கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 5, 2010

லஞ்சம், ஊழலுக்கு நான் ஒரு நெருப்புமாதிரி! - தமிழக முதலமைச்சர் கலைஞர் விளக்கம்


லஞ்சம், ஊழல் ஆகியவற்றுக்கு நான் ஒரு நெருப்பு மாதிரி என முதல்வர் கலைஞர் கூறியுள்ளார்.

முதலமைச்சர் கலைஞர் 02.12.2010 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

எதிர்க்கட்சித் தலைவர் ஜெய லலிதா தொடங்கி, அந்தக் கட்சியில் உள்ளவர்களும், வேறு சில கட்சி களின் நண்பர்கள் சிலரும், என் னைப் பற்றி குறிப்பிட்டுப் பேசும் போது எனது சொத்துகள் குறித்துப் பேசுகின்றனர்.

நான் ஏதோ சல்லிக் காசு கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும், இன்றைக்கு ஆசியாவிலேயே முதல் பணக்கார னாக இருப்பதாகவும், எனது பெய ரில் ஏராளமான சொத்துகளையும், எஸ்டேட்டுகளையும் வாங்கிக் குவித்திருப்பது போலவும் பேசியும், எழுதியும் வருகிறார்கள்.

என்னைப் பற்றி குறை கூறுபவர் களுக்கும், அதை நம்பிக் கொண்டி ருப்பவர்களுக்கும் எனது சொத்து கள் என்ன என்பது குறித்து விளக் கம் அளிக்க வேண்டியது என்னு டைய கடமை.

என்னதான் அவர்கள் என் குடும் பத்தைப் பற்றி குறைவாக எழுதி னாலும், நான் குழந்தையாக இருந்த போதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவுக்கும், உயர் நிலைப் பள்ளியில் படிக்க திருவா ரூரில் கொண்டுபோய் சேர்க்கக் கூடிய அளவுக்கும் ஓரளவு வசதி யுள்ள குடும்பம்தான் என்னுடை யது.

எனக்கு 18 வயதாகும்போது ÒமுரசொலிÓ வாரப் பத்திரிகையைத் தொ டங்கி விட்டேன். அப்போதே நாடகங்களை எழுதுகின்ற முயற்சியிலும் ஈடுபட்டேன். திக பிரச்சாரக் கூட்டங்களிலும் கலந்து கொண்டேன்.1949 இல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் எழுத்தாளராகச் சேர்ந்தேன். அந்தக் காலத்திலேயே மாத சம்பளமாக ரூ.500 பெற்றேன். அதே ஆண்டு செப்டம்பர் 17ம் தேதியன்று ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையிலே தி.மு.க அண்ணா வால் தொடங்கப்பட்ட போது, அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டேன்.

என்னுடைய Òமந்திரி குமாரிÓ நாடகம் சேலம் மாடர்ன் தியேட்டர்சாரால் திரைப்படமாக எடுக்கப்பட்டபோது எங்கள் குடும்ப வாழ்க்கை சேலத்தில் தொடங்கியது. அப்போது, சேலம் வந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மண மகள் திரைப்படத்துக்கு நான் தான் திரைக்கதை, வசனம் எழுத வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு சம்பளமாக ரூ.10 ஆயிரம் பெற்றேன்.

அதுபோலவே Òஇருவர் உள்ளம்Ó திரைப்படம் உரையாடலை நான் எழுதியதுபோது, நூறு நாளைத் தாண்டி ஓடியதால், தயாரிப்பாளர், எல்.வி. பிரசாத் முதலில் கொடுத்த பத்தாயிரம் ரூபாயைத் தவிர்த்து, மேலும் பத்தாயிரம் ரூபாயை அளித்தார்.
அந்தக்காலக் கட்டத்தில் சென்னைக்கே நான் குடிபெயர்ந்து தியாகராய நகரில் ஒரு வாடகை வீட்டில் குடும் பம் நடத்தினேன். அப்போது ஒருநாள் கலைவாணர் என்னிடம் ஒரு பந்தயம் கட்டி, அதிலே 5000 ரூபாய் எனக்கு இலாபம் கிடைத்தது. அது கண்டு வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்த கலைவாணர் அதற்கு மேல் தேவையான பணத்தைத் தானே போட்டு எனக்கு ஒரு கார் வாங்கி தந்தார்.

இவைகளைத் தொடர்ந்து இன்றுவரை 75 படங்களுக்கு மேல் திரைக்கதை, வசனம் எழுதி சம்பளம் பெற்றுள்ளேன். 1957-ல் குளித்தலை சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றது முதல் இன்றுவரை பேரவை உறுப்பினராகவோ, மேலவை உறுப் பினராகவோ இருந்து வருகிறேன்.

முரசொலி நாளிதழும் எத்த னையோ ஏற்ற, இறக்கத்துடன் தொடர்ந்து வெளிவருகிறது. குங் குமம், முத்தாரம், வண்ணத் திரை, ரைசிங் சன் ஆகிய இதழ்களும் நான் தொடங்கியவைதான். 1967 முதல் 1969 வரை பொதுப் பணித் துறை அமைச்சராகவும், அதன் பிறகு 5 முறை முதல்வராகவும் இருந் திருக்கிறேன்.

ரூ.45 ஆயிரத்துக்கு வாங்கிய வீடு

எல்லா முதல்வர்களுடைய வீடு களையும் விட வசதி குறைவான எளி மையான வீட்டில்தான் வாழ்ந்து வருகி றேன்.

சென்னை கோபாலபுரத்திலே உள்ள இந்த வீடு கூட, நான் அமைச்ச ராவதற்கு முன்பு ரூ.45 ஆயிரத்துக்கு வாங்கியதுதான். என் பிள்ளைகள் எல் லாம்கூட திருமணம் ஆகும்வரை தான் இந்த வீட்டிலே இருந்தார்கள். அதற்குப் பிறகு இந்த வீட்டில் இடம் இல்லாததால் சொந்தமாக வீடு வாங் கிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

அரசு சார்பில் உள்ள வீடுகளில் தங்க வேண்டும் என்று அழைத்தும், தெருவில் வரிசையாக உள்ள வீடு களில் ஒன்றில்தான் வசித்து வருகி றேன். வேறு எதையும் வாங்கியது இல்லை: என்னுடைய 87 வயதில் பல பொறுப்புகளில் இருந்தாலும், சென் னையில் உள்ள இந்த ஒரு வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்டு களையோ விலைக்கு வாங்கியதும் இல்லை; அரசு நிலங்களை ஆக்கிர மித்துக் கொண்டதும் இல்லை. குறைந்த விலைக்குப் பெற்றுக்கொண் டதும் இல்லை. ஆனால் என்னை ஆசியாவிலேயே பெரிய கோடீஸ்வரன் என்றெல்லாம் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.

ரூ.100 கோடி

Òசன்Ó தொலைக்காட்சி தொடங்கப்பட்ட போது என் அருமைக் கண்மணி முரசொலி மாறன் என் னுடன் கலந்தாலோசித்து ÒபூமாலைÓ என்ற பெயரில் சிறிய அளவில் ஒரு தொலைக்காட்சி தொடங்கப்பட்டு, அது படிப்படியாக வளர்ந்தது. அதன் நிர்வாகத்தை பேரன் கலாநிதி மாறன் மேற்கொண்டு அவரது அறிவாற்றலால் அந்த நிறுவனம் பல மடங்கு உயரகாரணமாக அமைந்தார்.

முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, சன் டி.வி.யை தனியாக நடத்த விரும்புவதாக எனது பேரப் பிள்ளை கள் (கலாநிதி, தயாநிதி) என்னிடம் கேட்டனர். அவர்களின் விருப்பத்தை யேற்று நானும் அதற்கு உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

அப்படி பிரிந்து சென்றபோது, சன் டி.வி. தரப்பில் 2005 அக்டோபரில் ரூ.100 கோடி வழங்கினார்கள். அதற் கான வருமான வரியாக ரூ.22.52 கோடியை நான் செலுத்தியுள்ளேன். எஞ்சிய தொகையை என்னுடைய மகன்களுக்கும், மகள்களுக்கும் பங் கிட்டுக் கொடுத்தேன்.

அதிலே, எனக்கும் ஒரு பங்காக ரூ.10 கோடி கிடைத்தது. அதில் அய்ந்து கோடியை இருப்பு செய்து, அந்தத் தொகையைக் கொண்டு கருணாநிதி அறக்கட்டளை தொடங்கப்பட் டது. ஏழை, எளியோருக்கு மருத்துவ உதவியும், கல்வி உதவியும் இந்தத் தொகைக்கு கிடைக்கும் வட்டியைக் கொண்டு வழங்கப்பட்டு வருகிறது. ஏழையெளியோர்க்கு மருத்துவ உதவியாகவும், கல்வி வளர்ச்சி உதவியாகவும் 2,145 பேர்களுக்கு 1 கோடியே 72 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறேன்.

வங்கியில் இருப்பு செய்யப்பட்ட இந்த ஐந்து கோடி ரூபாயில், ஆண்டுதோறும் அறிவார்ந்த புத்தகங்களை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள் ஐந்து பேரைத் தேர்வு செய்து, அவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம், பொற்கிழியாக வழங்கிட தென்னிந்திய புத் தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் என 10&1&2007 அன்று நடைபெற்ற 30வது புத்தகக் கண்காட்சி திறப்பு விழா விலே அறிவித்தேன். இதுவரை 17 அறிஞர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் பொற்கிழிகள் வழங்கப்பட்டுள்ளன.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத் தொடக்க விழா 30&6&2008 அன்று நடைபெற்றபோது ஆண்டுதோறும் செம்மொழித் தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் அறிஞருக்கு 10 இலட்ச ரூபாய் பொற்கிழி விருது வழங்கிட ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என நான் அறிவித்து, அதன் படி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் Òகலைஞர் கருணாநிதி செம் மொழி அறக்கட்டளைÓ தொடங்கிட 21&7&2008 அன்று ஒரு கோடி ரூபாய் வழங்கினேன். கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு இந்த அறக் கட்டளை யின் முதல் விருதாக பத்து இலட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
2004&2005ஆம் ஆண் டில் Òமண்ணின் மைந்தன்Ó படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 11 இலட்சம் ரூபாய். Òகண் ணம்மாÓ படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 10 இலட்சம் ரூபாய் இரண்டையும் சேர்த்து 21 இலட்சம் ரூபாயை Òசுனாமி நிவாரண நிதிÓயாக அன் றைய முதல்வர் ஜெயலலிதாவிடம், தம்பி மு.க. ஸ்டாலின் வாயிலாக நேரில் வழங்கப்பட்டது.
2008ஆம் ஆண்டு, Òஉளியின் ஓசைÓ திரைப்படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் 25 இலட்சம் ரூபா யில் வருமான வரி போக, 18 இலட்சம் ரூபாய் திரைத் துறையிலே பணியாற்றிய நலிந்த கலைஞர்களுக்கு 9&7&2008 அன்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர், ராமநாராயணன் முன்னின்று ஏற்பாடுசெய்த நிகழ்ச்சியில் என்னால் நேரடியாக வழங்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட Òபெண் சிங்கம்Ó திரைப்படத்திற்காகக் கிடைத்த 50 லட்சம் ரூபா யுடன், சொந்த நிதி 11 லட் சத்து 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து 14&9&2009 அன்று தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியிலே சேர்த்து, தமிழகத்திலே உள்ள அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்வி பயிலும் 56 மாணவர்கள், பொறியியல் கல்லு£ரிகளில் பயிலும் 1165 மாணவர்கள் என மொத்தம் 1221 மாணவ மாணவியருக்கு தலா 5000 ரூபாய் வீதம் மொத்தம் 61 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கல்வி வளர்ச்சிநிதியாக 26&10&2009 அன்று து£ய்மைப் பணிபுரிவோர் நல வாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டது.
மேலும், தற்போது தயாரிக்கப்பட்டுவரும் Òஇளைஞன்Ó திரைப்படத்திற்குரிய கதை வசனம் எழுதியமைக்கு 24.4.2010 அன்று வருமான வரி போக அளிக்கப்பட்ட 45 இலட்சம் ரூபாய் ஊதியத்தைத் தமிழக அரசின் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலே ஒப்படைத்து, அந்தத் தொ கையினை தமிழகத்திலே உள்ள மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக மாற்றுத் திறனாளி களின் நலன்களுக்காகச் செலவிட வழங்கப்பட்டது.
நான் கலந்துகொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளில் எனக்கு பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்குவதுண்டு. அவற்றைக்கூட அரசு விழாக்களில் அவை கள் வழங்கப்பட்டால், அவற்றை தலைமைச் செயலகத்திலும், கட்சி நிகழ்ச்சிகளிலே வழங்கப்பட்டவை என்றால் அவற்றை திமுக தலைமைக் கழகம், அண்ணா அறிவாலயத்திலே உள்ள கருவூலத்திலும் ஒப்படைத்திருக்கின்றேன்.
இறுதியாக தற்போது என் கணக்கிலே எவ்வளவு இருப்பு உள்ளது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். சன் தொலைக் காட்சி வாயிலாக எனக்குக் கிடைத்த பத்து கோடி ரூபாயில் Òகலைஞர் கருணாநிதி அறக்கட் டளைÓக்காக ஐந்து கோடி ரூபாய் கொடுத்ததைப் பற்றி நான் முதலில் குறிப்பிட்டிருப்பதைப் போல கொடுத்ததை அன்னியில் எஞ்சிய 5 கோடி ரூபாயை வைப்பு நிதியாக வங்கியிலே செலுத்தி, அதற்காக கிடைத்த வட்டித்தொகையெல்லாம் சேர்ந்து தற்போது வைப்பு நிதியாக 5 கோடியே 65 இலட்சத்து 92 ஆயிரத்து 134 ரூபாயும், சேமிப்புக்கணக்கில் (எஸ்.பி. அக்கவுண்ட்) 35 இலட்சத்து 90 ஆயிரத்து 86 ரூபாயும் இன்றைய தேதியில் உள்ளது


நான் வசிக்கின்ற வீட்டைக் கூட மருத்துவமனை அமைப்பதற்காக எழுதிக் கொடுப்பதாக அறிவித்தேன்.

தி.மு.க.விலே சென்னையில் முதன்முதலாக சொந்தமாக வீடும், காரும் எந்தப் பொறுப்புக்கும் வராதபோதே வாங்கியவன் என்ற பெயர் எனக்கு உண்டு.

இது என்னுடைய சொத்துக் கணக்கு. லஞ்சம், ஊழல் ஆகியவற் றைப் பொருத்தவரையில் என் உதவியாளர்கள் கூறுவது போல நான் ஒரு நெருப்பு மாதிரி!

முதல்முறையாக முதல்வராக பதவியேற்றபோது, தஞ்சையில் கூட்டுறவு நிறுவனம் ஒன்றில் எனது நண்பர் தவறு செய்தபோது நட வடிக்கை எடுத்தேன். அதனால், அவர் தனது வழக்கறிஞர் பணியே செய்ய முடியாமல் ஆனது.

மஸ்டர் ரோல் ஊழல் குற்றச் சாற்றுகள் கூறப்பட்டபோது, சட் டப் பேரவையில் மாநகராட்சி கலைக்கப்படும் என்று அறிவித்து, அவ்வாறே செயல்படுத்தியுள்ளேன்.

எனக்கு மிகவும் வேண்டிய நண் பரான கவிஞர் கருணானந்தம். அவ ருடைய ஒரே மகன் குலோத்துங் கனுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர ஒரு மதிப்பெண் குறைந்தது. முதல்வர் மனது வைத்தால் சேர்த் துக்கொள்ளலாம் என்று கேட்ட போதுகூட நான் அதற்கு இணங்க வில்லை.

என்னுடைய குணம்

நான் இதையெல்லாம் எழுது வதற்குக் காரணம் யாரிடமும் சான்றிதழ் பெறவேண்டும் என்பதற் காக அல்ல. என்னுடைய குணம், இயல்பு அப்படி என்பதை என் மீது குறை காண்போர் புரிந்துகொள்ள வேண்டும்.

என் குடும்பத்தைச் சேர்ந்தவர் கள், உற்றார், உறவினர்கள் என அவரவர் உழைத்து ஒரு சிலர் தங் களுக்கு என வீடுகளையோ, சொத்து களையோ வாங்கியிருக்கலாம். ஆனால், அதற்காக நான் எந்தவித மான நிதி உதவியோ, அரசு சார் பிலான உதவியோ செய்தது இல்லை என்பதை நான் உறுதிப்பட கூறுகிறேன். -இவ்வாறு முதல்வர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment