கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, August 28, 2011

தமிழக ஆளுநராக நியமனம் : ரோசய்யாவுக்கு கருணாநிதி வாழ்த்து


தமிழக புதிய ஆளுநர் ரோசய்யாவுக்கு, திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசய்யாவை, தமிழக ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் 26.08.2011 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அவர் விரைவில் தமிழக ஆளுநராக பொறுப்பேற்பார் என்று தெரிகிறது. அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரோசய்யாவுக்கு, கருணாநிதி 27.08.2011 அன்று அனுப்பிய வாழ்த்து தந்தியில், “தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நிர்வாகத்தில் பெருத்த அனுபவம் பெற்ற நீங்கள், அரசியல் சாசனம் மற்றும் பொறுப்புகளையும் பாகுபாடின்றி நிறைவேற்றுவீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்“ என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல், கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பரூக் மரைக்காயருக்கும் கருணாநிதி வாழ்த்து தந்தி அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment