கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, August 19, 2011

பள்ளி உண்டு பாடம் இல்லை! - மகிழன்


சமத்துவக் கல்விக்குத்
தடைகோரும் நேரமா?
ஆடுகள் மாடுகள்
மேய்க்கும் காலமா?

ஒட்டுதலும் கிழித்தலும்
ஆசிரியர் பணியா?
கல்வி வரலாற்றில்
தீராத பிணியா?

வள்ளுவர் படத்தையே
தாள் ஒட்டி மறைப்பதா?
வென்று விட்டோம் என்றே
ஆரியம் உரைப்பதா?

எப்படி எம் பிள்ளைகள்
நூல் இன்றிப் படிப்பார்கள்?
எப்படிக் காலாண்டுத்
தேர்வை முடிப்பார்கள்?

ஏழைப் பிள்ளைக்கு
இல்லையே நூல்கள்...
ஏளனமாய்ச் சிரிக்கும்
ஆயிரம் பூணூல்கள்!

- மகிழன்.

நன்றி : கருஞ்சட்டைத் தமிழர் .

No comments:

Post a Comment