கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, March 31, 2010

11 இடைத்தேர்தல்களிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி



தி.மு.க. அரசு 2006-ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றப் பின் இதுவரை 11 சட்டமன்ற இடைத்தேர்தல்களைச் சந்தித்து உள்ளது. இவை அனைத்திலுமே தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியே வென்றுள்ளது.

1. முதல் இடைத் தேர்தல் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மரணமடைந்ததைத் தொடர்ந்து மதுரை மத்திய தொகுதியில் நடந்தது. 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கவுஸ் பாட்ஷா வெற்றி பெற்றார்.

2. மதுரை மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகம் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து 2007-ம் ஆண்டு ஜுன் மாதம் நடந்த இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே.ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.

கடந்த 2009-ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் திருமங்கலம், பர்கூர், தொண்டாமுத்தூர், இளையான்குடி, கம்பம், ஸ்ரீவைகுண்டம், வந்தவாசி, திருச்செந்தூர் ஆகிய 8 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

3 திருமங்கலம் தொகுதி ம.தி.மு.க. எம்.எல்.ஏ. வீர. இளவரசன் மறைவைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் லதா அதியமான் வெற்றி பெற்றார்.


4. பர்கூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த தம்பித்துரை(அ.தி.மு.க.) பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.


இதையடுத்து அங்கு நடந்த இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.கே. நரசிம்மன் வெற்றி பெற்றார்.

5. தொண்டா முத்தூர் தொகுதி ம.தி.மு.க. எம்.எல்.ஏ. கண்ணப்பன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடந்தது.

இதில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.என்.கந்தசாமி வெற்றி பெற்றார்.

6. இளையான்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ. கண்ணப்பன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.

இதனையடுத்து இத்தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சுப. மதியரசன் வென்றார்.

7. ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வராஜ் மரணமடைந்ததைத் தொடர்ந்து இங்கு நடந்த இடைத் தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டி வெற்றி பெற்றார்.

8. கம்பம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ம.தி.மு.க.வைச் சேர்ந்த கம்பம் என். ராமகிருஷ்ணன் சட்ட மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தி.மு.க.வில் இணைந்ததை அடுத்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இதில், தி.மு.க.வில் சேர்ந்து போட்டியிட்ட ராமகிருஷ்ணன் மீண்டும் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.

9. வந்தவாசி தொகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.பி. ஜெயராமன் மரணமடைந்ததைத் தொடர்ந்து நடந்த இடைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்ட ஜெயராமன் மகன் கமலக்கண்ணன் வெற்றி பெற்றார்.

10. திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற அனிதாராதா கிருஷ்ணன் தி.மு.க.வில் இணைந்தார். இதனையடுத்து இத்தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு அனிதா ராதாகிருஷ்ணனே மீண்டும் வெற்றி பெற்றார்.

11. பென்னாகரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியண்ணன் மரணமடைந்ததை அடுத்து இத்தொகுதிக்கு கடந்த 27-ந்தேதி நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்ட பெரியண்ணன் மகன் இன்பசேகரன் வெற்றி பெற்று உள்ளார்.

ஆக மொத்தம் கடந்த 4 ஆண்டுகளில் நடந்த 11 இடைத் தேர்தல்களில் அனைத்திலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.

இதில் தி.மு.க. 8 தொகுதிகளையும், காங்கிரஸ் 3 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பர்கூர், தொண்டாமுத்தூர், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம், கம்பம் தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தல்களில் போட்டியிடாமல் அ.தி.மு.க. புறக்கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


பென்னாகரம் - 36,384 வித்தியாசத்தில் திமுக வெற்றி


பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பெரியண்ணன் மரணம் அடைந்ததைத்தொடர்ந்து அந்தத் தொகுதிக்கு கடந்த 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில் திமுக வேட்பாளராக மறைந்த பெரியண்ணன் மகன் இன்பசேகரன் போட்டியிட்டார். பாமக சார்பில் பாமக தலைவர் ஜி.கே.மணி மகன் தமிழ் குமரன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் தர்மபுரி அதிமுக மாவட்டச் செயலாளர் அன்பழகன் போட்டியிட்டார். தேமுதிக சார்பில் காவேரி வர்மன் மற்றும் சுயேட்சைகள் உள்பட 31 பேர் போட்டியிட்டனர்.

இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் இன்பசேகரன் 77,669 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பாமக வேட்பாளர் தமிழ் குமரன் 41,285 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் அன்பழகன் 26,787 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் காவேரி வர்மன் 11,406 வாக்குகளும் பெற்றுள்ளனர்.


இதையடுத்து திமுக வேட்பாளர் இன்பசேகரன் 36,384 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்தத் தேர்தலில் டெபாசிட் இழந்துள்ளது.

அதிமுக டெபாசிட் இழந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக டெபாசிட் இழந்தது அதிமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இடைத்தேர்தல்களில் எப்போதும் டெபாசிட்டை இழக்கும் தேமுதிக, நடந்து முடிந்த பென்னாகரம் இடைத்தேர்தலிலும் டெபாசிட்டை இழந்தது.

இன்று காலை முதலில் எண்ணப்பட்ட தபால் ஓட்டுகளில், திமுக வேட்பாளர் இன்பசேகரனுக்கு 32 ஓட்டுகள் கிடைத்துள்ளன. அதிமுக வேட்பாளர் அன்பழகனுக்கு 3 ஒட்டுகள் கிடைத்துள்ளன. பாமக வேட்பாளருக்கு 2 ஓட்டுகள் கிடைத்துள்ளன. தேமுதிக வேட்பாளருக்கு தபால் ஒட்டுகள் விழவில்லை.









Tuesday, March 30, 2010

தி.மு.க. இலங்கைத் தமிழர்களுக்காக எதுவுமே செய்யவில்லையா?


முதல்வர் கருணாநிதி பதில் :

இலங்கைத் தமிழர் களுக்காக தி.மு.க. எந்தெந்த வகை யில் போராடியிருக்கிறது, என்னென்ன தியாகங்களைச் செய்திருக்கிறது என்பதையும் ஆட்சியையே இழந்ததையும் இலங்கைத் தமிழர்களும், உலகத் தமிழர்களும், ஏன் இந்தியத் தமிழர்களும் நன்கறிவார்கள். ஆனால் தமிழர்களுக்காக தாங்கள் தான் போராடப் புறப்பட்டிருக்கிறோம் என்று சொல்பவர்களுக்கு வேண்டுமானால் அது தெரியாமல் இருக்கலாம். அவர்களும் தெரிந்து கொள்வதற்காக இதோ ஒரு பட்டியல் -

1956ஆம் ஆண்டு அண்ணா தலைமையில் நடை பெற்ற சிதம்பரம் கழகப் பொதுக் குழுவில் இலங்கைத் தமிழர்களுக்காக நான் முன்மொழிந்த தீர்மானம், 1958ஆம் ஆண்டு இலங்கையில் உரிமைகள் பறிக்கப்படுகின்ற தமிழின மக்களுக்காக பேரறிஞர் அண்ணா தலைமையில் ஒரு மாபெரும் பேரணியை தி.மு.க. நடத்தியதைத் தொடர்ந்து இந்தப் பட்டியல் இங்கே இடம் பெறு கிறது.

* 24.8.1977 அன்று சென்னை யிலே 5 லட்சம் பேர் கலந்து கொண்ட பேரணி. கோரிக்கை வைக்காமலே அனைத்துக் கடை களும் அன்று சென்னையில் மூடப் பட்டன.

* 13-8-1981 அன்று பிரத மருக்கு இலங்கையிலே நடைபெறும் கொடுமை குறித்து தந்தி அனுப்பினேன்.

* 18.8.1981 அன்று பிரதமருக்கும், வெளி உறவுத் துறை அமைச்சருக்கும் தந்தி கொடுத்தேன்.

* 21.8.1981 அன்று சட்ட சபையில் அரசின் சார்பில் கொண்டு வரப் பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றி னேன்.

* 29.8.1981 அன்று தி.மு.க. கண்டனப் பேரணி - அரசு தடை - தடையை மீறி ஊர்வலம் - 250 பேர் கைது.

* 2.9.1981 அன்று சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்.

* 3.9.1981 முதல் சென்னையில் அன்றாடம் தடை மீறி ஊர்வலம் - இலங்கைத் தூதுவரது அலுவலகம் முன்பு மறியல்.

* 15.9.1981 தடையை மீறி ஊர்வலம் புறப்பட்ட நான் கைது.

* 27.7.1983 சென்னை யில் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணி

* 28.7.1983 தமிழகம் முழுவதும் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணி.

* 2.8.1983 அனைத்துக் கட்சிகள் நடத்திய முழு அடைப்பு.

* 4.8.1983 மத்திய அரசு அலுவலகங்களின் முன்னால் கறுப்புச் சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம். தமிழர் வீடுகள், கடைகள், அலுவலகங்கள், தொழில கங்கள், வாகனங்கள் அனைத்திலும் கறுப்புக் கொடி.

* 5.8.1983 அன்று தமிழகம் முழுவதும் ரயில் நிறுத்த அறப் போராட்டம்.

* 11, 12, 13, 14.8.1983 தமிழகம் முழுவதும் கண்ட னக் கூட்டங்கள்.

* 10.8.1983 நானும் பேராசிரியரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்.

* 1983 ஆகஸ்ட் முதல் - இரண்டு கோடி கையெ ழுத்துக்கள் பெற்று ஐ.நா. மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

* 8.8.1983 டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர் கள் உண்ணாநோன்பு.

* 10.8.1983 அன்று நானும், பொதுச் செயலாளர் பேராசிரியரும் எங்களுடைய சட்ட மன்ற உறுப்பினர் பதவி களை ராஜினாமா செய் தோம்.

* 85ஆம் ஆண்டு மார்ச் 29 முதல் ஒரு மாத காலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் சென்று இலங்கைத் தமிழர் இன்னல் குறித்து விளக்கம் அளிக்கப் பட்டது. ஒரு மாத காலத்திற்கு விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டது.

* ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.கழகப் பொதுக்குழு முடிவின்படி 29.4.1985 அன்று சென்னை யில் நடைபெற்ற மறியலில் 4002 பேரும், 30ஆம் தேதி திருச்சியில் 3000 பேரும், மே 3ம் தேதி தர்மபுரியில் 1000 பேரும், 6ம் தேதி சேலத்தில் 3000 பேரும், 7ம் தேதி தஞ்சையில் 6000 பேரும், 8ம் தேதி வட ஆர்க்காட்டில் 2500 பேரும், 13ம் தேதி தென் ஆர்க்காட்டில் 3000 பேரும், 15ம் தேதி பெரியார் மாவட்டத்தில் 1500 பேரும், 16ம் தேதி செங்கை அண்ணா மாவட்டத் தில் 3000 பேரும், 17ம் தேதி கோவை நீலகிரி மாவட்டங்களில் 3500 பேரும்,18ம் தேதி ராமனாதபுரம், பசும்பொன், காமராஜர் மாவட்டங்களில் 3000 பேரும், 20ம் தேதி மதுரை மாவட்டத்தில் 5000 பேரும், 22ம் தேதி நெல்லை, குமரி, புதுவையில் 5500 பேரும் ஈடுபட்டு கைதாகினர்.

* 16.5.1985 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டு கைதானேன்.

* 23.8.1985 அன்று சந்திரஹாசன், பால சிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து சென்னையில் "டெசோ'' அமைப்பின் சார்பில் பேரணி. பேரணி முடிவில் நாடு கடத்தும் காரியம் நிறுத்தப் படாவிட்டால் போராட்டம் தொடரும் என்று அறிவித்து, அதனையொட்டி நாடு கடத்தல் உத்தரவு உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டது.

* 30.8.1985 அன்று தமிழகத் தில் வேலை நிறுத்தப் போராட் டம். ஆயிரக் கணக்கானவர்கள் கைது.

* டெசோ அமைப்பின் சார்பில் அக்டோபர் 3ம் தேதி கோவையிலும், 4ம் தேதி திண்டுக்கல்லிலும், 5ம் தேதி தூத்துக்குடியிலும், 6ம் தேதி திருச்சியிலும், 7ம் தேதி சேலத்திலும், 13ம் தேதி வேலூரிலும் மிகப் பிரமாண்ட மான பேரணிகளும், கூட்டங் களும் நடைபெற்றன.

* 4.5.1986 அன்று மதுரையில் "டெசோ'' அமைப்பின் சார்பில் அகில இந்தியத் தலைவர்களை யெல்லாம் அழைத்து மாநாடு. பொதுக் கூட்டம்.

* 31.5.1986 அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு - கறுப்புச் சின்னம் அணிந்து கண்டன ஊர்வலங்கள் - பொதுக் கூட்டங்கள்.

* 3.6.1986 அன்று என்னு டைய பிறந்த நாள் விழா ரத்து செய்யப்பட்டு, போராளி இயக்கங்களுக்காக உண்டியல் மூலம் நிதி வசூலித்துக் கொடுத்த நிகழ்ச்சி.

* 1987ஆம் ஆண்டு அக்டோபரில் பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்திகள் கொடுக்கப்பட்டன.

* 1987ஆம் ஆண்டு அக்டோ பர் 15ஆம் தேதி தி.மு.க. நடத்திய பேரணி

* 16.10.1987 அன்று தளபதி கிட்டுவைக் காணச் சென்ற வைகோ கைது செய்யப்பட்ட தற்காக கண்டன அறிக்கை.

* இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக எட்டு மாநில முதல் அமைச்சர் களுக்கும் இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன்.

* 17.10.1987 அன்று கிட்டுவைச் சந்திக்கச் சென்ற ஆர்க்காடு வீராசாமி, என்.வி.என். சோமு கைது.

* 22.10.1987 அன்று சென்னையில் இந்தியாவின் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட பொதுக் கூட்டம்.

* 24.10.1987 அன்று ரெயில் நிறுத்தப் போராட்டம். தொடர்ந்து மறியல் போராட்டம் - பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கழகத்தினர் கைது.

* 6.11.1987 அன்று சென்னை யில் ஈழத் தமிழர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பாக பல்வேறு கட்சியினர், தமிழ்ப் புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், மகளிர் கலந்து கொண்ட மனிதச் சங்கிலி.

* 11.11.1987 தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி

* 15.3.1989 டெல்லியில் பிரதமர் ராஜீவ் காந்தி இரண்டு முறை சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்தேன்.

* 2.5.1989 அன்று பிரதமர் ராஜீவ் காந்தி முரசொலி மாறனுக்கு இலங்கைப் பிரச்சினை குறித்து நீண்ட கடிதம். 15.5.1989 அன்று முரசொலி மாறன் பிரதமர் ராஜீவுக்கு பதில் கடிதம்.

* 15.6.1989 அன்று சென்னை விமான நிலையத்தில் பிரதமர் ராஜிவ் காந்தியுடன் இலங்கைப் பிரச்சினை குறித்து பேசினேன்.

* 15, 16.12.1989 ஆகிய நாட்களில் விடுதலைப் புலிக ளின் பிரதிநிதிகளான பாலசிங்கம், யோகி ஆகியோரு டன் சந்திப்பு.

* 20.12.1989 அன்று பிரதமருடன் சந்திப்பு.

* 4.1.1990 பல்வேறு போரா ளிக் குழுவினருடன் பிரதமர் கூறியதின் பேரில் சந்திப்பு.

* 1991ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர் பிரச்சினைக் காக கழக ஆட்சி கலைக்கப் பட்டது.

* 17.7.1995 அன்று ஒவ் வொரு நகரத்திலும் கழகத்தினர் கறுப்புச் சின்னம் அணிந்து உண்ணா நோன்பு.

* 2.11.1995 அன்று சென்னையில் கறுப்புக் கொடி ஏந்திய பேரணி

* 3.11.1995 அன்று மாவட்ட தலைநகரங்களில் கறுப்புக் கொடி பேரணி

* தி.மு.கழக அறக்கட்டளை சார்பில் 25 லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர் களுக்கு மருத்துவ உதவி அளிக்க நிதி.

* 30.11.1995 முழு அடைப்பு.

இவ்வாறு இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

ஆனால் இதனை யெல்லாம் தமிழ் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு இலங்கைத் தமிழர் பிரச்சி னையில் நம்மீது களங்கம் கற்பிக்க நினைத்தால், அது நிச்சயமாக நிறைவேறாது என்று உருக்கமாக கூறியுள்ளார் கருணாநிதி.

இலங்கை தமிழர்களுக்காக தி.மு.க. செய்தது என்ன


முதல்-அமைச்சர் கருணாநிதி 20.10.2008 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரிய கண்டுபிடிப்பு

1956-ம் ஆண்டிலேயே இலங்கை தமிழர்கள் உரிமை, மொழி, கலாசாரம் இவற்றைப் பாதுகாத்திடவும்- சிங்கள மொழியினர் ஆதிக்கம் அகன்றிடவும் அங்குள்ள தமிழர் கிளர்ந்தெழுந்தனர் என்பதைக் குறிப்பிடவும்; இன்று நேற்றல்ல- இலங்கை தமிழர் பிரச்சினை 1956 முதற்கொண்டு உருவானதாகும் என்று நான் சுட்டிக்காட்டியதற்கு ஆதாரமாக 1956-ல் சிதம்பரம் தி.மு.க. பொது குழுவிலேயே நான் முன்மொழிந்து- பொன்னம்பலனார் வழி மொழிந்த தீர்மானத்தை சான்றாக கூறியிருந்தேன்.

அதைப் படித்து விட்டு சிலர் 1956-ம் ஆண்டிலிருந்து- இருந்து வருகிற இலங்கை பிரச்சினையைத் தீர்க்க முடியாத கருணாநிதி; இப்போது தீர்க்கப் போவதாகச் சொல்வது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டை மறைப்பதற்காகத் தான் என்று அரிய கண்டுபிடிப்பைச் செய்துள்ளார்கள்.

அலட்சியப்படுத்திவிட்டு

இந்தியாவில்; தமிழ் மாநிலத்தில் மட்டும் மின்சாரப் பற்றாக்குறை இருப்பதாகவும்- மற்ற மாநிலங்களில் மின்சாரத் தடையே கிடையாதென்றும் பொய் கூறி- அரசியலுக்காகப் பேசுவோரின் அறியாமை கண்டு, அப்படிப் பேசுவோரை அலட்சியப்படுத்தி விட்டு; நாம் நமது ரத்தத்துடன் ஊறிய தமிழ் உணர்வு கொண்ட ஈழத் தமிழர்களின் இன்னல் துடைக்கும் பணியினைத் தொடருவோம்.

இலங்கை பிரச்சினை- அங்கே தமிழ் மொழியையும்- தமிழரையும் தாழ்த்தும் பிரச்சினை- அதனை எதிர்த்து முழங்கிய பிரச்சினை- இவையனைத்தும் 1956-ல் என்று தான் நாம் நினைத்திருக்கிறோம்; ஆனால்; இன்னும் நீண்ட கால வரலாற்றைக் கொண்டது அந்த பிரச்சினை என்பதற்கு; இரண்டு நாளைக்கு முன்பு; திராவிடர் கழகத் தலைவரும், தமிழர் தலைவருமான வீரமணி என்னிடம் அளித்த பழைய "விடுதலை'' ஏடு சான்றாகத் திகழ்கிறது.

1939-ல் நிறைவேற்றிய தீர்மானம்

1939-ல் இந்தியாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் வாழும் தமிழர் பற்றி பண்டித நேரு குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டியிருந்தேன் அல்லவா? அதே ஆண்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்க நிர்வாகக் குழுவில் (10-8-1939) ஈரோடு நகரில் தந்தை பெரியாரும்- அவர் தலைமையில் குமாரராஜா முத்தையா, ஏ.டி.பன்னீர்செல்வம், டபிள்ï.பி.ஏ.சவுந்திரபாண்டியன், சி.என்.அண்ணாதுரை (அண்ணா), என்.ஆர்.சாமியப்ப முதலியார், கி.ஆ.பெ.விஸ்வநாதம், டி.ஏ.வி.நாதன், சென்னை, பி.பாலசுப்பிரமணியம், சென்னை, எஸ்.நடேச முதலியார், ஏ.கே.தங்கவேலு முதலியார், காஞ்சி, பட்டுக்கோட்டை அழகிரி, என்.வி.நடராசன், சென்னை, என்.ஜீவரத்தினம் சென்னை, டி.சண்முகம் பிள்ளை திருவொற்றிïர், சி.டி.நாயகம், சென்னை, எம்.ஆர்.திருமலைசாமி, திருச்சி, டி.பி.வேதாசலம், டாக்டர் தர்மாம்பாள் சென்னை, வி.வி.ராமசாமி, விருதுநகர் ஆகியோர் கலந்து கொண்டு நிறைவேற்றிய முதல் தீர்மானம்-

"இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை சர்க்கார் கொடுமையாய் நடத்துவதையும், அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்து வருவதையும் இந்த குழு வன்மையாய்க் கண்டிக்கிறது.''

நீதி கட்சியினர்

ஆம்; 1939-ம் ஆண்டு பெரியார், அண்ணா, அழகிரிசாமி, கி.ஆ.பெ., பன்னீர்செல்வம் போன்ற பெரிய தலைவர்களால் நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானமே- 17 ஆண்டு காலத்திற்குப் பிறகும் செயல் முறைக்கு வர முடியாமல்- இலங்கை தமிழர்களின் இன்னல்களைக் களைய முடியாமல் போனதென்றால்- அது பற்றி 1956லும் ஒரு தீர்மானம் தி.மு.க. பொது குழுவில் நிறைவேற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டதென்றால்- மொத்தத்தில் தமிழர் தலைவர்கள் அனைவரும் நடத்திய போராட்டத்திற்கு- சிந்திய ரத்தம்- கொடுத்த உயிர்- பறி போன உடைமை- இவையெதுவும் போதவில்லை என்பது தானே பொருள்?

அதனால் தானே இப்போது மிச்சமிருக்கிற தமிழ் இனத்தின் பிஞ்சுகள், அரும்புகள் உள்ளிட்ட மாந்தரையாவது மீட்பதற்கு வழி காண- நம்மிடையே ஏற்பட்ட துன்ப துயரங்களையும்- அதிர்ச்சிகளையும் தாங்கிக் கொண்டு; ஓரணியில் திரண்டு இந்திய அரசிடம் கேட்கும் உதவியையாவது ஒற்றுமையுடன் கேட்போம் என்று அனைத்து கட்சி தலைவர்கள் சார்பில் அன்பான வேண்டுகோள் வைத்தோம்.

தாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை 17 ஆண்டுகளாக நிறைவேற்ற முடியவில்லையே என்று ஏங்கி; தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதி கட்சியினர்) அந்த தீர்மானத்தை திரிசங்கு சொர்க்கத்தில் ஊசலாட விட்டு விடவில்லை. எனவே; அந்த தீர்மானத்தின் தொடர்ச்சியாக 1956-ல் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை செயல்படுத்த முனைவதே, நாம், தமிழ்ப்பால் அருந்தியவர்கள் என்பதை தரணிக்கு உணர்த்தும் செயலாக இருக்க முடியும்.

பண்டாரக வன்னியன் வரலாறு

இலங்கையின் வரலாறு நமது தஞ்சை ராசராசன் எனும் பெருவேந்தன் காலத்துக்கு முன்பிருந்தே நமக்குப் பால பாடம்- இன்னும் அந்த வரலாற்றின் சில எழுச்சி மிகு பக்கங்களைப் போல அமைந்த கண்டி மன்னன் விக்கிரம ராஜ சிங்கன் அங்கே கி.பி. 1815 வரையில் ஆட்சி புரிந்த வரலாறும்- அதே ஆண்டில் கண்ணுசாமி என்ற அந்த தமிழ் மன்னனின் வீழ்ச்சியும்- தோற்றுப் போய் சிறைப்பட்ட கண்ணுசாமி (ஆம்; கண்டி, விக்கிரம ராஜ சிங்கன்) தமிழ்நாட்டில் வேலூரில் சிறை வைக்கப்பட்டதும் நானறிந்த வரலாறு என்பதால்; பதினாறு ஆண்டுகள் குடும்பத்துடன் சிறையிலிருந்து, சிறையிலேயே வேலூரில் மாண்டு விட்ட அந்த மன்னன் பெயரையும், வரலாற்றையும் மறந்து விடாமல் நினைவூட்ட; நான் முதல்-அமைச்சராக இருந்த 1-7-1990 அன்று வேலூரில் கண்டி தமிழ் மன்னன் பெயரால் முத்து மண்டபம் அமைத்து திறப்பு விழாவும் நடத்தினேன்.

இதெல்லாம் வரலாற்றுத் துளிகள்- வாய் புளித்ததோ; மாங்காய் புளித்ததோ என்று பேசுபவர்களுக்கு வக்கணையாகத் தான் தோன்றும்- இலங்கை தீவில் அரசோச்சிய தமிழ் அரசர்களில் பண்டாரக வன்னியனின் வரலாற்றை நூலாக எழுதியவன் நான் என்ற முறையில்- இலங்கை வரலாற்றில் தந்தை செல்வநாயகம் வரையில் என் நெஞ்சில் நிற்பவர்கள்- அந்த தமிழ் உணர்வு தரிசாகப் போய் விடாத காரணத்தினால் தான் இன்றும் அந்த தமிழர்கள் இலங்கையில் படும் துன்பங்களை எண்ணித் துடித்துப்போகிறேன்.

தி.மு.க. செய்தது என்ன

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தி.மு.க. என்ன செய்தது என்று தொடர்ந்து சிலர் தொடர்ந்து கேள்வி கேட்டு வருபவர்களுக்கு சுருக்கமாக அந்த பட்டியலைத் தருகின்றேன்.

1981-ம் ஆண்டு இலங்கையிலே தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி கிடைத்த அன்றைய தினமே, ஆகஸ்டு 13-ந் தேதியன்று நான் அன்றைய இந்திய பிரதமருக்கு அனுப்பிய தந்தியில் "கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் இலங்கையின் கிழக்கிலும், தெற்கிலும் கலவரங்கள் பரவி வருகின்றன என்று கூறுகின்றன. அங்குள்ள அரசாங்கமே கலவரத்தை ஊக்குவிப்பதாகத் தோன்றுகின்றது. வட கொழும்பில் தமிழர்களின் இல்லங்கள் தாக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் ரெயில்கள் தாக்கப்பட்டுள்ளன. அதில் இருந்த தமிழ் பயணிகள் கொள்ளை அடிக்கப்பட்டு வண்டியை விட்டு வழியில் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள்.

அம்பாரை கோவில் தேர் நொறுக்கப்பட்டிருக்கிறது. இந்திய வம்சாவழித் தமிழர்களும் இலங்கை முழுதும் பல இடங்களில் தாக்கப்பட்டிருக்கிறார்கள். நிலைமை கட்டுப்பாட்டை மீறிப் போய் விட்டது. கொழும்பில் வயதான தமிழ் மூதாட்டி ஒருவர் பட்டப்பகலிலேயே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழர்களுக்கு நிவாரணமளிக்க முன் வரும் அமைப்புகள் இயங்க அரசாங்கம் அனுமதி தர மறுக்கிறது. கலவரங்களை அடக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. செய்திகள் உங்களுக்கு நேரடியாகக் கிடைக்கும் ஆதலால் இந்த பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் தாங்கள் தங்கள் கவனத்தை செலுத்தி உதவிட வேண்டுகிறேன்'' என்று கேட்டுக்கொண்டேன்.

கைது செய்யப்பட்டேன்

அந்த தந்தியைத் தொடர்ந்து 18-8-1981 அன்று மீண்டும் ஒரு தந்தியை இலங்கை தமிழர்களின் துயரம் குறித்து பிரதமருக்கு அனுப்பினேன். இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்து, சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கலந்து கொள்ள தமிழக அரசின் தடை உத்தரவை மீறி- பல்லாயிரக்கணக்கானவர்கள் 29-8-1981 அன்று குழுமினர். ஆனால் மாவட்ட செயலாளர் சீத்தாபதி, சட்ட மன்ற உறுப்பினர்கள் து.புருஷோத்தமன், என்.வி.என்.சோமு உள்பட 250 பேரை மட்டுமே காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்யாவிட்டால் நானே போராட்டத்திற்கு தலைமை தாங்குவேன் என்று அறிவித்தேன். அ.தி.மு.க. அரசு என்னையும் கைது செய்தது.

ஆம், இலங்கை தமிழர்களுக்கான பிரச்சினையில் நான் கைது செய்யப்பட்டேன். நான் இலங்கை தமிழர்களுக்காக கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் எங்கும் கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள், கடை அடைப்புகள்- போராட்டங்கள் நடைபெற்றன. எனது வேண்டுகோளையும் மீறி பலர் நா விடுதலை செய்யப்பட வேண்டுமென்று கோரி குறிப்பாக கோவிலடி பிருந்தாவன், திருச்சி மனோகரன், திருவாரூர் கிட்டு, பெருந்துறை முத்துப்பாண்டியன், கல்லாவி ராஜேந்திரன், மேல்மாயில் ஜெகன்னாதன், சென்னை மேரி போன்றவர்கள் தீக்குளித்தனர்.

கொன்று குவித்தனர்

அதன் பின்னர் 1983-ம் ஆண்டு தான் இலங்கையில் தமிழர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர்'' என்கிற ஏடு 1983-ல் எழுதியது வருமாறு:-

"சிங்கள ராணுவத்தினர் 30 பேர் மன்னார் பகுதியில் உள்ள மக்களைக் கொன்று குவிக்கத் தொடங்கினார்கள். இவர்களது கொடூரத் தாக்குதல் ஆறு மணி நேரம் தொடர்ந்தது. மன்னார் நகரின் மத்திய மருத்துவமனையை ராணுவத்தினர் வெறி பிடித்துத் தாக்கினர். சாலைகளில் சென்ற வாகனங்களை நிறுத்தி அதில் உள்ளே இருந்தோரை வெளியே இழுத்துப் போட்டு அந்த இடத்திலேயே ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றார்கள். அருகில் இருந்த அஞ்சலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 15 பேரை வரிசையாக நிற்க வைத்து அவர்களை நிர்த்தாட்சண்யமாக சுட்டுப் படுகொலை புரிந்தார்கள். வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த உழவர்களையும் சிங்கள ராணுவம் விடவில்லை. அவர்களையும் சுட்டுத் தீர்த்தது. இந்த திடீர் தாக்குதலின் முடிவில் 150 பேர் செத்துக் கிடந்தார்கள். 20 தமிழ் இளைஞர்கள் காணாமல் போனார்கள். இவர்கள் அருகில் இருந்த ராணுவ முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டதாக நேரில் கண்டவர்கள் கூறினார்கள்''.

சிறைக்காவலர் முன்னிலையில்

25-7-1983 அன்று வெலிக்கடை சிறைச்சாலைக்குள் சிங்களவர் நுழைந்து தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்றவர்களை- கத்திகள், கோடரிகள், இரும்புக் கம்பிகள், விறகுக் கட்டைகளால் தாக்கினர். அனைத்துக் கொடுமைகளும் சிறைக் காவலர் முன்னிலையிலேயே நடைபெற்றது. அந்த ஒரு நாளில் மட்டும் 35 தமிழர்கள் படுகொலைக்கு ஆளானார்கள். செய்தி கிடைத்தவுடன் தி.மு.க. கேளாக் காதுடையதாகவா இருந்தது? கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மறுநாளே சென்னையில் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடைபெறும் என்று அறிவித்தேன். 7 மணி நேர அவகாசத்தில் 8 லட்சம் பேர் அந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

27-7-1983 அன்று மீண்டும் 18 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து நான்கு நாட்கள் இலங்கையிலே நடைபெற்ற வன்முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலைக்கு ஆளானார்கள் என்று செய்தி கிடைத்தது. சென்னையிலே குடியிருந்த குட்டிமணி, ஜெகன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன்.

31-7-1983 அன்று முகவை மாவட்ட கழக மாநாடு என அறிவிக்கப்பட்டதை- இலங்கை தமிழர் பாதுகாப்பு மாநாடாக மாற்றப்பட்டு ராமநாதபுரம் நகரிலே நடத்தப்பட்டது. தமிழக அரசு 2-8-1983 அன்று முழு அடைப்பு என்று அறிவித்து தமிழகம் முழுவதிலும் வெற்றிகரமாக நடத்தியது.

எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா

4-8-1983 அன்று மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டமும், 5-8-1983 அன்று ரெயில் நிறுத்தப் போராட்டமும் நடத்துவதென்று முகவை மாவட்ட மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. மத்திய அரசு தானாகவே முன் வந்து 5-8-83 அன்று தமிழகத்திலே ரெயில்கள் ஓடாது என அறிவித்தது.

7-8-1983 அன்று தி.மு.க. செயற்குழு கூடி, ஐ.நா. மன்றத்திற்கு இலங்கை தமிழர்களைப் பாதுகாக்க வேண்டுமென்று கோரி ஒரு கோடி கையெழுத்துக்களைப் பெற்று ஐ.நா. சபைக்கு அனுப்ப முடிவு செய்து, அவ்வாறே வழக்கறிஞர் டி.பி.ராதாகிருஷ்ணன் மூலமாக அனுப்பியும் வைக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் ஈழத் தமிழர் பிரச்சினையில் போதிய கவனம் செலுத்திட வலியுறுத்தி, 10-8-1983 அன்று நானும், கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியரும் எங்களுடைய சட்ட மன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தோம்.

பாதுகாப்பு மாநாடு

1983-ம் ஆண்டு ஆகஸ்டு திங்களில் நான்கு நாட்கள் தமிழகம் முழுதும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக கூட்டங்களை நடத்தினோம். எதிர்க்கட்சியிலே தான் அப்போது இருந்தோமென்றாலும், 25-8-1983 அன்று பிரதமரின் தூதுவராக ஜி.பார்த்தசாரதி என்னை சென்னையிலே சந்தித்து பேசி விட்டுத் தான் பிறகு இலங்கை சென்றார்.

அவர் என்னைச் சந்தித்த போது இலங்கை தமிழர் பிரச்சினையில் பிரதமர் இந்திரா காந்தி விடுதலைப் போராளிகளிடம் கொண்டுள்ள பரிவையும், அந்த அடிப்படையில் அவர் வழங்கிடும் உதவிகளையும் என்னிடம் விளக்கினார்.

மூன்றாண்டு கால அமைதிக்குப் பின் 1986-ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் திங்களில் இலங்கையில் சிங்கள ராணுவத்தின் கொடுமைகள் அதிகரித்தன. அம்பாறை மாவட்டத்தில் தங்கவேலாயுதபுரம் என்ற கிராமத்தில் ஒரு நாள் இலங்கை ராணுவத்தினர் நுழைந்து கண்ணில் பட்ட பெண்களையும், வயதானவர்களையும், குழந்தைகளையும் குருவிகளைச் சுடுவது போலச் சுட்டுக் கொன்றார்கள். ஒரே நாளில் அறுபதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் மாண்டனர்.

தொடர்ந்து இப்படிப்பட்ட செய்திகள் தமிழகத்திற்கு வந்து கொண்டேயிருந்ததால், 26.3.1986 அன்று சென்னையில் `டெசோ'வின் அமைப்புக் கூட்டம் என் தலைமையிலே கூடி, மே திங்கள் 4-ம் நாள் மதுரை மாநகரில் நான் ஏற்கனவே குறிப்பிட்ட `டெசோ' சார்பில் அனைத்திந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களை எல்லாம் அழைத்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டினை நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது.

கறுப்புச் சின்னம் அணிந்து

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழ்நாடு மாத்திரமல்லாமல் இந்தியாவிலே உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் அக்கறை கொண்டிருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டி மத்திய அரசு தனது மெத்தனத்திலிருந்து விடுபட்டுத் தக்க தீர்வு காண முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

1986-ம் ஆண்டு மே திங்கள் இறுதியில் பசும்பொன், ராமநாதபுரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த எனக்கு, இலங்கையிலே சிங்கள ராணுவத்தின் அடக்குமுறை அதிகமாகி அன்றாடம் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகின்றார்கள் என்ற செய்தி வந்து, சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டுச் சென்னை திரும்பினேன். சென்னை வந்ததும், தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசனும், சிவசிதம்பரம், யோகேஸ்வரன், சம்பந்தம், தங்கத்துரை ஆகியோரும் என்னைச் சந்தித்து அங்குள்ள நிலைமைகளை விளக்கினார்கள்.

இலங்கையில் நடைபெறும் கொடுமைகளைத் தடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்த 31.5.1986 அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்த வேண்டுமென்றும், அனைவரும் கறுப்புச் சின்னம் அணிந்து ஆங்காங்கு கண்டன ஊர்வலங்களும், பொது கூட்டங்களும் நடத்த வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தேன்.

அந்த ஆண்டும் என்னுடைய பிறந்த நாள் விழாவை நடத்த வேண்டாமென்றும், பிறந்த நாளுக்காக எனக்கு மாலை அணிவிப்பதற்குப் பதிலாக ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கு உதவிட நிதி அளித்திட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டேன்.

முழு அடைப்பு போராட்டம்

31.5.1986 அன்று தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிகரமாக அமைந்தது. அனைத்துப் போக்குவரத்துக்களும், விமானம், ரெயில் போக்குவரத்து உள்பட அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஒரு கடை கூடத் திறக்கப்படவில்லை. சென்னையில் நாஞ்சிலார் தலைமையில் பிரமாண்டமான கண்டன ஊர்வலம் நடைபெற்றது.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், எழுதிக் கொண்டே போகலாம். 1997-ம் ஆண்டு தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது, இலங்கை தமிழர் பிரச்சினை எழுந்த போது இதே ஜெயலலிதா என்ன சொன்னார்?

சட்டம்-ஒழுங்கை சீர் குலைக்க கருணாநிதி முயல்கிறார் என்றும், விடுதலைப்புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கி விட்டார்கள் என்றும் உள்நோக்கத்தோடு ஜெயலலிதா கடுமையாக ஓர் அறிக்கை விடுத்தார்.

ஜெயலலிதாவுக்கு ராமதாசின் பதில்

அதற்கு நான் பதில் கூறுவதற்கு முன்பே, பா.ம.க.வின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அப்போது விடுத்த அறிக்கையில் "தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க முயல்கிறார் என்று தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி மீது ஜெயலலிதா குற்றம் சாட்டுவது கேலிக்குரிய செய்தியாகும்.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறைப்பதற்காக இப்படி அநாகரிகமான முறையில் குற்றம் சுமத்துவது ஒரு பொறுப்புள்ள கட்சியின் செயலாகாது. கடந்த கால ஜெயலலிதா ஆட்சி, நீதிமன்ற வளாகத்திலும், பொது இடங்களிலும் பத்திரிகைகளின் மீதும் தாக்குதல் நடத்திய, குண்டர்களின் புகலிடமாக இருந்துள்ளது என்பதை தமிழக மக்களால் என்றும் மறக்க முடியாது.

இவற்றையெல்லாம் மறந்து விட்டு தன் நாட்டு விடுதலைக்காக போராடி வரும் ஈழப் போராளிகளைக் கொச்சைப் படுத்தி, அவர்கள் இந்த ஆட்சியில் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கி விட்டார்கள் என்று ஜெயலலிதா கூறுவது எந்த வகையில் நியாயம்?

ஆட்சியில் அமர்ந்து சிறிது காலமே ஆன நிலையில் தமிழக முதல்வர் மீது இப்படி பொறுப்பற்ற முறையிலே வாய்க்கு வந்தபடி குறை கூறுவது ஆட்சி கட்டிலில் இருந்து இறங்கிய கட்சிக்குரிய நல்ல மரபாகாது.

கருணாநிதி ஆட்சியில் புலிகள் மீண்டும் தலை தூக்கி விட்டார்கள் என்று ஜெயலலிதா கூறிக்கொண்டே துயருற்று அவதியுறும் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு அரசியலில் காலம் கடத்தி விடலாம் என நினைக்கின்றார் போலும். கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் ஈழத் தமிழர்களின் குழந்தைகளுக்கு மீண்டும் படிப்புரிமை கொடுத்து தமிழக வரலாற்றில் தமிழின உணர்வுகளுக்கு எதிராக படிந்திருந்த களங்கத்தை துடைத்தெறிந்தார்.

மனிதாபிமான அடிப்படையில் பார்க்கும்போது, கருணாநிதியின் அத்தகைய நடவடிக்கை பாராட்டுக்குரியது.

தமிழின உணர்வு அற்ற சிலரின் வறட்டுக் கூச்சலுக்கு செவி மடுத்து அப்பாவி ஈழத் தமிழர்களை மீண்டும் பலிக்கடா ஆக்காமல் இருக்க வேண்டும் என முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெளிவாகச் சொல்லியிருந்தார்.

மனித சங்கிலி எதற்கு

அனைத்து கட்சிகளின் சார்பில் 21-ந் தேதி நடத்தவுள்ள "மனிதச் சங்கிலி அணிவகுப்பைப்'' பற்றி அதனால் என்ன பயன் என்று ராசிபுரத்திலே போய் ஜெயலலிதா கேள்வி கேட்கிறார். இதே கேள்வியைக் கேட்டு, என்ன பேசுவது என்று தெரியாமலே வேறு சிலர் பேசித் திரிகிறார்கள்!

இலங்கையில் தமிழினம் படும் துயர் கண்டு தாய்த் தமிழகம் கண்ணீர் வடிக்கிறது என்பதை எடுத்துக் காட்டத் தான் மனிதச் சங்கிலி. எந்த இனமானத் தமிழ் மகன், எந்த மண்ணைத் திருத்தி வளமிகு சோலையாக்கினானோ, அந்த மண்ணிலே அவன் தலை பந்தாடப்படுகின்ற செய்தி கேட்டு, ஆயிரம் செந்தேள் செவியிலே கொட்டியது போல் துள்ளுகிறோம், துவண்டு போகிறோம் - அதனை வெளிப்படுத்தத் தான் மனிதச் சங்கிலி.

முடிவே கிடையாதா?

இலங்கை கொடுமைக்கு ஒரு முடிவு காண இந்திய பேரரசு ஒருக்கணமும் தயங்காமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தத் தான் மனிதச் சங்கிலி. ஐந்து கோடி தமிழர்கள் மட்டுமல்ல; அயல் நாடுகளில் பரவியுள்ள தமிழ் இனம் முழுவதும் "இதற்கோர் முடிவே கிடையாதா?'' என்று கொதித்துக் கேட்கின்ற நிலையை உலகத்திற்கு வெளிப்படுத்தத் தான் மனிதச் சங்கிலி?

"தென் திசையைப் பார்க்கின்றேன்; என் சொல்வேன் என்றன் சிந்தையெலாம் தோள்கள் எல்லாம் பூரிக்குதடடா!'' எனப் பாடினாரே பாவேந்தர் - அன்றந்த இலங்கையினை ஆண்ட மறத் தமிழன் ராவணனின் புகழ் பாடும் கவிதையினைப் படிக்கும் போதெல்லாம் சிந்தையும், தோள்களும் பூரிக்கும் என்பது உண்மை! ஆனால் இன்று, சிந்தையெலாம் தோள்கள் எல்லாம் துடிக்குதடடா! என்ன சொல்வது? என்பதை எடுத்துக் காட்டத் தான் மனிதச் சங்கிலி!

21-ந் தேதி தமிழகத் தலைநகராம் சென்னையிலே நடைபெறும் இலங்கைத் தமிழர் பாதுகாப்புக்கான மனித சங்கிலி சரியாக 3 மணிக்கு தொடங்கும்.

தமிழனாக பிறந்தவன்

தமிழ் உள்ளங்கள் அத்தனையிலும் இன்று தணல் அன்றோ அள்ளி அள்ளிக் கொட்டப்பட்டுள்ளது! வெளிநாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் தொலைபேசி வாயிலாக என்னிடம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவிக்கிறார்கள்.

கண்ணீரோடு நன்றி தெரிவிக்கிறார்கள். அந்த கண்ணீருடன் இணைந்து அவர் தம் கண்களிலே கனல் பறப்பதை அவர்தம் வாய்ச் சொற்கள் நம்மிடம் தெரிவிக்கின்றன.

தமிழன் கொல்லப்படுகிறான், அது கேட்டு தமிழனாகப் பிறந்தவனும்- இருப்பவனும் கொதிக்கிறான். இந்த செய்தி உலகத்திற்கு எட்ட வேண்டுமே என்பதற்காக தான் மனிதச் சங்கிலி. உதவாதினி ஒரு தாமதம், சென்னைக்கு விரைந்திட; உடனே எழுக தமிழா!

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

53 ஆண்டுகால சட்டமன்ற வரலாற்றில் கருணாநிதி ஆற்றிய முதல் உரை


1957-ல்

முதல் முதலாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் கருணாநிதி, சட்டமன்றத்தில் 4.05.1957-ல் முதல் முறையாக உரையாற்றினார். அவரது உரை 50 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு ஒலிக்கப் போகிறது என்று அப்போது யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. முதல்-அமைச்சர் கருணாநிதி ஆற்றிய முதல் உரை பின்வருமாறு:-

அவைத்தலைவர் அவர்களே, இன்று மேன்மை தங்கிய கவர்னருடைய உரையை பற்றி போற்றவும் வரவில்லை. தூற்றவும் வரவில்லை. என்னுடைய கருத்துரையை ஆற்றவே வந்திருக்கிறேன். கவர்னர் உரையைப்பற்றி இங்கு நண்பர்கள் அபிப்பிராயம் தெரிவித்த நேரத்தில், எதிர்கட்சியினரைப் பற்றி இங்கு பேசப்பட்ட நேரத்தில், குறை கூறுவதையே எதிர்கட்சியினர் தொழிலாக கொண்டு பேசுகிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டது. குறைகளை எடுத்துச்சொல்லி நிறைவேற்றுவதற்காகதான் சட்டமன்றத்துக்கு வந்திருக்கிறோமே தவிர, செய்திருக்கிற காரியங்களை பன்னிப்பன்னி சொல்லி, அவைகளை பாராட்டுவதற்காக நாம் இங்கு வரவில்லை. அத்தகைய காரியங்களுக்காக நடத்தப்படுகின்ற பாராட்டு விழாக்கள் எல்லாம், வெளியிலே அந்த காரியங்களால் பயன்பெறுகிறவர்களால் நடத்தப்படுவது மிகப்பொருத்தமுடையது என்பதை நான் இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. குறைகளை எடுத்து சொல்லி சரி செய்து கொள்வதற்காகவே சட்டமன்றத்துக்கு வந்திருக்கிறோம்.

அந்த காலத்தில் மன்னர்கள், மக்களின் குறைகளை தெரிந்து அவர்களுக்கு நல்வாழ்வு நல்குவதற்கு இரவு நேரங்களில் நகர்சோதனை என்ற பெயரால் மாறுவேடம் தாங்கி, மக்களை சந்தித்து, அவர்களுடைய குறைகளை எல்லாம் தெரிந்து, கொலுமண்டபத்தில் உட்கார்ந்து அந்த குறைகளை போக்கினார்கள் என்று பழைய கால சரித்திரத்திலிருந்து படித்திருக்கிறோம். இது மன்னர்கள் ஆளும் காலம் அல்ல, மக்கள் ஆளுகின்ற காலம். இந்த காலத்திலும், அதே போல் மந்திரிகள் மாறுவேடம் தாங்கி மக்களின் குறைகளை கண்டு வர வேண்டுமென்று நான் கோரவில்லை. நாடகத்திலே அனுபவம் பெற்ற நாங்கள் ஒருவேளை ஆளும் கட்சியினராக வந்தால் அந்த வேடங்களை போட்டு, மக்களின் குறைகளை கண்டு பிடிக்க முடியும். அந்த அனுபவம் இல்லாத மந்திரிகளை அதை செய்ய வேண்டுமென்று நான் கோர மாட்டேன் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

எதிர்கட்சி ஒன்று தேவையென்பது, எதை எடுத்தாலும் எதிர்த்து பேசுவதற்காக அல்ல என்பதை இங்கு பேசிய பலர் சுட்டிக்காட்டினார்கள். ஆளுகின்றவர்கள் யாரைத் துணை கொள்ளல் வேண்டுமென்பதை பற்றி வள்ளுவர் தன்னுடைய திருக்குறளில், பெரியாரைத்துணை கோடல் என்ற அதிகாரத்தில், ஆளுகின்றவர்கள் பெரியாரை தங்களுடைய துணைவராக கொள்ள வேண்டுமென்று கூறியிருக்கிறார். எந்த பெரியாரை துணை கொள்ள வேண்டுமென்று கூறினார் என்றால், எதையும் சரி, சரி என்று சொல்லி கண்டிக்காமல் இருக்கின்ற பெரியாரை அல்ல.

"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரி லானும் கெடும்'' என்று வள்ளுவர் குறள் வகுத்திருக்கிறார். சபையிலே ஆளுகின்ற தம்மை இடித்து சொல்லுகின்ற பெரியாரை துணையாக கொள்ளாத மன்னன் பகைவர்கள் இல்லையாயினும் தன்னை தானே கெடுத்து கொள்வான், கெட்டுவிடுவான் என்று சொல்லியிருக்கிறார். அந்த முறையிலே இடித்து சொல்வதற்காகவே வந்திருக்கிற பெரியார்களுடைய துணையை ஆளுகின்றவர்கள் பெற வேண்டுமென்று வள்ளுவர் அந்த காலத்திலேயே உணர்ந்து சொன்னார் போலும். கவர்னருடைய உரையைப்பற்றி இங்கு பேசிய பல நண்பர்கள் கன்னியாகுமரியை வரவேற்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

அந்த கன்னியாகுமரியை நாம் தேவிக்குளக்கரையிலோ அல்லது பீர்மேட்டின் மீதோ நின்று கொண்டு வரவேற்காமல், சிதைந்து போன செங்கோட்டையின் மேல் நின்று கொண்டு வரவேற்கிறோம் என்று எண்ணும் போது, தேவிக்குளம் பீர்மேட்டை பெறுவதற்கு வழிவகை காணப்படவில்லை. கவர்னர் உரையில் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அடுத்து, நில சீர்திருத்த சட்டங்களின் பேரால், நியாய வார சட்டங்களின் பேரால் விவசாயிகள் திருப்தியடைந்து சுமூகமான நிலையில் இருக்கிறார்கள் என்று கவர்னர் உரையில் குறிப்பிட்டு இருக்கிறார். என்னுடைய குளித்தலை தொகுதியை பொறுத்தவரையிலும் திருச்சி மாவட்டத்திலும் இன்றைய தினம் இந்த நியாய வாரச்சட்டத்தின் காரணமாகவும் சீர்திருத்தச் சட்டத்தின் காரணமாகவும் எழுந்த வழக்கு உயர்நீதிமன்றம் சென்று அங்கு அளிக்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக மக்களுக்கு வேதனையை உண்டாக்க கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதை யாரும் மறந்து விடவில்லை. மறுத்து விடவும் முடியாது. விவசாயிகள் வீடுகளில் தங்களுடைய மனைவி மக்களுடன் வேதனை அடைந்து புழுங்கி கொண்டிருக்கிறார்கள். குமுறிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நான் இங்கு எடுத்து சொல்ல ஆசைப்படுகிறேன்.

இந்த நியாய வாரச்சட்டம் காரணமாக குளித்தலை தொகுதி நங்கவரம் பகுதியிலும் திம்மாச்சிபுரம் பகுதியிலும் விவசாயிகள் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை தினம் தினம் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை கண்டும் விவசாயிகள் பகுதியில் எழுப்பப்படும் கூக்குரலை கண்டும் எந்த முறையில் அங்கு நிலைமை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரையில் அங்கு கையேரு வாரம் என்றும் மாட்டு வாரம் என்றும் இரண்டு வித வாரம் இருக்கின்றன. இப்படி இரண்டு விதமான வாரம் இருப்பதன் காரணமாக அவர்களுக்கு இந்த நியாய வாரச்சட்டம் பயன்படக்கூடாது என்று கருதி அதை விவசாயிகள் பயன் அடையாத முறையில் உயர் நீதிமன்றத்துக்கு சென்று அங்கு தீர்ப்பு வாங்கி வந்திருக்கிறார்கள். அந்த தீர்ப்பின் காரணமாக விவசாயிகள் நியாய வாரச்சட்டத்தின் பயனை அடைய முடியாமலும், வெளியேற்றத் தடுப்பு சட்டத்தின் பயனை அடைய முடியாமலும் இருக்கிறார்கள். இன்றைய தினம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அந்த ரீதியில் வழங்கி இருக்கிறது. அதன் காரணமாக மாட்டுவார ஏருக்காரர்கள் என்றால் யார், கையேருக்காரர்கள் என்றால் யார் என்ற பிரச்சினை எழும்பி அதைப்பற்றி விளக்கத்தை கவனிக்கும்போது தான் நிலைமை தெரியவருகிறது. மாடும் தந்து அவர்களுடைய சொந்த உழைப்பை சிந்தி நிலம் உடையவர்களிடத்தில் விதை, உரம், ஏரு இவைகளை பெற்று அப்படி பெறுகிற அந்த பொருள்களுக்காக விளைச்சலில் அவர்கள் தனியாக தானியமாகவோ அல்லது பொருளாகவோ எடுத்துக்கொண்ட பிறகு 60:40 என்று பெற வேண்டும் என்று சொல்லப்பட்டாலும் இன்றைய தினம் மாட்டு ஏருக்காரர்கள் விவசாயிகள் அல்ல என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

அதைப்போலவே கையேருக்காரர்கள் யார் என்றால் அவர்கள் பெரும்பாலும் ஆதி திராவிட வர்க்கத்தை சேர்ந்தவர்கள், பழங்குடி மக்கள் என்கின்ற பிற்பட்ட மக்கள் பாட்டாளி மக்கள் அப்படிப்பட்ட வர்க்கத்தினருக்கானத்தான் இந்த நியாய வாரச்சட்டம் செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் அவர்களுக்கென்று இந்த நியாய வாரச்சட்டத்தையும் நில வெளியேற்ற தடுப்பு சட்டத்தையும் கொண்டு வந்தாலும் அவர்கள் அவைகளின் பயனை அடைய முடியாமல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து விட்டது. அந்த அடிப்படையிலாவது எந்த அளவிலாவது இந்த நியாய வாரச்சட்டம் அவர்களுக்கு நன்மை வழங்கியிருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட மாட்டு ஏருக்காரர்களும் கையேருக்காரர்களும் சாகுபடியாளர்கள் அல்ல என்கின்ற தீர்ப்புக்கு இன்று ஆளாகி இருக்கிறார்கள். அதன் மேல் அப்பீல் செய்யப்பட்டு மீண்டும் வழக்கு வரும் ஜுலை மாதம் மூன்றாவது வாரத்தில் எடுத்துக்கொள்ள போவதாக இருக்கிறது. அதற்குள் விவசாயிகளுடைய நிலைமை என்னவென்றால் முத்து முத்தாக வியர்வை சிந்தி மணி மணியாக நெற்குவியலை தந்தவர்கள் களத்துமேட்டிலே காவலர் புடை சூழ அதைக்கொட்டி விட்டு வீட்டிலே வறுமைத்தேள் கொட்டிட வாடிக்கிடக்கிறார்கள். குளித்தலை தொகுதியில் இப்போது நிலவி வருகிற, இப்படிப்பட்ட நிலைமையைப்பற்றி கவர்னர் தன்னுடைய உரையில் குறிப்பிட மறந்தது வருந்தத்தக்க ஒன்று.

நெருக்கடிக்கு ஆளாகி இருக்க கூடிய விவசாயிகளுக்கு என்ன செய்யப்பட வேண்டும் என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். உயர் நீதிமன்றம் ஜுலை மாதம் 3-வது வாரத்தில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னதாக புதிய ஒரு திருத்த சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அதையும் துரிதமாக கொண்டு வர வேண்டும். ஏழைத்தொழிலாளர்களுடைய, ஏழை விவசாயிகளுடைய அவல நிலைமையை நீக்குவதற்கு இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துக்கொள்ள போகிறது என்பதை பற்றி கவர்னர் உரையில் ஒன்றுமே இல்லை என்பதை மிகவும் கவலை கொண்டு தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்து உணவு பற்றாக்குறையை நிலையை பற்றியது. கவர்னர் உரையில் உணவு விலை குறையவில்லை என்று குறிப்பிட்டாலும் உணவு விலை அதிகமாகி கொண்டிருக்கிறது என்பதை மறுக்க இயலாது. எங்கு பார்த்தாலும் உணவு விலை விஷம் போல் தினம் தினம் ஏறிக்கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்பதை கவனிக்க வேண்டும். ஆந்திராவிலுள்ள பெருவாரியான உபரி அரிசி தமிழகத்திற்கு பயன்படாமல் வட நாட்டில் சோளப்பஞ்சம் ஏற்பட்டிருக்கின்ற காரணத்தால் அங்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்குள்ள கோதுமையை கொண்டு வடக்கே சரிக்கட்டுவதற்கு பதிலாக ஆந்திராவிலுள்ள உபரியான அரிசியை தமிழ்நாட்டிற்கு பயன்படாத முறையில் எடுத்துச்சென்றதானது இங்கு விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. இதைப்பற்றி கவர்னர் உரையில் எந்த விதமான குறிப்பும் காணப்படவில்லை. இப்படி விலைவாசி உயர்வை தடுக்க எப்படிப்பட்ட வழிவகை செய்யப்படும் என்பதும் சொல்லப்படவில்லை.

உணவு நிலைமையை சமாளிப்பதற்கு சர்க்கார் உணவு பெருக்கத்துக்கு திட்டங்கள் செய்ய வேண்டும். இந்த சர்க்கார் கையில்லாத ஊமையின் நிலைமையில் தான் இருக்கிறார்கள். தங்களுடைய நிலைமை என்ன என்று சொல்ல முடியாமல் ஊமையாக இருந்து சுட்டிக்காட்டுவதற்கும் கையற்ற முறையில் இருந்து கொண்டிருந்தால் உணவுநிலை பற்றாக்குறை இது போன்றே எப்போதும் நீடித்துக்கொண்டே இருக்கும். இத்தகைய நிலைமைகளிலிருந்து திராவிடம் விடுபட்டு திராவிடம் தனித்து, செழித்து நின்று, வளம்பெற, வாழ, நல்ல முறையில் திட்டங்களை தீட்ட வேண்டும். அதற்கு குறிப்பாக உதாரணத்திற்காக ஒன்றை மட்டும் சொல்கிறேன். குடகனார் திட்டம் தேவை என்ற முயற்சி ஒன்று குளித்தலை தொகுதியில் 1952-ம் ஆண்டு முதற்கொண்டே இருந்து வருகிறது. அதைப்பற்றி அடிக்கடி எடுத்து சொல்லப்பட்டு வருகிறது. கனம் முதல்-அமைச்சரிடமும், ரெவினிï அமைச்சரிடமும், மராமத்து அமைச்சரிமும், நிதி அமைச்சரிமும் பல தடவை பல மனுக்கள் மூலமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அங்குள்ள பி.டபிள்ï.டி. சூப்பர்வைசர் இந்த திட்டத்தை எடுத்து துரிதமாக நிறைவேற்ற வேண்டும் என்பதை ஆய்ந்து சொல்லியிருக்கிறார்.

அழகாபுரி என்கிற இடத்தில் அணை கட்டினால் அதன்மூலமாக சுமார் 10 ஆயிரம் ஏக்கர் புஞ்சை நிலத்தை நஞ்சையாக மாற்றக்கூடிய வசதி இருக்கிறது. அதற்கு 12 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இது கவனிப்பார் அற்றுக்கிடக்கிறது. இப்படிப்பட்ட நல்ல திட்டங்கள் அலட்சியப்படுத்தப்படுவதை பற்றியெல்லாம் கவர்னர் தன்னுடைய உரையில் சிறிதும் குறிப்பிடவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொண்டு என்னுடைய உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

Monday, March 29, 2010

பெரம்பூர் பாலத்திற்கு மாறன் பெயர்


சென்னை பெரம்பூர் புதிய மேம்பாலத்தின் திறப்பு விழா இன்று இரவு நடந்தது. இத்திறப்பு விழாவிற்கு முதல்வர் கருணாநிதி தலைமையேற்றார்.

துணை முதல்வர் ஸ்டாலின்,தயாநிதி மாறன் உட்பட பலரும் இத்திறப்பு விழாவில் பங்கேற்றனர்.தமிழக முதல்வர் கருணாநிதி இன்று இப்பாலத்தை திறந்து வைத்தார்.

முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மாநகாரட்சியின் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

துணை முதல்வர் ஸ்டாலின் பேசும் போது, இந்தியாவிலேயே மாநகராட்சியின் சார்பில் மேம்பாலங்கள் கட்டும் மாநிலம் தமிழ் மாநிலம்தான் என்று குறிப்பிட்டார்.

முதல்வர் கருணாநிதி பேசும் போது, கிருஸ்துவுக்கு ஜெருசலேம் போல், இஸ்லாமிற்கு மெக்கா போல், இந்துவிற்கு ராமேஸ்வரம் போல், திமுகவுக்கு வடசென்னை என்று குறிப்பிட்டார்.

’’ நம்முடைய மேயரின் உழைப்பு-துணை முதல்-அமைச்சருடைய ஆர்வமிக்க முயற்சி என்றெல்லாம் சொன்னார்கள். அவரை "துணை முதல்வர்'' என்று சொல்வது கூட, நீங்கள் எல்லாம் அவரை பாராட்டுவதைப் பார்த்தால் -போற்றுவதைப்பார்த்தால் -பத்திரிகைகளிலே அவரைப்பற்றி எழுதுவதைப்பார்த்தால் - அவர் உழைப்பதைப் பார்த்தால் -"துணை முதல்வர்'' என்பதற்கு ஆங்கிலத்தில் "டெபுடி -சீப்மினிஸ்டர்'' என்று கூறுவீர்கள்.


ஆனால் நான் கருதுகிறேன் -எனக்கு "துணையாக இருக்கின்ற அமைச்சர்'' என்று தான் நான் கருதுகின்றேன். அந்த அளவுக்கு எனக்குத்துணையாக இன்று அவர் செயல்படுகின்றார்.

நான் என்ன கருதுகிறேன் என்பதை -என்ன நினைக்கிறேன் என்பதை அறிந்து கொண்டு -அந்த நினைப்பை நிகழ்ச்சியாக ஆக்குவதற்கும் -நான் கருதுவதை காட்சியாக காட்டுவதற்கும்-நான் எண்ணுவதை அப்படியே திண்ணியமாகச் செய்து முடிப்பதற்கும் -அவர் தன்னுடைய திறமையைக்காட்டி வருவதைத்தான் இங்கே நீங்கள் கண்டீர்கள் அதைத்தான் நீங்கள் போற்றுகின்றீர்கள்.

நம்முடைய மேயர் சுப்பிரமணியம் -நான் அவர் மேயராக வருவதற்கு முன்பு அவர் இந்த அளவுக்கு உழைப்பார்-இந்த அளவுக்கு பணிபுரிவார் - இந்த அளவிற்கு திறமையை காட்டுவார் என்றெல்லாம் எண்ணிடவில்லை. ஆனால் நான் கருதிய அந்தக்கருத்து தவறு என்பதை இன்றைக்கு அவர் செயல் மூலமாக அவர் என்னைத் தோற்கடித்துக் காட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அவரை எங்கேயாவது திடீரென்று கடைத்தெருவிலே பார்த்தால், இவர் மேயர் என்றோ -இவரா மேயர் என்று கேட்கின்ற அளவிற்குத்தான் உருவம் படைத்தவர்.

மேயருக்கான தோரணையோ-மேயருக்கான டாம்பீகமோ-மேயருக்கான ஆடம்பரமோ-மேயருக்கான நடையுடை பாவனைகளோ எதுவுமில்லாமல் - ஒரு சாதாரண தொழிலாளியைப்போல அவர் இருக்கின்ற காரணத்தினாலே தான்-தொழிலாளர் இயக்கமாம் திராவிட முன்னேற்றக்கழகத்தின் எண்ணங்களை-கருத்துக்களை செயல்படுத்த முடிகிறது என்றுதான் கருதுகிறேன்.

அப்படிப்பட்ட அருமைத்தோழர், இன்றைக்கு இந்த மாநகரத்தின் மேயராக இருப்பதும்-அவருக்கு துணையாக மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள்- கட்சி வேறுபாடு இருந்தாலுங்கூட அவைகளையெல்லாம் மறந்து-மாநகர முன்னேற்றம் தான் முக்கியம் என்ற வகையிலே பாடுபடுகின்ற -இந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் நம்முடைய மகேந்திரனைப்போல பாடுபடுகிறவர்கள்-மாநகராட்சியிலும் அந்தக் கட்சியின் சார்பில் இருக்கிறார்கள் என்று எனக்குத்தெரியும்’’

’’வடசென்னையில் இன்று இந்த பாலம் அமைந்திருக்கிறது என்றால், இது இந்த மாநகரின் இருபகுதிகளை இணைக்கின்ற பாலமாக மாத்திரமில்லாமல்-இரு பகுதிகளாக பிரிந்திருக்கின்ற எல்லா இயக்கங்களையும் சேர்ந்த தமிழர்களையெல்லாம் இணைக்கின்ற பாலமாகவும் இது அமைய வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

இந்தப்பாலத்தை உருவாக்க மத்திய அரசு மொத்த செலவில் 35 சதவிகிதத்தையும்-மாநில அரசு 15 சதவிகிதத்தையும் வழங்கி-எஞ்சிய 50 சதவிகிதத்தை மாநகராட்சி வழங்கியிருக்கிறது.

இந்த அருமையான பாலம்- கண் கவரும் பாலம்-இது எத்தகைய உற்சாகத்தையும், உத்வேகத்தையும், எழுச்சியையும், மகிழ்ச்சியையும் நமக்கெல்லாம் அளிக்கிறது என்பதை எனக்கு முன்னால் பேசிய அனைவரும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

எனக்கு இங்கே எழுந்து நின்று பேச இயலவில்லை. உங்களுக்கு தெரியும்-கடந்த ஆண்டு நான் செய்து கொண்ட மிகப்பிரச்சினைக்குரிய முதுகெலும்பு அறுவை சிகிச்சையின் காரணமாக கால்களில் பலம்குன்றி -கால்கள் நிற்க முடியாத காரணத்தால்- தமிழ்த்தாய் வாழ்த்து-தேசிய கீதம் போன்றவைகளுக்கெல்லாம் கூட எழுந்து நின்று மரியாதை செலுத்த முடியாது-ஆனால் மனதளவில் உங்களிடமெல்லாம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிற நிலையில் -இங்கே வரவேண்டியிருக்கின்றது.

பாலம் ஒருவகையில் நமக்கு பலத்தை தருகின்றது. எப்படியென்றால் எனக்கு கால் சரியில்லை - ஆகவே இங்கே நின்று உங்களிடத்திலே பேச இயலவில்லை. பாலம் என்பதில் கால் சரியாக இல்லா விட்டால் பலம் -எழுதிப்பாருங்கள் "பாலம்'' என்று-அதிலே காலை அழித்து விடுங்கள்- "பலம்'' ஆகிவிடும்.

இந்த பாலத்துக்கு கால் சரியாக இருக்கக்கூடாது என்று தான் கடந்த காலத்திலே ஆட்சியாளர்கள் அதை ஒடிக்க, ஊனப்படுத்த, எத்தனையோ முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டாலுங்கூட -உங்களுடைய மனப்பலத்தால்- இந்த வட்டாரத்திலே இருக்கின்ற தமிழ் மக்களுடைய ஏழை எளிய மக்களுடைய, பாட்டாளி மக்களுடைய, தொழிலாள தோழர்களுடைய அத்தனை பேர்களுடைய மனப்பலத்தால்-உங்களின் கோரிக்கை இன்றைக்கு வெற்றிகரமாக நிறைவேறியிருக்கின்றது’’

’’இந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் நம்முடைய மகேந்திரனைப்போல பாடுபடுகிறவர்கள்-மாநகராட்சியிலும் அந்தக் கட்சியின் சார்பில் இருக்கிறார்கள் என்று எனக்குத்தெரியும்’’என்று தெரிவித்தார்.


அது மாத்திரமல்ல-சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனை பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும்.

இன்றைக்குள்ள நிலையில் அவர் இங்கே மேடையில் பேசும் போது, என்ன பேச வேண்டுமோ அதைப் பேசினார். பாராட்டினார்-அதே நேரத்தில் பட்டா கொடுக்கவேண்டுமென்று அந்த கருத்தையும் இங்கே குழைத்து எடுத்துச்சொன்னார்.

ஒரு கம்யூனிஸ்டு கட்சியின் தோழர்- அரசாங்க மேடையில் என்ன சொல்ல வேண்டுமென்பதையும் -அவர் இந்த மேடையில் வந்து அமர்ந்திருப்பதை பார்த்து யாராவது சந்தேகப்படுவார்களோ என்பதற்காக பட்டாவையும் சேர்த்து சொல்லி திட்டவட்டமாக, தெளிவாக இந்தப் பாலத்தை அமைத்ததற்கு பாராட்டை தெரிவித்திருக்கிறார்.

அவர் போன்றவர்கள் -வேறு கட்சியைச்சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையெல்லாம் நான் கேட்டுக்கொள்வது -அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்து மக்கள் பணியாற்ற வேண்டும். மக்களுடைய தேவைகளை உணர்ந்து, அறிந்து புறக்கணிக்காமல் அவைகளை நிறைவேற்ற வேண்டும்.

எல்லோருக்கும் பொதுவானது தான் இந்தப்பாலம். அதைப்போல நாட்டுப்பிரச்சினைகள் எல்லோருக்கும் பொதுவானது என்று கருதிக்கொள்ள வேண்டும். அப்படி கருதினால் தான் நமக்குள் இருக்கின்ற ஆயிரம் வித்தியாசங்கள், வேறுபாடுகள் அனைத்துக்கும் அப்பால் ஒரு சக்தியாக- மக்களுக்கு தொண்டாற்ற வேண்டுமென்ற சக்தியாக -நாம் விளங்க முடியும்.

எல்லோரும் சேர்ந்து ஒரு பகுதியிலே தீப்பிடித்து எரியும்போது, அனைவரும் சென்று கட்சி பாராட்டாமல், நீ காங்கிரஸ்-இங்கே வராதே, நீ கம்யூனிஸ்டு-இங்கே வராதே, நீ தி.மு.க., நீ தி.க., நீ அ.தி.மு.க. உங்களுக்கெல்லாம் அங்கே இடம் கிடையாது என்று எண்ணினால் -திட்டம் வகுத்தால்-வராதே என்று மிரட்டினால்-அது நல்ல நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அறிகுறியாக அமையாது என்று தான் பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களைத்திரட்டி-மக்களுக்காக நடைபெற வேண்டிய காரியங்களுக்காக-கிளர்ச்சி செய்து-வேண்டுகோள் வைத்து-ஆர்ப்பாட்டங்கள் நடத்தி-ஊர்வலங்கள் நடத்தி-பவனிகள் நடத்தி-பொதுக்கூட்டங்கள் நடத்தி -தனித்தனியாக ஒவ்வொரு கட்சியும் சேர்ந்து இல்லாவிட்டாலும் -தனித்தனியாக இருந்து ஒரு கோரிக்கை நிறைவேறுகிற நேரத்தில்-

அது பொதுவான கோரிக்கையாக இருந்தால் அந்தக் கோரிக்கை நிறைவேறுகின்ற மகிழ்ச்சியில் - குதூகலத்தில்- அனைவரும் ஒரே மேடையில் இருந்தார்களேயானால் - நான் இந்தப்பாலத்தை பார்க்கின்ற பரவசத்தை விட-ஒரே மேடையில் எல்லா கட்சிக்காரர்கள் இங்கே இருக்கிறார்கள்-மாநகராட்சி மன்றத்திலே இருக்கின்ற கட்சிகள் எல்லாம் இன்றைக்கு வடசென்னையிலே நடைபெறுகின்ற பெரம்பூர் பாலத்திறப்பு விழாவிலே காணுகின்ற பாக்கியத்தை பெற்றோம்.

இது மேம்பாலத்தை கட்டித்திறந்ததை விட-எல்லோரும் ஒரே இடத்திலே அமர்ந்து -இந்த பொதுப் பிரச்சினையிலே பொறுப்போடு கலந்து கொண்டிருக்கிறார்களே என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதை நான் பெரிய பாக்கியமாகக் கருதுவேன். ஆனால் அது நம்முடைய நாட்டைப் பொருத்தவரையில் -நாம் உருவாக்கிக் கொண்ட அரசியல் பண்பாட்டின் காரணமாக-அது இயலாமல் போகிறது.

இந்த மாநிலத்தை விட்டு அடுத்த மாநிலத்திற்கு சென்றால், அங்கெல்லாம் இந்த அளவிற்கு ஆக்ரோஷமான கருத்து வேறுபாடு கிடையாது. பொதுப்பிரச்சினைகளிலே எல்லோரும் ஒன்றாகக்கூடி மகிழ்கின்ற நிலை பக்கத்து மாநிலங்களிலே, கேரளா ஆகட்டும், அல்லது ஆந்திரா ஆகட்டும், ஏன் மேற்கு வங்கம் ஆகட்டும், திரிபுரா ஆகட்டும், டெல்லிப் பட்டணம் ஆகட்டும் - எங்கு சென்றாலும் அந்த பண்பாட்டை காண முடிகிறது.

தமிழ்நாட்டிலே தான் என்ன பாலம் பெரம்பூரிலே கட்டினாலுங்கூட நம்மிடையே பாலத்தை கட்ட முடியாமல் நாம் அவதிப்பட்டு கொண்டிருக்கிறோம்.அது பண்புப் பாலம்-இது அன்புப் பாலம்- இது நட்புப் பாலம்-இது பொதுமக்களுக்காக இருக்க வேண்டிய பாலம்-அப்படிப்பட்ட பாலத்தை அமைத்தால் தான் இந்தப் பாலங்களால் உருவாகின்ற பயன்களை நாம் அடைய முடியும்.

இன்னும் பல பாலங்கள் இந்த பெரம்பூர் பகுதியிலே கட்டவேண்டும் -வடசென்னை பகுதியிலே கட்ட வேண்டும் என்று தம்பி டி.கே.எஸ். இளங்கோவனை போன்றவர்கள் இங்கே பேசும்போது குறிப்பிட்டார்கள். எனக்கும் அந்த கோரிக்கையிலே எந்தவிதமான மாறுபாடும் இல்லை.

எனக்கு மாறுபாடு இல்லாத காரணத்தால் அவைகளை நிறைவேற்றுகின்ற அந்தப் பணியிலே நிச்சயமாக இந்த அரசு ஈடுபடும். மாநகராட்சி மன்றமும் ஈடுபடும். நம்முடைய அதிகாரிகள் எல்லாம் ஈடுபடுவார்கள் என்று நான் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொள்கிறேன்.

இங்கே இந்த பாலம் கட்ட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தவர் - இந்தத் தொகுதியும் இணைந்து நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக வெற்றி பெற்று-மத்தியிலே அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்து-டோகா மாநாடு வரையிலே சென்று நம்முடைய இந்திய நாட்டின் குரலை ஓங்கியொலித்த தம்பி முரசொலி மாறன் அவர்களைப்பற்றி இங்கே பேசியவர்கள் எல்லாம் குறிப்பிட்டார்கள்.

அந்த முரசொலி மாறனுடைய பெயரை இந்தப்பாலம் பெறட்டும் என்று கேட்டுக் கொண்டு எல்லோரும் இதை ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு; இந்தப்பாலத்தின் வெற்றிக்கும் இதை அமைப்பதற்கும்பாடுபட்ட அனைவருடைய ஆர்வத்தையும் பாராட்டி, வாழ்த்தி விடைபெறுகிறேன்’’என்று பேசினார்.


Wednesday, March 24, 2010

தமிழக எம்பிக்களின் பார்லிமெண்ட் வருகை பட்டியல்


நடந்து முடிந்த பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் மொத்தம் 21 நாட்கள் நடைபெற்றன. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியாக 15 நாட்கள் நடந்து முடிந்துள்ளன. ஆக மொத்தம் 36 நாட்கள் பார்லிமென்ட் நடந்துள்ளது.


அதிக நாட்கள் வந்தவராக வடசென்னை எம்.பி., இளங்கோவனும், குறைந்த நாட்களே அவைக்கு வந்தவராக தென்சென்னை எம்.பி., ராஜேந்திரனும் இருக்கின்றனர்.

பார்லிமெண்ட்டுக்கு அதிக நாட்கள் வந்தவர்கள்

வடசென்னை திமுக எம்பி இளங்கோவன் 36 நாட்கள்
தென்காசி லிங்கம், காஞ்சிபுரம் விஸ்வநாதன், நெல்லை ராமசுப்பு ஆகியோர் 35 நாட்கள்
ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு 33 நாட்கள்
திண்டுக்கல் சித்தன், விருதுநகர் மாணிக்தாகூர் ஆகியோர் 32 நாட்கள்
தேனி ஆருண், திருவண்ணாமலை வேணுகோபால் 25 நாட்கள்
கோவை நடராஜன் 24 நாட்கள்
வேலூர் அப்துல் ரகுமான் 23 நாட்கள்
சேலம் செம்மலை 22 நாட்கள்
தாமரைச்செல்வன், ஹெலன் டேவிட்சன் 19 நாட்கள்
தூத்துக்குடி ஜெயதுரை 17 நாட்கள்
திருப்பூர் சிவசாமி 15 நாட்கள்
திருச்சி குமார், விழுப்புரம் ஆனந்தன், நாகப்பட்டினம் விஜயன் ஆகியோர் 14 நாட்கள்
முருகேசன், ஆதிசங்கர் 14 நாட்கள்
பொள்ளாச்சி சுகுமார், சிதம்பரம் திருமாவளவன், திருவள்ளூர் வேணுகோபால் ஆகியோர் 13 நாட்கள்

பார்லிமெண்டுக்கு குறைந்த நாட்களே வந்தவர்கள்


தென்சென்னை எம்.பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் 4 நாட்கள்
மயிலாடுதுறை மணியன் 5 நாட்கள்
பார்லிமென்ட் அ.தி.மு.க., கட்சித் தலைவரும் கரூர் எம்.பி.,யுமான தம்பிதுரை 8 நாட்கள்
ராமநாதபுரம் ரித்தீசும், சுகவனமும் தலா 10 நாட்கள்


அமைச்சர்கள் யாரும் வருகை பதிவேட்டில் கையெழுத்திடுவதில்லை என்பதால், அவர்கள் பற்றிய விவரம் இதில் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்லிமென்டின் அவை நடவடிக்கைகளில், தமிழக எம்.பி.,க்கள் பெரிய அளவில் பங்கேற்பதில்லை என்ற விமர்சனம் இருந்து வருகிறது. இந்நிலையில் அவை நடவடிக்கைகளில் பங்கேற்காவிட்டாலும், அவைக்கு ஒழுங்காக தினமும் வருவோரது எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போவது கவலையளிப்பதாகவே உள்ளது.


Tuesday, March 23, 2010

திராவிட பாசறைகள் பிளவுபட்டிருந்தாலும் யாரை வீழ்த்த வேண்டுமோ அவர்கள் வீழ்த்தும்: கலைஞர்


சென்னையில் அண்ணா அறிவாலயத்தில், பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி, ஆராய்ச்சி, அறக்கட்டளை சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள்' (இரண்டாம் பதிப்பு, 20 தொகுதிகள்) என்ற நூல் தொகுப்பு (தொகுத்தவர் வே.ஆனைமுத்து) வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நூலை வெளியிட்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

இங்கு பேசியோர் ஆனைமுத்து எவ்வளவு கஷ்டப்பட்டார், சிரமப்பட்டார் என்றெல்லாம் பேசினார்கள். அவர் தன்னை போலவே எனக்கும் வயதாவிட்டதாக கருதிக்கொண்டு என்னிடம் உரக்கமாக பேசினார். அது உங்கள் காதில் விழுந்திருக்கும். நான், எனக்கு காது கேட்கும் மெதுவாகச் சொல்லுங்கள் என்றேன். நான் திடமாகத்தான் இருக்கிறேன், முதுகில் செய்யப்பட்ட ஆபரேஷன் காரணமாக இந்த வண்டியில் வந்திருக்கிறேனேயன்றி, எனக்கு எந்தவித உபாதையும் இல்லை.

ஆனால், எலும்பும், தோலுமாக இருக்கும் இந்த மனிதர் எவ்வளவு இரும்பு நெஞ்சம் கொண்டிருக்கிறார். பெரியார் கருத்துக்களை நாட்டிலே பரப்பவேண்டும் என அவர் உழைப்பதை பார்த்து வியக்கிறேன். இந்த தளர்ந்த வயதிலே அவருக்கு ஏற்பட்டிருக்கும் உந்துதலும், உணர்ச்சியும் எல்லோருக்கும் ஏற்படவேண்டும் என்று கோருகின்றேன். இந்த பிரார்த்தனையை இயற்கை நிறைவேற்றித் தரும் என்று நம்புகிறேன்

திராவிட இயக்கம் இன்று நேற்றல்ல. என்றைக்கு நீதிக்கட்சி என்ற பெயரிலே, தொண்டாற்ற, மக்கள் பணியாற்ற, பார்ப்பனர் அல்லாத மக்களுடைய உரிமைகளுக்காக போராட முன்வந்ததோ அன்று முதல் இன்று வரை இந்த இயக்கத்தை தலையெடுக்க விடாமல் ஆக்கிவிட வேண்டும் என்று கூடவே இருந்து குழி பறிக்கின்ற காரியங்கள் பல நடைபெற்றாலும், அனைத்தையும் மீறி இன்றைக்கு திராவிட இயக்கத்தின் தாக்கம் தமிழகத்தில், தமிழகத்தை தாண்டி தென்னக பகுதிகளில், தென்னகத்தை தாண்டி வடஇந்திய பூமியில், அதையும் தாண்டி உலகத்தில் கொடி கட்டிப் பறக்கின்ற காலத்தில் நாம் வாழ்வது தந்தை பெரியாருடைய எண்ணங்களை, அறிஞர் அண்ணாவின் கருத்துக்களை செயலாக்க அவற்றுக்கு வடிவம் கொடுக்க என்பதை மறந்துவிடாமல் இன்றும் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய ஆனைமுத்து அவர்கள் தந்தை பெரியாரின் போதனைகளை, கருத்துக்களை அறிவுரையை எல்லாம் நூலாக தொகுத்து வழங்கியுள்ளார்கள். அவர்கள் இன்று வழங்கப்பட்டிருக்கிற 20 புத்தகங்களை ஒரு பெட்டியிலே வைத்து இங்கே அளித்தார்கள். இன்னும் பெரியாரின் மற்ற கருத்துக்களை, எண்ணங்களை திரட்டி இங்கு வழங்கவேண்டும் என்றால், ஒரு பெட்டி போதாது. ஒரு பீரோவில் வைத்துத்தான் அவற்றை கொடுக்க வேண்டும்.

அந்த அளவுக்கு கருத்துக்கள், அந்த அளவுக்கு பகுத்தறிவு உரைகள், அந்த அளவுக்கு லட்சிய சிந்தனைகள் உள்ளடக்கியவை பெரியாரின் நூல்கள். பெரியாரின் சிந்தனைகள். அவற்றை விட்டால் வேறு வழியில்லை இன்றைய மக்களுக்கு. பெரியார் என்று சொல்வது தனிப்பட்ட மனிதனை அல்ல. அவர் ஒரு இயக்கம். சகாப்தம். அவர் வகுத்த நெறி இன்று மாத்திரமல்ல என்றென்றைக்கும் தமிழனுக்கு, திராவிடர்களுக்கு பயன்படக்கூடிய, திராவிடர்களை ஒன்றுபடுத்தக்கூடிய, திராவிடர்களை அடையாளம் காட்டக் கூடியவை ஆகும்.

அவர் 50 ஆண்டுக்கு முன்பே தொடங்கிய பகுத்தறிவு எப்படியெல்லாம் பரவிற்று என்பதற்கு சான்று. இன்று தொலைக்காட்சியில் கலைவாணர் வரலாறு பற்றிய குறும்படத்தை பார்த்தேன். 50 ஆண்டுக்கு முன் நான் எழுதிய மணமகள் படத்தில் கலைவாணர் நடித்த சில காட்சிகளை காட்டினார்கள். அதில், கலைவாணர் ஒரு பள்ளியில் ஆசிரியர். அங்கு சின்னஞ்சிறு மாணவர்கள் படிக்கிறார்கள். விளையாடிக் கொண்டிருக்கும் மாணவர்களை பார்த்து, உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்பார். அதற்கு, ஒரு பையன் எப்போதுமே அந்த பள்ளியில் துறுதுறுப்பாக பரபரப்பாக முரட்டுத்தனமாக இருக்கும் பையன். அப்போதே அந்த பையனுக்கு நான் அழகிரி என்று பெயரிட்டிருக்கிறேன். அது எனக்கு மறந்துவிட்டது. இன்றைக்கு கலைவாணர் படத்தை பார்க்கும்போதுதான் ஓஹோ அப்போதே பெயர் வைத்தோமா என்று எண்ணிக் கொண்டேன்.

அதில், என்ன காட்சி என்றால், எவ்வளவு அற்புதமாக, சுலபமாக நமது கருத்துக்களை, பெரியார் எண்ணங்களை மக்களுக்கு கலைவாணர்கள், கலைஞர்கள், கலை விற்பன்னர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்கு சான்று. நான் என்ன செய்ய?'' என்று அந்த மாணவன் கேட்பார். கலைவாணரோ ஆத்திரத்தில், தீயை வை'' என்பார். அந்த பையன் கேட்பார் எங்கே வைக்கிறது. ஆத்திரத்தில் கோபத்தில் தலையில் தீயை வை என்பார். அவன், தலையில் சூடத்தை வைத்து நெருப்பை வைத்து விடுவான். அது வாத்தியாருக்கு தெரியாது. தலையில் டர்பன் கட்டியிருப்பார். அப்போது அங்கு வருவோரெல்லாம் அய்யோ' என்று ஓடுவார்கள். தலையில் நெருப்பு', நெருப்பு' என்று கூறிக் கொண்டே ஓடுவார்கள். அப்போதுதான் தன் தலையில் சிறுவன் நெருப்பு வைத்துவிட்டான் என்பது கலைவாணருக்கு தெரியவரும். அவர் சொல்வார், எதையெதை சிறுவயது குழந்தைகளிடம் பேசுவது என்று தெரிந்து பேசவேண்டும். சிறுபிள்ளைக்கு தலையில் தீவைத்தால் சுடும் என்று தெரியுமா? என்று கூறுவார்.

கலைவாணர் போன்றோர் இதுபோன்ற கருத்துக்களை சொல்வதற்கு காரணமாக இருந்தவர் தந்தை பெரியார். இப்படி சிந்தனைகளை, விருந்தாக ஏன் எதற்காக என்ற கேள்விகளை எழுப்பும் நிலைக்கு ஆளாக்கக்கூடிய வகையில் அந்த காலத்தில் 50 ஆண்டுக்கு முன்பு கலைவாணர் இதுபோன்ற காட்சி அமைவதற்கு காரணம் பெரியாருடைய தாக்கம். அந்த படத்தை அடுத்த படத்தில் தி.மு.க. என்ற வாசகம் அமைத்து ஒரு பாடலை கலைவாணர் பாடினார். தி.மு.க. என்பது திராவிட முன்னேற்ற கழகம். அப்படி சொல்லக்கூடாது என்று சென்சாரில் சொன்னார்கள். அதற்கு, தி.மு.க. என்றால் திருக்குறள் முன்னேற்றக் கழகம் என்று விளக்கம் சொன்னார். அதுபோல், பெரியார்'' என்றும் அதில் பாடலை பாடி முடிப்பார். அது வள்ளுவ' பெரியார் என்று விளக்கம் சொன்னார். அண்ணன்மார்களுக்கு தம்பி போல என்றும், தம்பிகளுக்கு அண்ணா' போல் என்றும் அண்ணாவை பற்றியும் அதில் சொல்லியிருப்பார்.

திராவிட இயக்கம் வலுவான இயக்கம். அந்த இயக்கத்திலே எந்த ஒரு பிளவு ஏற்பட்டாலும், அப்படி ஏற்பட்ட அந்த பிளவு அந்த இயக்கத்தினை பெரிதும் வளர்க்க இதுவரை பயன்பட்டிருக்கிறதேயல்லாமல் வேறல்ல. திராவிடர் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் பிரிந்தது. அப்போது, நான் கண்டபடி திட்டியிருக்கிறேன் என்று ஆனைமுத்து சொன்னார். திட்டியதையெல்லாம் பொறுத்துக்கொண்டதால்தான் இன்று வாழ்த்துகிறார்கள். நாங்கள் வாழ்க வசவாளர்கள் என்று சொன்னபோது நீங்கள் திட்டிக் கொண்டிருந்தீர்கள். இப்போது நீங்களே வாழ்க என்று சொல்கிறீர்கள்.

திராவிட இயக்கத்தில் இன்றைக்கு ஆனைமுத்து இந்த புத்தகத்தை வெளியிடுகிறார் என்றால், வீரமணியும் சில புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த பாசறைகள் பல என்றாலும், அண்ணா சொன்னதை போல் இரட்டை குழல் துப்பாக்கிகளாக இருந்தாலும், குறி தவறாமல் யாரை வீழ்த்த வேண்டுமோ அவர்களை வீழ்த்த, இந்த இயக்கம் என்றும் துவளாது. துவண்டுபோகாது என்று நான் உறுதியாக சொல்ல காரணம் 30 ஆண்டுக்கு முன்பு இதே புத்தகத்தின் முதல் தொகுப்பை வெளியிட்டபோது இந்த மண்டபத்தில் பாதியளவு மக்கள் கூட இல்லை. இப்போதோ இந்த மண்டபம் நிரம்பி வழிகிறது. இது பெரியாரின் கருத்துக்கள் ஒவ்வொரு நாளும் தமிழர்களிடம் கிடைக்கும் ஆதரவு மேலும் மேலும் பெருகி வருகிறது என்பதற்கு அடையாளம். அதற்கு துணையாக இருக்கும் ஆனைமுத்துவை நான் பாராட்டுகிறேன் என்றார்

Wednesday, March 17, 2010

சாமியாருக்கு கால் பிடிக்க போகிறேன் என்றால் மனமகிழ்ச்சியோடு பெண்களை அனுப்பி வைக்கிறார்கள்: கனிமொழி


மணியம்மை நினைவு நாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டுவிழா, சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை நடைபெற்றது.


விழாவுக்கு தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் கு.ம.ராமாத்தாள் தலைமைதாங்கினார். மணியம்மையார் வாழ்க்கை வரலாறு நூலை கனிமொழி கருணாநிதி எம்.பி. வெளியிட்டார். இதை குஞ்சிதம் நடராஜன், வழக்கறிஞர் தெ.வீரமர்த்தினி, ஆடிட்டர் ராமச்சந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேசினார்.

அப்போது அவர், ’’ பெண்கள் இந்த சமூகத்திலே எந்த திசையில் சென்று கொண்டு இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள முடியாத ஒரு திக்கிலே திசையிலே சென்று கொண்டு இருக்கிறார்கள். நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். எத்தனை ஆசிரமங்கள் எத்தனை சாமியார்கள். அவர்களது நம்பிக்கை எல்லாம் உடைக்கக்கூடியவர்கள்.


நான் எந்த சாமியாரையும், யாருடைய தனிப்பட்ட விவகாரத்திலும் எந்த கேள்வியும் எழுப்பக்கூடியவராக இல்லை. அதுபற்றிய அக்கரை நமக்கு இல்லை. ஆனால் அந்த ஆசிரமத்தை முன்எடுத்து நடத்தக்கூடிய அவர்கள், அவர்களை நம்பி வரக்கூடியவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்கிறார்களா? என்ற அந்த கேள்வியை நம்மைபார்த்து கேட்டுக்கொள்ள வேண்டும்.

இந்த பிரச்சினையால் அதிகமாக பாதிக்கக்கூடியவர்களாக பெண்களாகத்தான் உள்ளனர். இதற்கு பல காரணங்கள் உள்ளது. இந்த சமூகத்தில் பெண்கள் தனது குறைகளை, தனது கனவுகளைக்கூட வெளிப்படுத்த முடியாத அடிமையாகத்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஒரு பெண் கைதேர்ந்த இசை கலைஞராக இருக்கலாம், ஆனால் உங்கள் கணவர், உங்கள் தாய் தந்தையர் பாடக்கூடாது மேடையில் ஆடக்கூடாது என்று தடை விதிக்கும் போதும் கணவர் எனது பெற்றோரை பார்த்துக்கொள்ள வேண்டும் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் போதும் அவள் கண்ட கனவுகள் அந்த ஒரு நிமிடத்தில் உடைந்து தூள் தூளாகி விடுகிறது.

இப்படி பெண்களின் எத்தனையோ கனவுகள் உடைக்கப்படுகிறது. மன அழுத்தம் காரணமாக ஒரு பெண் ஒரு வைத்தியரை பார்க்கப்போகிறேன் என்றால் குடும்பமே பொங்கி எழும். நீ எப்படி அங்கே போக முடியும் நான் உன்னை நன்றாக வைத்திருக்கவில்லையா 3 வேளை சாப்பாடு, கட்ட துணி தரவில்லையா, இதை விட நன்றாக வைத்திருப்பவர்கள் யாராக இருக்க முடியும், என்ன உனக்கு மன அழுத்தம் என்று கூறி டாக்டரை பார்க்க போகக்கூடாது என்று மறுப்பார்கள்.

ஆனால் அதே நேரத்தில் அதே பெண் எனக்கு மனது சரி இல்லை, நான் கோயிலுக்கு போகிறேன், நான் ஒரு சாமியாருக்கு கால் பிடிக்கப்போகிறேன் என்றால், போய் வா என்ற மிகுந்த மன மகிழ்ச்சியோடு அவரை ஒன்றாக நின்று வழி அனுப்புகிறது. அப்படி என்றால் அந்த பெண்ணின் போக்கிடம் என்னதாக இருக்க முடியும்" என்றும்

’’தந்தை பெரியாரை சந்திக்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்றிருக்காவிட்டாலும், மணியம்மையை சந்திக்கும் வாய்ப்பை ஒரு சில தடவை பெற்றிருக்கிறேன். அவரச காலத்தில் அவர் எவ்வளவு உறுதியோடு இருந்தார் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அந்த நேரத்தில் எனது வீட்டுக்கு சோதனை என்ற பெயரால் 10, 15 பேர் வந்து சோதனை என்ற பெயரில் பூந்தொட்டிகளைக்கூட விட்டுவிடாமல் சோதனை செய்வார்கள்.

எனது தாயார் ராஜாத்திஅம்மாளை வருமானவரி அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று காலை முதல் மாலைவரை கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.

ஒரு நாள் வீட்டின் பின்புறத்தில் விளையாடிக்கொண்டு இருந்தேன். அப்போது மணியம்மையார் என்னிடம் வந்து அம்மா எங்கே என்று கேட்டார். நான் வீட்டை சுற்றி சுற்றிவருகிறேன் வீட்டில் யாருமே இல்லையா என்று கேட்டார்.

அம்மா சமையல் செய்துகொண்டு இருக்கிறார் என்று நான் சொன்னபோது இது என்ன கொடுமை வீட்டில் என்ன என்று கேட்கக்கூட ஆள் இல்லாத நிலையில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றீர்களா? என்று கேட்டபடி கண்ணீரோடு என்னை அழைத்துக்கொண்டு வீட்டின் உள்ளே சென்று எனது தாயாருக்கு ஆறுதல் கூறினார்.

இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு செல்கிறேன் என்று கூறியபோது கூட எனது தாயார் இந்த நிகழ்ச்சியை கூறி கண்கலங்கினார். அப்படிப்பட்ட அன்பு உள்ளம் படைத்தவர்தான் மணியம்மை’’ என்றும் தெரிவித்தார்.


கலைஞர் - சட்டமன்றத்தின் சாயாத கோபுரம் சரியாத இமயம்


K¡fhš ü‰wh©L fhy bghJ thœ¡if,

miuü‰wh©L¡F« nkyhf r£lk‹w¥ gâ,

v®¡f£Á cW¥Ãd®,

f£Áæ‹ bfhwlh,

v®¡ f£Á Jiz¤ jiyt®,

v®¡f£Á¤ jiyt®,

bghJ¥gâ¤Jiw mik¢r®,

IªJ Kiw Kjyik¢r®,

r£lk‹w¤ nj®jèš ã‹wnghbjšyh« bt‹wt® Kjšt® fiyP®.

mtUila cUt¥gl« r£lk‹w¤Âš,

mJΫ Kjšt® fiyPnu f£oa òÂa r£lk‹w tshf¤Âš it¥gj‰F jFÂæšiyah«! brhš»wh® b#ayèjh.

bgUªjiyt® fhkuhr®,

bgçat® g¡jt¢ry«,

ÂU. M®. bt§f£uhk‹,

ÂU. Á. R¥Ãukâa«,

ÂU. khâ¡fnty®,

ÂUkÂ. n#h m«khŸ,

ÂU. f¡f‹

ngh‹w bgUik¡Fça fh§»u° mik¢r®fnshL r£lk‹w¤Âš thj« - v®thj« òçªJ jäHf r£lk‹w¤Âš jå¤j òfG¡Fçatuhf Âfœªjt® Kjšt® fiyP®.

mtç‹ cUt¥gl« r£lk‹w¤Âš it¡f¡ Tlhjh« - bghUK»wh® b#ayèjh.

m¿P® m©zhé‹ mik¢ruitæš bghJ¥gâ¤Jiw mik¢ruhfΫ - mtU¡F¥Ã‹ Kjyik¢ruhfΫ gjé t»¤JtUgt® Kjšt® fiyP®.

lh¡l® V.Ïy£Rkzrhä Kjèah®, ÂU.V. M®. jhnkhju‹, ÂU. trªjghŒ, ÂU. ghyR¥Ãukâa mŒa®, ÂU.Ïuh#h mŒa®, Ïuh#h r®. K¤ijah br£oah®, ÂU. rhäehj‹, ÂU. F‹w¡Fo mofsh®, ÂU. »UZzrhä ehÍL, ÂU.nf. uh#huh« ehÍL

ngh‹w bk¤j¥go¤j nkjhéfŸ jäHf nkyitæš cW¥Ãd®fshf ÏUªjnghJ eilbg‰w Mnuh¡»akhd éthj§fëš fyªJ bfh©L mt®fns éa¡F« t©z« gš më¤J - ciu ãfœ¤Âa muÁaš khkåj® Kjšt® fiyP®.

m¥go¥g£ltç‹ cUt¥gl« òÂa r£lk‹w tshf¤Âš it¡f¤ jFÂæšiy v‹»wh® b#ayèjh!

ÂU.é.nf. Ïuhkrhä Kjèah®, ÂU.nf. éehaf«, ÂU. bgh‹d¥g ehlh®, ÂU. fU¤ÂUk‹, ÂUkÂ. mdªjeha», ÂU. kh®o‹, ÂU. j£Ázh_®¤Â fΩl®, ÂUkÂ. bgh‹d«khŸ, ÂU. ÏisabgUkhŸ, ÂU. gh. Ïuhk¢rªÂu‹

ngh‹w thj¤ Âwikä¡f cW¥Ãd®fŸ fh§»u° f£Á rh®Ãš r£lk‹w¤Âš mk®ªÂUªjh®fŸ.

ÂU. v«. fšahzRªju«, ÂU. nf.o.nf. j§fkâ, ÂU. V. ghyR¥Ãukâa‹, ÂU. ešyÁt«, ÂU.Ã. ckheh¤, ÂU.ukâ, ÂU. tujuh#‹, ÂU. é.nf. nfhj©luhk‹, ÂU. bešè¡F¥g« nfhéªjuhr‹, ÂU. c.uh.tujuh#‹, ÂU. ÂU¥ó® R¥guha‹, ÂU.kzè fªjrhä ngh‹w f«ôå°£L #h«gth‹fnshL«,

ÂU. ghyR¥Ãukâa‹, ÂU. Á‹dJiu, ÂU. ešyÁt«, ÂU. RnuªÂu‹, ÂU. V.R¥Ãukâa«, ngh‹w Ãu#h nrhõè°L f£Áia¢ rh®ªj j¤Jt é¤jf®fnshL«,

ÂU. A©nl, ÂU. fhiu¡Fo rh.fnzr‹, Áy«ò¢ bršt® ÂU. k.bgh. ÁtPhd«, ÂU. m¥Jš rkJ, ÂU. m¥Jš y¤Ô¥, ÂU. ÂU¥ó® bkhŒÔ‹, ngh‹w étu« m¿ªJ thjhL« bgUk¡fnshL«,

v«.í.M®. k‰W« mtuJ mik¢r®fnshL«,

b#ayèjh k‰W« mtuJ mik¢r®fnshL«, gy M©Lfshf r£lk‹w¤Âš f©âa¤njhL thj« òçªJ bt‹W ㉻‹w Kjšt® fiyPç‹ cUt¥gl¤ij r£lk‹w¤Âš it¡f¡ Tlhjh«! M¤Âu¤njhL m¿¡if éL»wh® b#ayèjh.

ÂU. Í.»UZzhuh›, ÂU. bršygh©oa‹, ÂU. M¤jdh®, ÂU. òyt® nfhéªj‹, ÂU.nf. V. kÂaHf‹, ÂU.KDMÂ, ÂU.nf. Ïuh#huh«, ÂU. j䜡Fokf‹, ÂU. gHåntšuh#‹, ÂU. MÎila¥g‹,

ngh‹w Ñ®¤Â ä¡f r£lk‹w¤ jiyt®fshš bgçJ« k¡f¥g£lt® - ngh‰w¥g£lt® Kjšt® fiyP® mt®fŸ.

mtç‹ cUt¥gl¤ij Âw¡f¡ TlhJ v‹W b#ayèjh brhš»wh®.

Ï¥go xU m¿¡if él jd¡F jF c©lh v‹W b#ayèjh v©â¥gh®¡f nt©lhkh?

m¿é‹ K®¢Á,

mDgt¥ bg£lf«,

ã®thf¤ Âw‹,

thjhL« tšyik,

v®¡f£Áfis k¡F« bgUªj‹ik,

vt® brhštijÍ« T®ªJ ftå¡F« g©ghL,

jhæ‹ Fz«,

jªijæ‹ gçÎ,

rnfhju ghr«,

fhyk¿ªJ éid Ko¡F« Âw‹,

fonjh¢Á bkšy v¿Í« é¤ij

ϤjidÍ« j‹ål¤Âš bfh©L Ï‹W« ã¤j« ciH¡»‹w Kjšt® fiyPç‹ cUt¥gl¤ij r£lk‹w¤Âš it¡f¡ Tlhjh?

`khãy¤Âš Rah£Á - k¤Âæš T£lh£Á’ v‹w muÁaš j¤Jt«,

g°fŸ njÁa kakh¡fš,

FÂiu¥ gªja« xê¥ò,

ca® ÚÂk‹w¤Âš tH¡fhL bkhêahf jäœ,

kjuh° - br‹idahdJ

jäG¡F `br«bkhê’ jFÂ,

mid¤J rhÂædU« m®¢rfuhfyh«,

FoæU¥nghU¡F mªj Ïl¤ijna g£lh brŒJ jU« £l«,

bg©fS¡F brh¤Jçik,

cŸsh£Á k‹w¤Âš 33 rjéj« jå xJ¡ÑL

ngh‹w tuyh‰W¢ Áw¥ò bfh©l m¿é¥òfis m¿é¤J« - Ô®khd§fis ãiwnt‰¿Í« - r£l« Ïa‰¿Í« rhjid òçªj Kjšt® fiyPç‹ cUt¥gl¤ij r£lk‹w tshf¤Âš it¡f¡ TlhJ v‹»wh® Ϫj bfhlehL ng®tê b#ayèjh.

#h xêa rk¤Jtòu§fŸ,

Foirfis mf‰¿ - fh‹»ß£ ÅLfŸ f£o¤ jU« fiyP® Å£L tr¤ £l«,

ViHfS¡F« Ïytrkhf ca®ªj kU¤Jt Á»¢ir më¡F« cæ®fh¡F« fiyP® fh¥Õ£L¤ £l«,

ViHfS¡F« - étrhæfS¡F« Ïytr ä‹rhu« tH§F« £l«,

ϪÂahényna Ïytr t©z¤ bjhiy¡ fh£Á¥ bg£o tH§F« £l«,

xU %ghŒ¡F xU »nyh mçÁ tH§F« £l«

ngh‹w kf¤jhd £l§fis r£lk‹w¤Âš m¿é¤J mij bt‰¿fukhf eilKiw¥gL¤Â tU« Kjšt® fiyPç‹ cUt¥gl¤ij r£lk‹w tshf¤Âš it¡f¡ Tlhjh«. tçªJ f£o¡ bfh©L m¿¡if éL»wh® b#ayèjh.

Mf°L 15 M« ehŸ RjªÂu ÂdéHhé‹ nghJ khãy Kjyik¢r®fŸ mªjªj khãy jiyik¢ brayf¤Âš njÁa¡ bfhoia V‰W»‹w cçikia thjho¥ bg‰wt®.

bjhêyhs® Âdkhd nk Kjš ehS¡F jäœ eh£oš k£Lkšy; ϪÂah KGik¡F« r«gs¤njhL Toa éLKiwia th§»¤ jªjt®.

ÉgL¤j¥g£nlh® ey« fh¡f ÂU. r£lehj‹ jiyikæš FG; mjdhš ÉgL¤j¥g£nlh U¡F« - Ó®kuÃd®fS¡F« rYiffŸ.

fhtš Jiwæd® fZl§fis¡ f©L m¿ªJ ngh¡f _‹W nghÄ° fäõ‹fŸ.

fhntç¥ Ãu¢Áid¡F `eLt® k‹w«’ f©lJ.

125 M©Lfhy tuyh‰¿š br‹id ca®ÚÂk‹ w¤Âš, xU mç#‹ Tl ÚÂgÂahf tuKoaéšiy v‹w Fiwia¥ ngh¡F« t©z«, ÚÂg ÂU. tujuh#id br‹id ca®ÚÂk‹w¤Âš ÚÂgÂahf c£fhu it¤jJ.

Fkç Kidæš mŒa‹ tŸStD¡F Áiy it¤jJ.

Ï¥go v¤jidnah tuyhWfis¥ gil¤j tuyh‰W¤ jiyt® Kjšt® fiyPç‹ cUt¥ gl¤ij r£lk‹w¤Âš it¡f¡TlhJ v‹W tirkhç bghêªJ m¿¡if é£oU¡»wh® b#ayèjh.

Ï¥gobašyh« m¿¡if él b#ayèjhΡF v‹d jFÂæU¡»wJ?

r£lk‹w¤Â‹ kh©ig¡ bfL¤jt® mšyth b#ayèjh!

bfhŠr« Tl bt£fäšyhJ rghehaf® eh‰fhèæš V¿ mk®ªJ bfh©lJ.

cW¥Ãdnu mšyhj j‹ njhê rÁfyhit Jiz rghehaf® eh‰fhèæš c£fhuit¤jJ.

Kjyik¢ruhf ÏUªJ« j‹ Ïyhfh r«gªj¥g£l nfŸéfS¡F gš më¡fhkš fhy¤ij X£oaJ.

M£Á¡F tªjË, mj‰F K‹ÃUªj r£lk‹w elto¡if¡ F¿¥òfis¤ ÂU¤ÂaJ.

g£b#£ go¡F« Kjšt® fiyPç‹ fu¤ÂèUªJ g£b#£il¥ ÃL§»a ml§fh¥Ãlhç ntiy brŒjJ.

r£lk‹w¤Â‰FŸnsna rghehafiu, mik¢r®fis fhèš éH¢ brŒJ - uÁ¤J `nro°£lhf’ és§»aJ.

mYtš MŒÎ¡ FGéš xU ehS« fyªJ bfhŸshJ mªj¡ FGit mtk¤jJ.

"eh‹ gh¥gh¤Âjh‹, v‹id ahU« mir¡f KoahJ’’ v‹W T¿ Mça brh%g¤ij¡ fh£oaJ.

"muR Cêa®fis rΡfhš mo¤J ntiy th§»nd‹’’ v‹W r®thÂfhç ghâæš rigæš bfh¡fç¤jJ.

bl°kh r£l« bfh©LtªjJ.

j©lid¡F¥ gaªJ g‹Ü®bršt¤ij Kjštuh¡» mt® Ëdhš gJ§»¡ bfh©lJ.

Ï¥go v¤jidnah f©âa¡ Fiwthd brašfis¥ òçªjt® b#ayèjh!

mtuh fiyPç‹ jF g‰¿ m¿¡if éLtJ!

tuyh‰W kåj®fŸ

thu¤Â‰F xUt® v‹w

Åj¤Âš Ãw¥gšiy,

xU Íf¤Â‰F xUt® v‹W

njh‹WtJ« c©L.

xU rfh¥j¤Â‹ jiyt® fiyP®.

v‹W« mt® r£lk‹w¤Â‹

rhahj nfhòu« - rçahj Ïka«.

mtç‹ cUt¥gl«

r£lk‹w¤Âš Âw¥gij v®¤J m¿¡if

éL»whnu b#ayèjh, mJ vªj tifæš ãaha«?

tæ‰bwç¢rš fhuzkhf¤ jh‹

b#ayèjh m¿¡if

éL¤JŸshnu jéu, ntwšy!