கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, July 5, 2011

திண்டுக்கல் மாவட்ட தி.மு.க நிர்வாகி இல்ல திருமணத்திற்கு கலைஞர் வாழ்த்து


திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை முத்தனங்கோட்டை ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் கர்ணனின் மகன் அரவிந்த், பத்மபிரியா ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியிடம் திருமண வாழ்த்து பெற்றனர்.

இயக்குனர் செல்வராகவன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலைஞர் ஸ்டாலின் வாழ்த்து
















05.07.2011 அன்று நடைபெற்ற இயக்குனர் செல்வராகவன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலைஞர் - ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்

Monday, July 4, 2011

லோக்பால் வரம்புக்குள் பிரதமர்: திமுக திட்டவட்டம்


லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் கொண்டு வர வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக திட்டவட்டமாக வலியுறுத்தியது.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

பிரதமரின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 7.30 மணிவரை நடந்த கூட்டத்தில் திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்றார். அப்போது அவர் பேசியது:

"நாட்டின் கண்ணியமிக்க பொறுப்பாகிய பிரதமர் பதவியை லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். பிரதமர் பதவி ஏற்கனவே ஊழல் ஒழிப்பு சட்டத்தின் வரம்புக்குள் வருகிறது என்றாலும், அது தொடர்பான புகார்களை விசாரிக்கும் சிபிஐ பிரதமரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. எனவே பிரதமர் மீதான புகார்கள் தொடர்பான விசாரணை வெளிப்படையாக அமையும் வகையில் பிரதமர் பதவியை லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவது அவசியம். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் அப்போதைய முதல்வர் கருணாநிதி, லோக் ஆயுக்தா வரைவு சட்டம் தயாரித்து முதல்-அமைச்சர் பதவியையும் அதன் வரம்புக்குள் சேர்த்திருந்தார். தற்போதைய வரைவு சட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் லோக்பால் வரம்புக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர். பிரதமர் பதவியை லோக்பால் வரம்புக்குள் சேர்க்க தயாராக இருப்பதாக சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருக்கிறார். அவரது இந்த கருத்தை திமுக ஆதரிக்கிறது. நீதிமன்றத்தின் உயர் அடுக்கையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் நிலை. தேவைப்பட்டால் உயர் நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்க தனி அமைப்பை ஏற்படுத்தலாம். லோக்பால் அமைப்பின் தலைவர் அப்பழுக்கற்ற, கண்ணியமிக்க நபராக இருக்க வேண்டும். அதன் பத்து உறுப்பினர்களில் 6 பேர் நீதித்துறையில் இருந்தும், 2 பேர் அரசு தரப்பில் இருந்தும், 2 பேர் எதிர்க்கட்சி தரப்பில் இருந்தும் தெரிவு செய்யப்பட வேண்டும். தெரிவுக்குழுவின் செயலாளர் தனிச்சையான ஒருவராக இருக்க வேண்டும். மாநிலங்களுக்கு தங்களது சொந்த லோக் ஆயுக்தா அமைப்புகளை ஏற்படுத்தி கொள்ளும் உரிமை வழங்கப்பட வேண்டும். லோக்பால் சட்டத்தை நாடாளுமன்றம் இயற்ற வேண்டும். அதே வேளையில் லோக் ஆயுக்தா சட்டங்களை அந்தந்த மாநிலங்களே இயற்றி கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்று டி.ஆர்.பாலு பேசினார்.

Sunday, July 3, 2011

அண்ணாவின் மீது ஆணையிட்டு சொல்கிறேன் நான் அந்த நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் : மு.க.அழகிரி பேச்சு


மதுரை முன்னாள் துணைமேயரும், மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொருளாளருமான மிசா.எம்.பாண்டியன்- பாண்டி செல்வி தம்பதியரின் மகள் பா.பாண்டிராணிக்கும், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர்- கிரகலெட்சுமி தம்பதியரின் மகன் தங்க அரவிந்த்துக்கும் 03.07.2011 அன்று காலை மதுரை சத்திய சாய் நகரில் உள்ள தயா மகாலில் திருமணம் நடந்தது.


திருமணத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நடத்தி வைத்தார்.


விழாவில் அவர் பேசும்போது, ’’தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்திற்குதான் கடந்த தி.மு.க. ஆட்சியில் முதியோர் உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் அதிக அளவில் செய்யப்பட்டு உள்ளது. அப்படி இருந்தும் மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் போய்விட்டது.


எனது கட்சிக்காரர்களுக்குதான் நிறைய உதவிகள் செய்து இருக்கிறேன். கடந்த தேர்தலில் தோல்வி என்றதும் மாற்றுக்கட்சிகாரர்களை விட நமது கட்சிக்காரர்கள் (தி.மு.க.) குடும்ப அரசியல் செய்வதாக விமர்சனம் செய்கிறார்கள்.


இது எனது மனதுக்கு வேதனை அளிக்கிறது. நமது கட்சிக்காரர்களின் குடும்ப நிகழ்ச்சியில் எனது குடும்பத்தினர் பெயரையோ படத்தையோ இனி போட வேண்டாம்.

அப்படி போட நினைத்தால் பேரறிஞர் அண்ணா படம், தலைவர் கருணாநிதி ஆகியோரின் பெயர் படத்தை மட்டும் போட்டால் போதும். மனப்பூர்வமாக என் படத்தையோ என் பெயரையோ போட நினைத்தால் மட்டும் போடுங்கள்.

என் குடும்பத்தினரின் படத்தையோ பெயரையோ போடவேண்டாம். அவ்வாறு செய்தால் அண்ணாவின் மீது ஆணையிட்டு சொல்கிறேன் நான் அந்த நிகழ்ச்சிக்கு வரமாட்டேன். கட்சியில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்’’என்று பேசினார்.

சமச்சீர் கல்வியைச் செயல்படுத்தக்கோரி தமிழ்நாடெங்கும் தெருமுனை பொதுக் கூட்டங்கள் : தி.மு.க. இளைஞரணி தீர்மானம்



சமச்சீர் கல்வியை செயல்படுத்தக் கோரி தமிழ்நாடெங்கும் தெருமுனை பொதுக் கூட்டங்களை நடத்திட தி.மு.க. இளைஞரணி தீர்மானித்துள்ளது. தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் - துணை அமைப் பாளர்கள் கூட்டம் நேற்று (2.7.2011) மாலை 5 மணிக்கு சென்னை, அன்பகத்தில் தி.மு. கழகப் பொரு ளாளரும் - தி.மு.க. இளைஞர் அணிச் செய லாளருமான தளபதி மு.க.ஸ்டா லின் அவர்கள் தலைமையில், துணைச் செயலாளர்கள் மேயர் மா.சுப்பிர மணியன், ஈ.ஜி.சுகவனம் எம்.பி, ஆர்.ராசேந்திரன், சுப.த.சம்பத், சுபா.சந்திரசேகர், அசன் முகமது ஜின்னா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அதுபோது பின்வரும் தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன:-

சமச்சீர் கல்வி

ஏழை, பணக்காரர் வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் சமமான - தரமான கல்வி அளிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையி லான கழக அரசால் கல்வியாளர்கள், நிபுணர்களைக் கொண்டு ஆராய்ந்து, அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அமல்படுத்திய சமச்சீர் கல்வியை, ஜெயலலிதா அரசு தடை செய்ததால், தமிழக மாண வர்கள் மற்றும் பெற்றோர்களி டையே பெரும் கொந்தளிப்பும் ஆசிரியப் பெருமக்களிடையே குழப் பமும் ஏற்பட்டுள்ளதோடு, பள்ளி - கல்லூரி களை மாணவர்கள் புறக் கணிப்புச் செய்து ஆர்ப்பாட்டங் களிலும், போராட்டங்களிலும் ஈடு பட்டுள்ளனர். தலைவர் கலைஞர் அரசால் கொண்டு வரப்பட்ட பல் வேறு நலத்திட்டங்களில் ஒன்றான சமச்சீர் கல்வியை அமல்படுத்தத் தவறிய ஜெயலலிதா அரசை இக்கூட் டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

சமச்சீர் கல்வியை தடை செய்வதன் மூலம் மாண வர்களின் வாழ்க்கைத் தரம் பாதிப்புக்கு உள்ளா வதையும், ரூபாய் 200 கோடி செலவில் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களை வீணடிப்பதையும் சுட்டிக்காட்டு வதோடு, கழக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தின் தீர்மானங் களை விளக்கியும், தமிழகம் முழுவதும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி களுக்குட்பட்ட கிரா மங்கள் - குக்கிராமங்கள் - வார்டுகள் - வட்டங்கள்தோறும் தெருமுனைக் கூட்டங்களையும், பொதுக் கூட் டங்களையும் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடத்துவதென இக் கூட்டம் தீர்மானிக்கிறது.

தலைமைச் செயலகம் மாற்றம்

தமிழக மக்களின் எதிர்கால நலன் களைக் கருத்தில் கொண்டு தி.மு.கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களையும், சாதனைகளையும் அரசியல் காழ்ப் புணர்ச்சியால் ரத்து செய்வதி லேயே அ.தி.மு.க. அரசு முனைப்போடு செயல்படுகிறது.

அனைத்துத் தரப்பினரும் பாராட் டும் வகையில் புதுப்பொலிவுடன் திகழும் புதிய தலைமைச் செயல கத்தை பயன்படுத்த முன்வராமல், போலியான கற்பனை கலந்த கார ணங்களைக் கூறி, மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே சட்டப் பேரவை செயலகத்தை மாற்றியிருக் கும் அ.தி.மு.க. அரசின் அடாவடிச் செயலை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள், அறிவுலக மேதை அறிஞர் அண்ணா பிறந்த நாள், திராவிட இனத்தின் நம்பிக்கை நட்சத்திரமாய் திகழும் தி.மு.கழகம் உதயமான நாள் ஆகிய வற்றை இணைத்து முப்பெரும் விழாவாக எழுச்சியோடு கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் கொண் டாடி வருவதன் தொடர்ச்சியாக,
தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர் களின் பிறந்தநாளையொட்டி தமிழ கத்தில் உள்ள அனைத்து மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் பங்கேற்றிடும் வகையில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டி களை நடத்தி, முறையாக தேர்வு செய்து தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளைச் சார்பில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வரு கிறது. இவ்வாண்டும் அனைத்து போட்டிகளிலும் பெருமளவில் மாணவர் களை பங்கேற்கச் செய்து, நிகழ்ச்சிகளை எழுச்சியோடு ஏற் பாடுகள் செய்திட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர , பேரூர் மற்றும் பகுதி இளைஞர் அணி அமைப்புகளை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

இளைஞர் அணிக்கு உறுப்பினர்களை பெருமளவில் சேர்த்தல்

தி.மு.க. இளைஞர் அணியின் உறுப்பினர்களை புதிதாக பெரு மளவில் சேர்ப்பதோடு, ஏற்கனவே உறுப்பினராக உள்ளோர் தங்களை புதுப்பித்துக் கொள்ளும் பணியி னைத் தொடர்ந்து, கழக சட்ட திட்ட விதியின்படி கிராமங்கள் - குக்கிராமங்கள் - வார்டுகள் - வட்டங்கள்தோறும் அமையப் பெற் றுள்ள தி.மு.க. இளைஞர் அணி அமைப்புக்களை புதுப்பிப்பதோடு, அமைப்புகள் இல்லாத இடங்களில் புதிதாக இளைஞர் அணி அமைப் புகளை ஏற் படுத்திடவும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி உள்ளிட்ட இளைஞர் அணி அமைப் பாளர் - துணை அமைப்பாளர்களை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

Saturday, July 2, 2011

திமுக இளைஞரணி அறக்கட்டளை ஸி31 லட்சம் பரிசு : 10, 12&ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அன்பழகன் வழங்கினார்



பிளஸ் 2 மற்றும் 10&ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் ரூ.31 லட்சம் பரிசுத் தொகையை மு.க.ஸ்டாலின் தலைமையில் க.அன்பழகன் வழங்கினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் 10 மற்றும் 12&ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் 02.07.2011 அன்று காலை நடந்தது. திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். மேயர் மா.சுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.
திமுக பொதுச் செயலாளரும் முன்னாள் நிதி அமைச்சருமான அன்பழகன், மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:
பரிசு வழங்கும் வாய்ப்பு கிடைத்ததன் மூலம் நான் இளைஞன் ஆகியிருக்கிறேன். இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு ஏணிப்படியே கல்விதான். கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு இந்த விழா நடத்தப்படுகிறது.
தினமும் 5, 6 மைல் நடந்து சென்று பள்ளிக்கு சென்றவர் அவர். ஏடு, நூல்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு 13 வயதில் ஆற்றல்மிக்க எழுத்தாளராக திகழ்ந்தார். அது அவரே தேடிக்கொண்ட அறிவாற்றல். அதே வழியில் நீங்களும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் உயர்ந்த நிலையை அடையலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திமுக துணை அமைப்பான இளைஞர் அணி சார்பில் இந்த விழா நடக்கிறது. மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது. 2007&ம் ஆண்டு இளைஞர் அணி மாநில மாநாடு நெல்லையில் நடந்தது. மாநாட்டு தீர்மானத்தின்படி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, மாநாட்டு செலவு போக மீதியிருந்த தொகையை வைப்பு நிதியில் செலுத்தப்பட்டது. அதில் கிடைக்கும் வட்டி தொகையில் ஆண்டுதோறும் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி வருகிறோம்.
இந்த ஆண்டு 12&ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 6 மாணவ, மாணவிகள், மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 140 பேர், 10&ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 40 பேர், மாவட்ட அளவில் 227 பேர் என மொத்தம் 523 பேருக்கு ரூ.31 லட்சத்து 52 ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை 1,193 பேருக்கு ரூ.70 லட்சத்து 97 ஆயிரம் வழங்கி உள்ளோம்.
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்குகிறோம். கடந்த ஆண்டு 1,443 பேருக்கு ரூ.32 லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 5 ஆயிரத்து 111 பேருக்கு ரூ.1 கோடியே 58 லட்சத்து 34 ஆயிரத்து 500 வழங்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் தொடரும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களு டன் வந்து இந்த பரிசு களை பெற்றுக் கொண் டனர். தமிழ்நாடு முழுவ தும் இருந்து மாணவர் கள் கலந்துகொண்ட தால் விழா நடைபெற்ற கலைஞர் அரங்கம் நிரம்பி வழிந்தது.

விழாவுக்கு, வந்திருந் தவர்களை மேயர் மா. சுப்பிரமணியன் வர வேற்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தி.மு.க. இளைஞர் அணி மாநில நிர்வாகிகள் சுக வனம், ராஜேந்திரன், சம்பத், சந்திரசேகர், அசன் முகமது ஜின்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, சற்குணபாண்டி யன், எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், வீரபாண்டி ஆறுமுகம், திருச்சி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அன்பில் பெரியசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மாணவ, மாணவிகளுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

Friday, July 1, 2011

லோக்பால் வரம்புக்குள் பிரதமரை சேர்க்க வேண்டும் என்று கூறியது ஏன்? - கலைஞர் விளக்கம்


தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி, பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:


கேள்வி: லோக்பால் மசோதாவில் பிரதமரைச் சேர்க்கக் கூடாது என்று ஜெயலலிதா பேட்டியில் சொல்லியிருக்கிறாரே?


பதில்: டெல்லியிலிருந்து திரும்பிய என்னிடம் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வர நினைக்கும் "லோக்பால்'' மசோதா பற்றி தி.மு.கழகத்தின் நிலைப்பாடு என்ன என்று கேட்டபோது; "ஏற்கனவே தி.மு.க. ஆட்சி சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற போதே, இது போன்ற ஒரு சட்டம் ஊழல் ஒழிப்பு சட்டம் மாநில அளவில் தமிழக அரசினால் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தில் முதல் அமைச்சரையும் இணைத்து, முதல் அமைச்சர் உட்பட அனைவரையும் அந்த சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டலாம், அவர்கள் மீது வழக்கு போடலாம் என்று உரிமை கொடுக்கப்பட்டிருந்தது; அதுதான் தி.மு.கழகத்தின் நிலை.


இப்போது டெல்லியில் என்ன முடிவெடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. தெரிந்த பிறகு அதைப்பற்றி சொல்கிறேன்'' என்று கூறினேன்.


செய்தியாளர்கள் தொடர்ந்து, ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் முதல் அமைச்சரை தமிழகத்திலே சேர்த்ததைப்போல, பிரதமரும் லோக்பால் மசோதாவிலே சேர்க்கப்பட வேண்டும் என்பது தான் உங்களுடைய கருத்தா என்று கேட்டதற்கு; "அதுபற்றி உங்கள் ழூகத்திற்கே விட்டு விடுகிறேன். நாங்கள் கொண்டு வந்த சட்டத்தில் முதல் அமைச்சரைத் சேர்த்துத்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டோம். இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் ழூகத்திற்கே விட்டு விடுகிறேன் என்று கூறினேன்.


இதைத்தான் ஒரு சில ஏடுகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முடிவுக்கு மாறாக எதிர்மறையாக ஒரு கருத்தினை நான் தெரிவிப்பதைப்போல எழுதியிருந்தார்கள்.


தமிழக முதல் அமைச்சர் லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்கக்கூடாது என்று கருத்து சொல்கிறார். அவருடைய நெருங்கிய தோழமைக் கட்சிகளில் ஒன்றான இந்திய கம்ழூனிஸ்டு கட்சியின் அதிகாரபூர்வமான ஏடான "ஜனசக்தி''யில் வெளிவந்துள்ள ஒரு பெட்டிச்செய்தியில், லோக்பால் சட்டத்தில் விசாரணை வரம்பிற்குள் பிரதமரும் நீதிபதியும் வர வேண்டும் என்று அன்னா அசாரே கூறுவதற்கு முன்பே; டாக்டர் அம்பேத்கர், ஹிரேன் முகர்ஜி, ஏ.பி.பரதன், பிரகாஷ்காரத் என பலரும் கூறுவது, ஏறத்தாழ இந்தியாவில் அனைத்துக் கட்சிகளும் கூறுவதாக எழுதியுள்ளது.


நான் பிரதமரையும் அந்த வரம்பிற்குள் சேர்க்க வேண்டுமென்று சொன்னது, நாம் "அதற்காக பயப்படவில்லை, தெளிவாக இருக்கிறோம் என்று உலகத்தின் முன்பு தெளிவாக்குவதற்கு அது பயன்படுமே என்பதால்தான்''. எனது இந்தக்கருத்து எந்த அடிப்படையிலே சொல்லப்பட்டதோ, அதே அடிப்படையிலேதான் நேற்றையதினம் பிரதமர் கூட லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்ப்பது குறித்து தனக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.


அதே காரணத்திற்காகத்தான் தி.மு.கழக அரசு இதற்கான சட்டத்தை கொண்டு வந்தபோது, முதல் அமைச்சரையும் அந்த வரம்பிற்குள் கொண்டுவர வேண்டுமென்று நானே முன்வந்து தெரிவித்தேன். உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்'' என்ற கழகத்தின் நீண்ட நாள் முழக்கத்தை நினைவுபடுத்துகிறேன்.

கேள்வி: கடந்த தி.மு.க. ஆட்சியில் காவல் துறையினர் ஏவல் துறையாக இருந்ததால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றும், தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையினருக்கு பாதுகாப்பு தரப்படும் என்றும் முதல் அமைச்சர் ஜெயலலிதா செய்த அறிவிப்பு பற்றி?


பதில்: முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பு வந்து இன்னும் ஒரு மாதம் கூட முடியவில்லை. காவல்துறையை எந்த அளவிற்கு அ.தி.மு.க. ஆட்சி மதித்தது, மதிக்கிறது என்பதற்கு, இரண்டு உதாரணங்களை கூறினால் போதுமென நினைக்கிறேன். முதல் அமைச்சர் ஜெயலலிதா டெல்லிக்கு செல்வதையொட்டி அந்த கட்சியினர் இரவு கொடி கட்டிவிட்டு, ஒரு ஓட்டலில் சென்று உணவருந்தி கொண்டிருந்தார்கள். அப்போது நள்ளிரவு ஆகி விட்டதால், அந்த வழியாக வந்த போலீஸ் துணை கமிஷனர் ஒருவர் அந்த ஓட்டலை மூடச்சொல்ல, அதற்கு அ.தி.மு.க.வினர் நாங்கள் ஆளுங்கட்சி என்று மிரட்டியதால், அந்த அதிகாரி அவர்களை காவல் நிலையத்தில் கொண்டு போய் விட்டு விட்டுச்சென்றுவிட்டார்.


அந்த செய்தியைக்கேள்விப்பட்ட ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரும், மற்றும் அமைச்சரே ஒருவரும் அந்த காவல் நிலையத்திற்கே சென்று "நாங்கள் யார் தெரியுமா?'' என்று அதிகார தோரணையில் கேட்டு, காவல் நிலையத்தில் இருந்த ஆளுங்கட்சியினரையெல்லாம் எந்தவித அனுமதியுமின்றி அழைத்துச்சென்றுவிட்டனர். அது மாத்திரமல்ல; அடுத்த நாளே அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற காவல் துறையின் துணை கமிஷனர் "பட்டாலியனுக்கு'' மாற்றப்பட்டு விட்டார்.


அதன் தோழமை கட்சியான தே.மு.தி.க.வை சேர்ந்த ஒரு சட்டப்பேரவை உறுப்பினர், சேலம் மாவட்டம் ஓமலுநுர் காவல் நிலையத்திற்கு சென்று மிரட்டிய செய்தியும் ஏடுகளில் வந்துள்ளது.

கேள்வி: 2006 ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியின் நிர்வாக திறமையின்மை காரணமாக தமிழ்நாட்டின் கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து விட்டதாக முதல் அமைச்சர் ஜெயலலிதா குற்றஞ் சாட்டியிருக்கிறாரே?


பதில்: 2006 ம் ஆண்டு தி.மு.க. பொறுப்புக்கு வருவதற்கு முன்பாகவே, அதாவது 31 3 2006 அன்றே, தமிழக அரசின் மொத்தக்கடன் பொறுப்பு ரூபாய் 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாகும்.


அதாவது அ.தி.மு.க. ஆட்சியிலேயே அந்த அளவிற்கு கடன் சுமையை வைத்திருந்தார்கள். அந்த கடன் தொகை தான் தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமேயானால் ஜெயலலிதா ஆட்சியிலே இருந்த போது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவிகிதம் அளவிற்கு கடன் சுமை வைத்திருந்தார். தி.மு.க. ஆட்சியில் கடன் சுமை மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 19.58 சதவிகிதம் தான்.


தி.மு.க. அரசின் மீது ஜெயலலிதா இந்த அளவிற்கு குறை கூறிய போதிலும், இந்தியாவின் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி 9 4 2011 அன்று சென்னையிலே கூறும்போது, "இந்தியாவில் நிதி ஒழுங்கையும், நிலைத்தன்மையையும் திருப்திகரமாக கடைப்பிடித்து வரும் ஒரு சில மாநிலங்களுள் தமிழகமும் ஒன்றாகும். தமிழக அரசின் கடன் அளவு, பரிந்துரைக்கப்பட்ட அளவை விட மிகவும் குறைவாகவே உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து ஒரு நாள் கூட தன் கணக்கில் பணம் இல்லாமல், கூடுதல் வரைவுத் தொகையை ஓவர்டிராப்ட்டை தமிழக அரசு பெற்றதில்லை'' என்று கழக அரசின் நிதி மேலாண்மை குறித்துப் பாராட்டி சொல்லியிருக்கிறார்.

எனவே ஜெயலலிதா உண்மையான புள்ளி விவரங்களை அறிந்த பின்னர் குற்றஞ்சாட்டுவது அவர் தற்போது வகிக்கும் பொறுப்புக்கு அழகாகும்.

கேள்வி: முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இழுத்துக் கொண்டே போகிறதே?
ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் சசிகலாவின் வழக்கறிஞர் எம்.எஸ். கந்தசாமி கடந்த 3ம் தேதி தாக்கல் செய்த மனுவில் வழக்கின் சாட்சியான ஆடிட்டர் பாலாஜியை மறு விசாரணை நடத்த அனுமதி கோரியிருந்தார். அந்த மனுவினை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.
அதனை எதிர்த்து சசிகலா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன் மீதான விசாரணை நீதிபதி கே. என். கேசவநாராயணா முன்னிலையில் 27&6&2011ல் நடந்தது. சசிகலா தரப்பில் வக்கீல் உதயஹொல்லா வாதிட்டிருக்கிறார்.
அந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராகச் செயல்பட்டு வரும் வி.எஸ். ஆச்சார்யா ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு என்னைச் சிறப்பு வழக்கறிஞராக கர்நாடக மாநில அரசு நியமித்துள்ளது. ஆனால் தற்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராகப் பதவி யேற்ற பிறகு, லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கறிஞரை மாற்றியுள்ளார்.
எனவே எந்தக் காரணத்துக்காக உச்ச நீதிமன்றம் வழக்கை பெங்களூருக்கு மாற்றியதோ, அந்த நோக்கம் சீர்குலைந்து விடும். மேலும் விசாரணை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடக்க இடையூறு இருப்பதால் மறு விசாரணைக்கு அனுமதி அளிக்கக் கூடாது, என்னையும் இந்த வழக்கில் வழக்கறிஞராகச் சேர்க்க வேண்டும் என்று விரிவாக வாதிட்டார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறார். மற்றொரு வழக்கு 1993&94ம் ஆண்டுக்கான செல்வ வரிக் கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை என்று வருமான வரித் துறை சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து பொருளாதார குற்றங்களுக்கான எழும்பூர் கூடுதல் தலைமை பெரு நகர நீதி மன்றத்தில் வருமான வரித் துறை சார்பில் 1997ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கு தொடர்ந்து 13 ஆண்டுகள் ஆகின்றன. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெ. தாக்கல் செய்த மனுவை, 8&7&2010ல் முதன்மைப் பெருநகர நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதி மன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யக் கூடாது என்று தான் வேண்டுமென்றே எந்தத் தவறும் செய்யவில்லை. குறிப்பிட்ட தேதிக்குள் செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், தனக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பி தன் தரப்பு கருத்தை தெரிவிக்க உரிய வாய்ப்பு தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வருமான வரித் துறை சார்பில் அத்தகைய விளக்க நோட்டீஸ் எதுவும் தரவில்லை. எனவே வேண்டுமென்றே எந்தத் தவறும் செய்யாததால், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியிருக்கிறார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி பி.ஆர். சிவகுமார், செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யக் கூடாது என்று வேண்டுமென்றே ஜெயலலிதா எதுவும் செய்யவில்லை என்பது தெரிகிறது.
எனவே இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். இந்த வழக்கு தொடர்பாக பொருளாதார குற்றங்களுக்கான எழும்பூர் தலைமைப் பெருநகர நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்திருக்கிறார்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கையில் கூறியுள்ளார்.