கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, March 14, 2011

புதுச்சேரி மாநில அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கலைஞர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்


புதுச்சேரி மாநில அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் முதல் அமைச்சர் கருணாநிதி முன்னிலையில், தி.மு.க.வில் இணைந்தனர்.

தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

முதல் அமைச்சர் கருணாநிதி முன்னிலையில், 13ந் தேதி மாலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த புதுவை நகர அவைத் தலைவர் செ.நடராஜன் தலைமையில் மாநில அ.தி.மு.க. இலக்கிய அணி துணைச் செயலாளர் எஸ்.முருகசாமி உடையார், நெல்லித்தோப்பு தொகுதி துணைச் செயலாளர் ஏ.அந்தோணிசாமி, டி.ஆர்.நகர் செயலாளர் ஐ.பழனிவேல் உடையார், மாவட்ட பிரதிநிதிகள் நெல்லித்தோப்பு தொகுதி வி.ராமு, என்.ராதா அம்மாள், திருமால் நகர் செயலாளர் ஏ.தாமஸ் பாண்டியன், சக்தி நகர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் டி.மணி, வேல்முருகன் நகர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் ஆர்.குமார், பெரியார் நகர் வார்டு அவைத்தலைவர் பி.பிரகாஷ்ராஜ், சமூக சேவகர் ஜெ.ஜேம்ஸ் ஜெயகரன் உள்ளிட்ட அ.தி.மு.க. கிளை நிர்வாகிகள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர்.


அப்போது, தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, துணைப் பொதுச் செயலாளர் துரை முருகன், தேர்தல் உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு எம்.பி., க.பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment