கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 5, 2010

கி. வீரமணி அவர்களுக்கு முதலமைச்சர் கலைஞர் பிறந்த நாள் வாழ்த்து




கி. வீரமணி அவர்கள் தமது 78 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி, முதலமைச்சர் கலைஞர் அவர்களை 01.12.2010 அன்று சந்தித்து பொன்னாடை அணிவித்து, குடிஅரசு தொகுதிகளை வழங்கினார். முதலமைச்சர் கலைஞர் அவர்கள், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி உள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் 78 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தார். மனதுக்கு உற்சாகத்தைக் கொடுப்பதுதான் வாழ்த்து என்று கூறினார். தமிழர் தலைவர் அவருக்கு நன்றி தெரிவித்தார். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழர் தலைவர் கி. வீரமணிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் .


No comments:

Post a Comment