கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, October 23, 2010

ஜெயலலிதாவுக்கு அரசியல் நாகரிகம் தெரியவில்லை - மு.க.அழகிரி பேட்டி


மத்திய அமைச்சர் மு.க.அழகிரி 19.10.2010 அன்று மாலை மதுரையில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
மதுரையில் நடந்த அதிமுக கண்டன கூட்டத்தில் ஜெயலலிதா உங்களை பற்றி பேசியது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
அந்த அம்மையார் அரசியல் நாகரிகம் தெரியாமல் ஏதேதோ உளறிவிட்டு சென்றதாக கேள்விப்பட்டேன். அதற்கு நான் பதிலளித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை.
மதுரையில் அழகிரி ராஜ்யம் நடக்கிறது என்று கூறியுள்ளாரே?
யாரோ தப்பு தப்பாக ஜெயலலிதாவுக்கு எழுதி கொடுத்துள்ளனர். அது சரியானதுதானா? என்று விசாரித்துவிட்டு மேடையில் பேசியிருக்க வேண்டும். ஆனால் அது எதைப் பற்றியும் விசாரிக்காமல் 2 மணிநேரம் மேடையில் படித்துவிட்டு சென்றுள்ளார். அவர் மீது பரிதாபப்படுகிறேன்.
அடுத்த தேர்தலில் மதுரையை அதிமுக கோட்டை ஆக்கி காட்டுவோம் என்று ஜெயலலிதா கூறியுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று ஒரு சினிமா வந்துள்ளது. அந்த சினிமா கதையை பற்றி அவர் ஏதாவது பேசியிருக்கலாம்.
இவ்வாறு அழகிரி கூறினார்.

No comments:

Post a Comment