கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, March 2, 2011

திமுக வேட்பாளர்கள் நேர்காணல்


தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்பவர்கள் வரும் 5ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மார்ச் மாதம் 8ஆம் தேதி திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்குகிறது என்று, திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் 02.03.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பி விண்ணப்பம் தந்தவர்களிடம் முதல்வர் கருணாநிதி வரும் 8&ம் தேதி முதல் நேர்காணல் நடத்த உள்ளார். மாவட்ட வாரியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நடக்கும் நேர்காணலில் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு குறித்து ஆராய்ந்து அறிகிறார். நேர்காணல் நடக்கும் நாள், மாவட்ட விவரம் வருமாறு:

இதன்படி மார்ச் 8ஆம் தேதி காலை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்,


மார்ச் 8ஆம் தேதி மாலை விருதுநகர், தேனி, திண்டுக்கல்


மார்ச் 9ஆம் தேதி காலை சிவகங்கை, மதுரை புறநகர், மதுரை மாநகர், ஈடுரோடு


மார்ச் 9ஆம் தேதி மாலை நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர்


மார்ச் 10ஆம் தேதி காலை புதுக்கோட்டை, நாமக்கல், திருச்சி


மார்ச் 10ஆம் தேதி மாலை கரூர், பெரம்பலூர், அரியலூர்


மார்ச் 11ஆம் தேதி காலை நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர்


மார்ச் 11ஆம் தேதி மாலை விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி வடக்கு, தர்மபுரி தெற்கு


மார்ச் 12ஆம் தேதி காலை திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம்


மார்ச் 12ஆம் தேதி மாலை திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை


மார்ச் 13ஆம் தேதி புதுவை மற்றும் காரைக்கால் தொகுதிகளுக்கு போட்டியிட விரும்புபவர்களிடம் நேர்காணல் நடைபெறும்.

குறிப்பிட்ட தேதிகளில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தை சேர்ந்த கழகச் செயலாளர், கழக நிர்வாகிகள், அந்தந்த தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, பகுதி, நகர கழக செயலாளர்கள் மட்டுமே நேர்காணலுக்கு வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment