வரக் கூடாது என்று எதிர்க்கட்சியினர் நினைக்கின்றனர். அரசியல் ரீதியாக ஒரு கேள்வியைக் கேட்கிறோம் அதற்குப் பதில் சொல்லுங்கள். நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன்னாலேயே இதை ஒரு பிரச்சினையாக ஆக்கி தேர்தல் நேரத்திலே பேசினீர்களா-இல்லையா?

இராசா வெற்றி பெற்றாரே!

அதற்குப் பிறகு இராசா வெற்றி பெற்றாரா-இல்லையா? அதற்குப் பிறகு திமுக வெற்றி பெற்றதா- இல்லையா? அதற்குப் பிறகு யு.பி.ஏ. அரசு வந்ததா- இல்லையா?

நமது தாய்மார்களுக்கு, சகோதரர்களுக்குப் புரியும்படியாக ஒரு உதாரணத்தைச் சொல்லு கின்றேன். எழவுக்குப் போகிறார்கள் புருஷன் செத்துப் போனான் என்று பெண்டாட்டி அழு கிறார். எழவு வீட்டில் வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லாம் அழுவார்கள் உங்களுக்குத் தெரியும்.

எழவு வீட்டில்....

செத்துப் போனவர் யார் என்றே இவர்களுக்குத் தெரியாது. ஆனால் எழவு வீட்டில் பார்த்தீர்களே யானால் செத்துப் போனவன் மனைவியை விட வந்தவர்கள் வேகமாக கட்டிக் கொண்டு அழுவார்கள்.

நமது கவிஞர்களே கிட்ட நிற்க முடியாது. எதுகை மோனை வைத்து ஒப்பாரி வைத்து பாடுவார்கள். காரணம் அவர்கள் வீட்டில் புருஷன் நகை வாங்கிக் கொடுக்காதது. புருஷன் துணிமணி வாங்கிக் கொடுக்காதது இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு அவை எல்லாம் ஒப்பாரி மாதிரி வரும். அது மாதிரி நமது நாட்டு எதிர்க்கட்சிக் காரர்கள் நிலை. இவர்களுக்கு ஏற்பட்ட குறை. அந்தக் காலத்திலேயே ரொம்பத் தெளிவாக அய்யா அவர்கள் சொல்லுவார்கள். இந்தி எதிர்ப்பு காலத்திலிருந்து இது சொல்லப்படுகிறது. பெரியார் சொன்னது எல்லாமே எல்லா காலத்திற்குமே பயன்படக் கூடியதுதான் (கைதட்டல்).

பந்தலிலே பாகற்காய்!

ஒரு வீட்டில் துக்க நிகழ்ச்சி. இறந்தவர் வீட்டிற்கு அக்காள், தங்கை இரண்டு பேரும் போனார்களாம். ஒப்பாரி வைத்து அழுகிறார்கள். நான் ஸ்பெக்ட்ர மையே சொல்லி பதில் சொல்ல விரும்பவில்லை. இதை சொன்னால்தான் உங்களுக்குப் புரியும் என்பதற்காக சொல்லுகிறேன். எழவு வீட்டில் அக்காளும், தங்கையும் அழுகிறார்கள்.

தங்கச்சிக்காரிக்கு எழவு வீட்டுப் பந்தலில் தொங்குகின்ற பாகற்காய் தென்பட்டது. ஒப்பாரியில் சேர்ந்து பாடும்பொழுதே இந்த அம்மையார் சொல்லுகிறார்.

பந்தலிலே பாகற்காய்

பந்தலிலே பாகற்காய்

தொங்குதடி அக்காடி

இப்படி இவர்கள் பாடிக் கொண்டிருந்ததை வீட்டுக்காரம்மா இவ்வளவு துக்கத்திலேயும் இதைப் பார்த்தார்.

வீட்டுக்காரி பார்த்து விட்டாள்

அக்காள் காரி புத்திசாலி. இதை வீட்டுக்காரி கேட்டுவிட்டால் என்ன ஆகும்? என்பதற்காக சொல்லுகிறார். நீ அதைப்பற்றி சொல்லாதே. போகும் பொழுது பார்த்துக் கொள்வோம். போகும் பொழுது பார்த்துக் கொள்வோம் என்று இந்த அம்மா. ஒப்பாரியிலேயே பதில் சொன்னது.

ஆனால் வீட்டுக்காரம்மா இவ்வளவு துக்கத்தி லேயும் இதைப் பார்த்து ஒப்பாரியாலேயே பதில் சொன்னாளாம். அய்யோ அதை விதைக்கல்லவா விட்டிருக்கிறது, அதை விதைக்கல்லவா விட்டிருக் கிறது என்று சொன்னாராம். அதுமாதிரி எதிர்க் கட்சிக்காரர்கள் எவ்வளவுதான் பந்தலிலே பாகற்காய் என்று பாடினாலும், வீட்டுக்காரி சும்மா இருக்க மாட்டாள்.

அது விதைக்கல்லவோ விட்டிருக்கிறது

அது விதைக்கல்லவோ விட்டிருக்கிறது என்று சொல்லுவாள். ஆகவே அந்த அளவுக்கு விழிப்பாக இருக்கின்ற கூட்டம்தான் இந்தக் கூட்டம். மக்கள் உறுதியாக இருக்க வேண்டும். இது இராசாவினு டைய பிரச்சினையே அல்ல. ராசாவை ஒரு காரணம் காட்டி - கலைஞர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரக்கூடாது என்று நினைக்கின்றார்கள்.

108அய் பற்றி சுப.வீ.சொன்னார். இதற்கு முன்னாள் 108 அர்ச்சனை என்பது மட்டும் இருந்தது. இப்பொழுது அர்ச்சனைக்கும் அதற்கும் சம்பந்த மில்லை. அது பக்தி. ஆனால் 108 கலைஞர் காலத்தில் என்ன ஆனது என்றால் இது அர்ச்சனை அல்ல உயிர் காக்கும் திட்டம் என்று ஆக்கினார் பாருங்கள் பாராட்டத்தக்கது. காரணம் அவர் ஈரோட்டு குருகுலத்திலே படித்ததனுடைய விளைவு. அவர் மக்களுக்குச் சொன்னதை செய்ததோடு மட்டுமல்ல, சொல்லாததையும் செய்கின்ற ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கின்றது.

மூன்று லட்சம் பேருக்கு கான்கிரீட் வீடுகள்

கலைஞர் கணக்கெடுத்தார். மூன்று லட்சம் மக்கள் இன்னமும் குடிசையில் இருக்கிறார்களா? தீப்பிடிக்கின்ற வீடாக இருக்கிறதா? அப்படிப்பட்ட மக்களுக்கு தீப்பிடிக்காத கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று சொன்னார்.

தேர்தல் அறிக்கையிலே அதை சொல்லவில்லை. சொல்லாததையும் செய்யக்கூடிய அளவுக்கு வந்தார். ஏழை, எளிய மக்களுக்கு 3 லட்சம் வீடுகள் தயார் என்று சொன்னார். அதிகாரிகளிலிருந்து அமைச் சர்கள் வரை எல்லோரையும் இந்தப் பணியிலே முடுக்கி விட்டார்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்க்கிறார்

துணை முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று பார்க்கின்றார். பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. திமுக ஆட்சி தொலைநோக்கு கண்ணோட்டத்தோடு மக்கள் நல ஆட்சியாக நடைபெறுவது என்பதற்கு அடையாளம் யார் யாருக்கு வீடு என்று அடையாள அட்டை வழங்கி வீடு கொடுக்கக் கூடிய ஆட்சி இந்தியாவிலேயே திமுக ஆட்சியைத் தவிர வேறு ஆட்சி கிடையாது (கைதட்டல்).

மக்களின் நன்றியுணர்ச்சி

மக்கள் நன்றி உணர்ச்சியோடு இருப்பார்கள், இருக்கிறார்கள். இன்னமும் தாய்மார்கள், சகோதரிகள் நன்றி உணர்ச்சியோடு இருக்கிறார்கள். பந்தலிலே பாகற்காய் ஒப்பாரி பாட்டு பாடு கிறவர்கள் எதிர்க்கட்சியினர் என்று மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.

கிராம மக்கள் கைகளில் எல்லாம் தொலைபேசி

இன்றைக்கு கிராமங்களில் உள்ள மக்களின் கைகளில் எல்லாம் தொலைபேசி. மக்கள் நன்றியோடு இருப்பார்கள். ஆட்சிக்காக அல்ல தமிழினத்தின் மீட்சிக்காக ஆட்சி நடத்தி வருபவர் கலைஞர் (கைதட்டல்). முன்பெல்லாம் பெரம்பலூர் ஏரியாவுக்கு வந்தால் அது பனிஷ்மென்ட் ஏரியா என்று சொல்லுவார்கள். தண்டனைக்குரிய ஒரு பகுதி என்று சொல்லுவார்கள். இப்பொழுது எங்களை பெரம்பலூருக்கு அனுப்புங்கள் என்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது (கைதட்டல்). இது எவ்வளவு பெரிய மாற்றம். ஒவ்வொரு துறையிலும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு பார்ப்பன பத்திரிகை எழுதியிருக்கிறது. உண்மையை எதை எல்லாம் மறைக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அதை எல்லாம் அவர்களால் மறைக்க முடியவில்லை. இராசா எதையும் உடனடியாக செய்து முடிப்பார். இதை எல்லாம் செய்திருக்கிறார் என்று எழுதியிருக் கின்றது. நீலகிரி தொகுதியிலே என்னென்ன செய்திருக்கிறார் என்று பட்டியலிட்டிருக்கிறார்.

ஆகவே உச்சி முகர்ந்து நாம் பாராட்ட வேண்டாமா? இந்த உணர்வுதானே முக்கியம். ராமன் மறைந்திருந்து அம்பு எய்தியது போல எய்தலாம். ஆனால் அதனாலே அவரை வீழ்த்த முடியாது. திமுக ஆட்சிக்கு எதிராக செய்யப்படுகிற சூழ்ச்சி இது. பரம்பரை யுத்தம் என்று அந்தம்மையார் சொன்னாரே, அந்த யுத்தம் இப்பொழுது தொடருகிறது. ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே!

2011-க்குப் பின்னாலும் கலைஞர் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்பதை மறந்துவிடாதீர்கள். 1971-க்குப் பிறகு இதேபோல் தான் முன்பு சொன்னார்கள். பெரியார் இராமனை செருப்பால் அடித்து விட்டார். பெரியார் தி.மு.க. ஆட்சியை ஆதரிக்கிறார் என்று பார்ப்பன ஏடுகள்தினமணி, துக்ளக் போன்றவை
எழுதின.

காமராஜர் செய்த தவறு

பச்சைத் தமிழர் காமராஜர் அவர்கள் கூட சொன்னார். ராஜாஜியுடன் கூட்டணி சேர்ந்த பொழுது சொன்னார். என் வாழ்நாளில் செய்யக் கூடாத தவறை செய்தேன். அரசியலில் ராஜாஜி யுடன் நான் சேர்ந்ததால்தான் தேர்தலில் இவ்வளவு பெரிய தோல்வியைச் சந்தித்தேன் என்று சொன்னார். இரண்டு பேரும் சேர்ந்து தி.மு.க.வை எதிர்த்தார்கள். ஆனால் என்ன நடந்தது? ராமனை செருப்பால் அடித்த கட்சிக்கா ஓட்டு என்று தேர்தலில் பிரச்சாரம் செய்தார்கள் அதற்கும், தி.மு.க வுக்கும் சம்பந்தமே இல்லை. செய்தது தந்தை பெரியார். சேலத்தில் பெரியார் ஊர் வலத்தில் வந்த பொழுது அவர் மீது இன்றைய பி.ஜே.பி- அன்றைய ஜன சங்கத்தினர் பெரியார் மீது செருப்பை வீசினர். அந்தச் செருப்பை எடுத்து தோழர்கள் ராமன் படத்தின் மீது அடித்தார்கள். அப்பொழுது இரண்டு மூன்று நாள்கள் இந்த செய்தியே வெளிவரவில்லை.

இதைப் பயன்படுத்தி எப்படியாவது தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது என்று பார்ப்பனர்கள் நினைத்தார்கள்.

துக்ளக் பத்திரிகையில் அட்டைப் படம்

சோ அட்டைப்படத்தைப் போட்டார். தந்தை பெரியார் கையில் ஒரு செருப்பு. ராமன் படத்தை செருப்பால் அடிக்கிற மாதிரி கையைத் தூக்கி நிற்கின்றார். முதல்வர் கலைஞர் அருகில் நிற்கிறார். வரலாறு தெரியாதவர்களுக்காகச் சொல்லு கிறோம். பலே,பலே! . செய்யுங்கள் என்று ஜாடை காட்டி கலைஞர் அவர்கள் சொல்லுவது மாதிரி படம் போட்டனர். உடனே ராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு என்று பெரிய போஸ்டர். கோவில் கதவு அளவுக்கு காங்கிரஸ் சார்பில் அச்சடித்து தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒட்டுகிறார்கள், எல்லா இடத்திலும். இதே மாதிரி அப்பொழுது ஊழலை சொல்லிப் பார்த்தார்கள் எடுபடவில்லை பக்தியைக் கண்டால் நம்மாள் ஏமாறுவார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் என்ன நடந்தது?

1971-மீண்டும் வரப்போகிறது

நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அந்த 1971 தான் மீண்டும் திரும்பப் போகிறது. (கைதட்டல்) இந்திரா காந்தியுடன் தி.மு.க. அப்பொழுது கூட்டு. காமராஜரின் கட்சி-ஸ்தாபன காங்கிரஸ் ராஜகோபலாச்சாரியாருடன் சேர்ந்துதான் தி.மு.க வை எதிர்த்தார். இது பழைய வரலாறு. ஊடகங்கள் எவ்வளவு விஷமம் பண்ணுவார்கள் என்பதைப் பாருங்கள். இந்திராகாந்தி அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் என்ற ஊரில் அந்தம்மா பிரச்சாரம் செய்யச் செல்கிறார். வட நாட்டில் ராம், ராம் என்று சொல்லுவார்கள். வடநாட்டில் ராம், ராம் என்று இவரும் சொல்லுவார். அவரும் சொல்லுவார் இது தான் அங்கு வேலை.

அதனால்தான் ராமனைக் காட்டி சேது சமுத்திர திட்டத்தை நிறுத்தியிருக்கிறார்கள். அயோத்தியில் மசூதியை இடித்த நாள் இன்றைய நாள். 2ஜி.ஸ்பெக்ட்ரத்தை ஆங்கில பத்திரிகைகள் இப்பொழுது எப்படி எடுத்திருக்கிறார்களோ அது போல ராமனை வைத்து அங்கே இருக்கிற பத்திரிகைகாரன் ரொம்ப சன்னமாக விஷமம் செய்தார்கள்.

தி.மு.க.வோடு காங்கிரஸ் கூட்டணி

இந்திராகாந்தி அவர்கள் தி.மு.க. வோடு கூட்டணியில் இருக்கிறார். என்னங்க உங்களுக்கு செய்தி தெரியுமா? தென்னாட்டில் கூட்டு சேர்ந்திருக்கிறீர்களே தி.மு.க. என்று காட்டினார்கள். அந்த அம்மையார் என்ன நடந்தது என்று கேட்டார்.

ராமனை செருப்பால் அடித்தார்கள் என்று சொன்னான். இந்த விஷயத்தை சேலத்தோடு நிறுத்தாமல் டில்லி வரை இவர்கள் கொண்டு சென்றார்கள். அதை உலகம் பூராவும் பரவ வைத்து விட்டார்கள். ராமனை செருப்பால் அடித்தார்கள் என்ற செய்தி அப்பொழுதுதான் இந்தியா முழுவதும் பரவியது.

அந்த அம்மா கேட்டது-இதை யார் செய்தார்கள் என்று . ராமசாமி பெரியாரா? அவர் ரொம்ப வருஷமா இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றார். இது புதிதான செய்தி அல்லவே என்று சொல்லிவிட்டார். இது எவ்வளவு பெரிய ஏமாற்றம் பார்ப்பனர்களுக்கு? தமிழ்நாடு தேர்தல் நடந்தது. தி.மு.க. வராது. ஊழல் நடந்து போய்விட்டது என்று சொன்னார்கள். தேர்தல் முடிந்தது. குடந்தையில் சிவராமன் வெற்றி பெற்றார். சேலத்தில் ராஜாராமன் வெற்றி பெற்றார். இன் னொருவர் ஜெயராமன் வெற்றி பெற்றார்.

தி.மு.க. அமோக வெற்றி

இராமனை செருப்பால் அடிப்பதற்கு முன்பு 138 இடங்களில் தி.மு.கவினர் வெற்றி பெற்றிருந்தனர். இராமனை செருப்பால் அடித்த பிறகு, ஊழல் பிரச்சாரங்களை எல்லாம் செய்த பிறகு தி.மு.க. தோழர்களுக்கு கூட எங்கள் மீது கோபம். என்னய்யா இப்படி செய்து விட்டீர்களே. நாங்கள் வரவிடாமல் செய்து விட்டீர்களே என்று. நான் சொன்னேன். அவசரப்படாதீர்கள் என்று சொன்னோம். தி.மு.க. 183 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க. வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வெற்றி.

வடநாட்டிலே பிளிட்ஸ் என்று ஒரு பத்திரிகை/ அந்த பத்திரிகையில் என்ன எழுதினார்கள் தெரியுமா? பம்பாயிலிருந்து வருகின்ற பிளிட்ஸ் பத்திரிகை, தமிழ்நாடு புரியாத புதிராக இருக்கிறது. ராமனை செருப்பால் அடிப்பதற்கு முன்பு தி.மு.க. 138 இடங்களில் வெற்றி பெற்றது. ராமனை செருப்பால் அடித்ததற்குப் பிறகு 183 இடங்களில் வெற்றி பெற்றது.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், தமழ்நாட்டைப் பொறுத்தவரையிலே இதுமாதிரி காரியங்களை செய்து விட்டு தேர்தலில் நின்றால் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று தெரிகிறது என்று சொன்னார்கள். தி.மு.க வுக்குப் பொருமையாக இருந்ததே தவிர இது ஒன்றும் குறைவில்லை.

எனவேதான் சொல்லுகிறோம். நீங்கள் ஒரு இராசாவை குற்றம் சாற்றி கற்பனையில் மிதக்கா தீர்கள். ராசா ராஜினாமா செய்தார் என்று சொன்னால் அதுதான் திராவிடர் இயக்கத்திற்குள்ள கட்டுப்பாடு, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. என்ற மூன்று சொல்லை அண்ணா அவர்கள் உருவாக்கித் தந்தார்.

ராஜினாமா செய்தார் இராசா

உங்கள் மீது பழி போட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தை முடக்கலாம் என்று பார்க்கிறார்கள். இராசா நீங்கள் என்ன சொல்லு கிறீர்கள்? என்று கேட்டார்கள். என்னுடைய தலைவர் என்ன சொல்லுகிறாரோ அதற்கு கட்டுப்படக்கூடிய முதல் தொண்டனாக நான்தான் இருப்பேன் என்று கட்டுப்பாட்டின் முழு உருவமாக தலை சிறந்த இராணுவ வீரனாக உடனடியாக டில்லி சென்றார். கலைஞர் அவர்கள் சொன்னவுடன் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு வந்து விட்டார்.

சென்னை விமான நிலையமே அதிர்ந்தது

அதற்குப் பிறகு தலை நிமிர்ந்து வந்தார். அவர் அமைச்சராக இருக்கும் பொழுது கூட இப்படி வரவில்லை. சென்னை விமான நிலையம் அதிரக் கூடிய அளவிற்கு தலைநிமிர்ந்து வந்தார். (கைதட்டல்). அது எதைக் காட்டுகிறது? அவரது தோல்வியைக் காட்டுகிறதா? அவரது வெற்றியைக் காட்டுகிறதா? நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும். தி.மு.க- திராவிட இயக்கத்தை யாரும் ஒருபொழுதும் தொட்டுவிட முடியாது. இதுவரை முட்டிப் பார்த்தவர்களின் தலை-சுக்கு நூறாக ஆகியிருக்கிறது. நான் தத்துவ ரீதியாக, கொள்கை ரீதியாகச் சொல்லுகின்றேன்.

பா.ஜ.க.வினுடைய நிலை என்ன? அதற்கும், கட்டுப்பாட்டிற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? அது அகில இந்திய கட்சி. தி.மு.க.வில் தலைவர் ராஜினாமா செய் என்று சொல்லுகின்றார். தொண்டர் உடனே ராஜினாமா செய்கிறார்.

பி.ஜே.பி.யின் எடியூரப்பா...

கருநாடகத்தில் ஒரு எடியூரப்பா இருக்கிறார். பி.ஜே.பி. தலைமையிடமே, நான் ராஜினாமா செய்யமாட்டேன் என்று சொல்லுகிறார். இந்த இரண்டு கட்சிகளின் கட்டுப்பாட்டை ஒப்பிட்டுப் பாருங்கள். தி.மு.க. நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் கட்சி அல்ல.

நீங்கள் எத்தனை கூச்சல் போட்டாலும் திராவிட முன்னேற்றக் கழகம் அதன் சாதனையாலே தனித்தே வெற்றி பெறக்கூடிய அளவுக்கு அதற்கு சக்தி உண்டு.(கைதட்டல்). மக்களுடைய ஆதரவு உண்டு. ஆனால் அதே நேரத்திலே அவர்கள் வகுத்திருக்கிற யூகம் இருக்கிறதே-மதவெறி சக்திகள் மீண்டும் வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் ஒரு மகத்தான விலையைக் கொடுத்திருக்கிறார்கள். எனவே தோழர்களே, நீங்கள் இந்த உணர்வோடு செல்லுங்கள். நாம்தான் வெல்லப் போகிறோம். நாம்தான் வெற்றி பெறப் போகிறோம் (பலத்த கைதட்டல்) மீண்டும் 1971 திரும்பும்-திரும்பப் போகிறது என்பதற்கு இராசாக்களே அதற்கு முன்னாலே நிற்கிறார்கள். இதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஆரியமே விலகி இரு. உன்னுடைய காலம் அடியோடு கூண்டோடு துடைக்கப்படும் என்பதற்கு நாளைய தேர்தல் இதற்கு ஒரு முடிவைச் சொல்லும் என்று கூறி இங்கே தாய்மார்கள் அதிகம் கூடியிருக்கிறார்கள். எங்கு தாய்க்குலம் அதிகம் கூடியிருக்கிறதோ, அந்த வகையிலே வெற்றி நமக்குத்தான் என்று சொல்லி விடைபெறுகிறேன்.

-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.


No comments:

Post a Comment