கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, October 23, 2010

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு முதல்வர் கலைஞர் நீதியரசர் ஜனார்த்தனம் ஆலோசனை


முதலமைச்சர் கலைஞர் 13.10.2010 அன்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசு அவர்களும், பல்வேறு சமுதாயங்களின் தலைவர்களும் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்துக் கொடுத்த கோரிக்கை தொடர்பாக - தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களுடன் 19.10.2010 அன்று கலந்தாலோசனை நடத்தினர்.

இந்தக் கலந்தாலோசனையின்போது, சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன், அரசுத் தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி, அய்.ஏ.எஸ். நிதித்துறையின் முதன்மைச் செயலாளர் கே.சண்முகம், அய்.ஏ.எஸ்., சட்டத்துறைச் செயலாளர் தீனதயாளன், பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை யின் செயலாளர் இராமநாதன், அய்.ஏ.எஸ்., ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment