கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, March 29, 2011

தென் மாவட்டத்தில் 52 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் - மத்திய அமைச்சர் அழகிரி பேட்டி


சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டத்தில் 52 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தூத்துக்குடியில் மத்திய அமைச்சர் அழகிரி நிருபர்களிடம் கூறினார்.
மத்திய அமைச்சரும், தென்மண்டல திமுக அமைப்பு செயலாளருமான அழகிரி 28.03.2011 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை பார்வையிட்டு திமுக கூட்டணி கட்சி நிர்வாகி களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 234 தொகுதி களிலும் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப் பட்டுள்ளன. எனவே தற்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையையும் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தென்மாவட் டத்தில் உள்ள 52 தொகுதிக ளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும். தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன் 35 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்’ என்றார்.
தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி, மேயர் கஸ்தூரி தங்கம் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூரில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மத்தியஅமைச்சர் மு.க.அழகிரி கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “திமுக கூட்டணி கட்சியினரின் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். தேர்தல் ஆணையம் கெடுபிடி செய்வது எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிகிறது. ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தல் ஆணையம் இப்படி கெடுபிடியாக நடந்து கொள்கிறது’ என்றார்.

No comments:

Post a Comment