கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, August 5, 2011

சட்டசபை கூட்டத்தில் திமுக பங்கேற்குமா? : கருணாநிதி பேட்டி


திமுக தலைவர் கருணாநிதி 03.08.2011 அன்று அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவரது பேட்டி:
சட்டசபை கூட்டத்தில் திமுக பங்கேற்குமா? திமுகவின் அணுகுமுறை எப்படி இருக்கும்?
நிலைமைக்கு ஏற்ப நடந்து கொள்வோம்.
பேரவையில் திமுகவிற்கு ஒரே பகுதியில் இடம் ஒதுக்கவில்லையே?
இடமே ஒதுக்கவில்லை என்றால் என்ன செய்ய முடியும்.
பட்ஜெட் எப்படி இருக்கும்?
நிதிநிலை அறிக்கையை படித்த பிறகுதான் கூற முடியும்.
பழிவாங்கும் நடவடிக்கை தொடர்ந்தால், சிறை நிரப்பும் போராட்டம் நடத்த, உங்களிடம் அனுமதி கேட்கப்போவதாக மு.க.ஸ்டாலின் கூறியிருந்தாரே?
அடக்குமுறை தொடர்ந்து கொண்டே இருக்குமானால், நாங்களும் தொடர்ந்து போராடுவோம்.
திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று ராமதாஸ் கூறியிருக்கிறாரே?
அதற்காக நாங்கள் வருத்தப்படவும் இல்லை. மகிழ்ச்சி அடையவும் இல்லை.
சமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பு எப்படி இருக்கும்?
தீர்ப்பு வருவதற்குள் எதுவும் கூறமுடியாது.
திருவாரூர் கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறீர்கள். ஆனால், பூண்டி கலைவாணன் ஜாமீனில் வெளிவந்ததும் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளாரே?
அதற்கும் சேர்த்து தான் கண்டனம்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.

No comments:

Post a Comment