கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 18, 2011

நாடாளுமன்ற வளாகத்தில் முரசொலி மாறன் படத்துக்கு பிரதமர், தலைவர்கள் மரியாதை




திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருமான முரசொலி மாறனின் 77வது பிறந்த நாள் 17 .08 .2011 அன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் முரசொலி மாறன் படம் வைக்கப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பிரதமர் மன்மோகன் சிங், மக்களவை சபாநாயகர் மீராகுமார், துணை ஜனாதிபதி அமித் அன்சாரி, மாநிலங்களவை துணைத் தலைவர் ரகுமான்கான், மத்திய அமைச்சர்கள் சரத்பவார், பவன்குமார் பன்சால், ஜி.கே. வாசன், தினேஷ் திரிவேதி, மல்லிகார்ஜூன கார்கே, வி.நாராயணசாமி, பாபன் சிங் கடோவர், பழனி மாணிக்கம், காந்திசெல்வன், நெப்போலியன்,
எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, டி.வேணுகோபால். ஏ.கே.எஸ்.விஜயன், சுகவனம், ஹெலன் டேவிட்சன், எஸ்.ஆர்.ஜெயதுரை, டி.கே..எஸ்.இளங்கோவன், செல்வகணபதி, திருச்சி சிவா, கே.பி.ராமலிங்கம், வசந்தி ஸ்டான்லி, ஜின்னா, தங்கவேலு, தொல்.திருமாவளவன், என்.எஸ்.வி.சித்தன், ராமசுப்பு, சந்தீப் தீக்ஷித், சுதர்சன நாச்சியப்பன், பி.விஸ்வநாதன், டி.கே.ரங்கராஜன், மனோகர் ஜோஷி, சைலேந்திர குமார், பீர்பால் சிங், மக்களவை செயலாளர் டி.கே.விஸ்வநாதன், மாநிலங்களவை செயலாளர் அக்னி ஹோத்ரி உள்ளிட்டோர், மாறன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment