கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, August 24, 2011

தை மாதத்தை புத்தாண்டாக அறிவித்தது ஏன்? - கருணாநிதி விளக்கம்


தை மாதம் முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டு ஏன் கொண்டு வரப்பட்டது என்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து, சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தை நீக்கும் புதிய மசோதா தமிழக சட்டப்பேவையில் 23.08.2011 அன்று அதிமுக அரசு தாக்கல் செய்தது. இதுதொடர்பாக, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியை நிருபர்கள் சந்தித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது கருணாநிதி அளித்த பதில் வருமாறு:
தை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு பதிலாக, சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கும் வகையில், அதிமுக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளதே.?
மறைமலையடிகள் தலைமையில் 1921ம் ஆண்டு 500 புலவர்கள் கூடி, கலந்துரையாடி, ஆழமாக விவாதித்து, அப்படி ஆய்ந்தறிந்து அறிவிக்கப்பட்ட ஒன்றுதான்; திருவள்ளுவர் ஆண்டு என்பதும் & ஆண்டு தொடக்கம் தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் நாளில்தான் என்றும் முடிவு செய்தனர்.
அந்த 500 தமிழ்ப் புலவர்கள் ஒன்றுகூடி எடுத்த முடிவின் அடிப்படையில்தான் திமுக ஆட்சி, தை மாதம் முதல் நாளை தமிழாண்டுத் தொடக்க நாள் என்றும், அதையொட்டிதான் திருவள்ளுவர் ஆண்டு என்றும் வரையறுத்து கொண்டாடி வருகிறோம்.
திமுக அரசின் சட்டத்தை ரத்து செய்து, அதிமுக அரசு பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தபோது இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதை எதிர்த்திருக்கிறார்களே?
அவர்களின் தமிழ் உணர்வுக்கு நான் தலை வணங்குகிறேன்.

No comments:

Post a Comment