கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, March 17, 2011

வைகோ உங்களை சந்திப்பாரா? கலைஞர் பதில்


முதல் அமைச்சர் கருணாநிதி புதன்கிழமை (16.03.2011) இரவு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உங்களை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளிவருகிறதே?

பதில்: அப்படி ஒன்றும் நடக்காது.

கேள்வி: கம்யூனிஸ்ட் கட்சி தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதே?

பதில்: நான் அடுத்த வீட்டையோ எதிர் வீட்டையோ எட்டிப்பார்ப்பது இல்லை.

கேள்வி: தமிழக சட்டசபைக்கான தேர்தல் பிரசாரத்தை எப்போது தொடங்க இருக்கிறீர்கள்?

பதில்: தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம்.

கேள்வி: சென்னையில் உங்கள் கூட்டணி கட்சிகளுக்கே அதிக தொகுதிகளை விட்டுக்கொடுத்து இருக்கிறீர்களே?

பதில்: எண்ணிப் பாருங்கள்.

கேள்வி: சட்டசபை தேர்தலில் தி.மு.க. குறைந்த தொகுதிகளில் போட்டியிடுகிறதே?

பதில்: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இவ்வாறு முதல் அமைச்சர் கருணாநிதி கூறினார்.


No comments:

Post a Comment