கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 11, 2011

32 பேருக்கு ^3.20 லட்சம் : நலிந்தோர் உதவித்தொகை கருணாநிதி வழங்கினார்


நலிந்தோர் உதவித் தொகை ^3லட்சத்து 20 ஆயிரத்தை திமுக தலைவர் கருணாநிதி 32 பேருக்கு வழங்கினார்.
இதுகுறித்து, திமுக தலைமை கழகம் 08.08.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக திமுக தலைவர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் ^5கோடி வழங்கினார். இந்த பணம் வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டுள்ளது. அதில் கிடைக்கும் வட்டித் தொகையை கொண்டு மாதந்தோறும் ஏழை, எளிய, நலிந்தோருக்கு உதவித் தொகை 2005 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
வைப்பு நிதியாக போடப்பட்ட ^5கோடியில் புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர் சங்கத்துக்கு ^1கோடி வழங்கப்படும் என்று அறிவித்தார். மீதமுள்ள ^4 கோடியில் இருந்து வரும் வட்டித் தொகையை கொண்டு தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஜூலை மாதம் வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 32 பேருக்கு மொத்தம் ^3லட்சத்து 20 ஆயிரத்தை நேற்று கருணாநிதி வழங்கினார்.
நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து போகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment