கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, August 27, 2011

அமைச்சர் புத்திசந்திரன் பதவியை பறிக்க வேண்டும் : உயர்நீதிமன்றத்தில் வழக்கு


நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.முஸ்தபா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில் கூறியிருப்பதாவது:
உதகமண்டலம் அதிமுக எம்எல்ஏ புத்திசந்திரன் முதலில் சுற்றுலா துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் உணவு மற்றும் சிவில் சப்ளை துறைக்கு மாற்றப்பட்டார். மந்திரியாக பதவியேற்கும்போது, �அதிகார துஷ்பிரயோகம் செய்ய மாட்டேன்� என உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். ஆனால், அதற்கு மாறாக அவர் தற்போது நடந்து கொண்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் தனக்கு வேண்டியவர்களுக்கு ஆவின் பூத் ஒதுக்க வேண்டும் என தனது லெட்டர்பேடில் சிபாரிசு கடிதம் எழுதி கொடுத்துள்ளார். ஏற்கனவே உள்ளவர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு ஆவின்பூத் கொடுக்க அமைச்சர் உத்தரவிட்டது தவறானது.
அதிகாரதுஷ்பிரயோகம் செய்த அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
அமைச்சராக நீடிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக முதல்வருக்கு உத்தரவிட வேண்டும். இதுதவிர இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குறைபாடுள்ள பணிக்கு கில்குந்தா நகராட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு வரவேண்டிய ரூ.3 லட்சத்தை தற்போது அமைச்சரான பிறகு பெற்றுள்ளார். மலைஜாதி மக்கள் நல்வாழ்விற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை தனது நகராட்சிக்கு ஒதுக்கி அதை பினாமி பெயரில் வேலை கொடுக்க திட்டமிட்டுள்ளார். அமைச்சராக உள்ள இவர் இப்படி செயல்படுவது சட்டவிரோதமானது. எனவே இவர் பதவியில் நீடிக்க தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு முஸ்தபா தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கை 26.08.2011 அன்று விசாரிப்பதாக தெரிவித்தனர். இந்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் புத்திசந்திரன், நீலகிரி மாவட்ட கலெக்டர், உள்பட 5 பேர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment