நில அபகரிப்பு புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜா, ஈரோடு மேயர் குமார் முருகேஷ் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் ராமசாமி(75). கடலை மில் உரிமையாளர். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில், “கடந்த 2007ல் முன்னாள் அமைச்சர் ராஜா, ஈரோடு மேயர் குமார் முருகேஷ், மாவட்ட திமுக துணை செயலாளர் விஸ்வநாதன், அவரது மகன் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியம் உட்பட 12 பேர் என்னை மிரட்டி எனது 2 ஏக்கர் நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டனர். அபகரிப்பு செய்த நிலத்தை மீட்டு தரவேண்டும்” என கூறியிருந்தார்.
ராஜா, குமார் முருகேஷ் உட்பட 12 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். 04.08.2011 அன்று அதிகாலை 2.30 மணியளவில், ஈரோடு டிஎஸ்பி தனபால் தலைமையில் போலீசார் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மேயர் குமார் முருகேஷ், பெருந்துறையில் இருந்த விஸ்வநாதன், மகன் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர்.
பெருந்துறை டிஎஸ்பி குணசேகரன் தலைமையிலான போலீசார் கவுந்தப்பாடியில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜாவின் வீட்டுக்கு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று, வாரன்ட் இல்லாமலேயே அவரை கைது செய்தனர்.
5 பேரும் ஈரோடு ஜே.எம்.3 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரிமாண்ட் செய்ய மறுப்பு:
முன்னாள் அமைச்சர் ராஜா உட்பட 5 பேரையும் முதலில் ஜே.எம்.3 நீதிபதி நராஜ் வீட்டுக்கு போலீசார் அழைத்து சென்றனர். நீதிபதி முன்பு அவர்களை ஆஜர்படுத்தி, ரிமாண்ட் செய்யக் கோரினர். வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிபதி கேட்டார். போதிய ஆவணங்களை போலீசார் தாக்கல் செய்யாததால், ரிமாண்ட் செய்ய முடியாது என நீதிபதி மறுத்துவிட்டார். அரசு வக்கீல் குறுக்கிட்டு, �ஒரு மணி நேரம் அவகாசம் வேண்டும்� என கேட்டார். அதன்பிறகு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. கைதான 5 பேரையும் வரும் 18ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment