கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, October 17, 2010

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தடுக்க வேண்டும்: கலைஞரிடம் கோரிக்கை



முதல்வர் கருணாநிதியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் நேற்று (16.10.2010) சந்தித்தனர். சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்துமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

முதல்வர் கருணாநிதியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா, நேற்று (16.10.2010) சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா,

இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படுவோருக்கு நிவாரண உதவி வழங்கப்படுவதைப் போல், தொழிலில் நலிவு அடையும் சிறு வியாபாரிகளுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். 100 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 1 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த வரம்பை சிறு வியாபாரிகளுக்கு 300 யூனிட்டாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தோம் என்றார்

No comments:

Post a Comment