கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, August 5, 2011

சைதை கிட்டு மரணம்: கலைஞர், மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி


தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் ‌எம்.எல்.ஏ. சைதை கிட்டு (வயது 59) காலமானார். தேவக்கோட்டையில் இருந்து சென்னை வரும் வழியில் திருச்சி அருகே மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.


சைதை கிட்டு சைதாபேட்டை சட்டமன்ற தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார்.
பின்னர், உடல் நிலையை கருத்தில் கொண்டு தேர்தலில் மீண்டும போட்டியிடவில்லை. கட்சி பொறுப்பில் இருந்தும் விலகினார். உடல்நிலை தேறியபின் தொடர்ந்து தீவிரமாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்தார்.

தேவக்கோட்டையில் இருந்து சென்னை வரும் வழியில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அதை தொடர்ந்து அவரது உடல் சின்னமலையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. இவரது மனைவி வள்ளி. மகள் கவிதா. இவர் அமெரிக்காவில் டாக்டராக உள்ளார். மகன் கருணா. சென்னையில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.


மறைந்த சைதை கிட்டுவின் உடலுக்கு 04.08.2011 அன்று திமுக தலைவர் கலைஞர் மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக பிரமுகர்களும் மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கிட்டுவின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை. சொந்த ஊரில் அவரது உடல் அடக்கம் 05.08.2011 அன்று செய்யப்படுகிறது. அதற்காக 04.08.2011 அன்று பிற்பகலில் அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.


No comments:

Post a Comment