கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, August 5, 2011

உழவர் சந்தைகளை நாடு முழுவதும் தொடங்க வேண்டும்: டி.கே.எஸ். இளங்கோவன்


03.08.2011 அன்று மக்களவையில் விலைவாசி பிரச்சனை மீது வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடைபெற்றது. கேள்வி நேரம் முடிந்ததும் இதற்கான தீர்மானத்தை பாஜக கொண்டுவந்தது.


விவாதத்தில் திமுக சார்பில் பேசிய டிகேஎஸ் இளங்கோவன்,


அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொதுவிநியோகத் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும். விலைவாசி உயர்வுக்கு இடைத்தரகர்களே காரணம். இதனை ஒழிக்க உழவர் சந்தைகளை நாடு முழுவதும் தொடங்க வேண்டும்.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் உழவர் சந்தை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசு இடத்தில் நேரடியாக தங்கள் விலை பொருட்களை விற்று வந்தனர். இதில் இடைத்தரகர்கள் யாருமில்லை. இடைத்தரகர்களே விலைவாசி உயர்வுக்கு காரணம். அவர்கள் செயல்பட அனுமதிப்பதால் அரசும் விலையேற்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். பதுக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதே விலைவாசி உயர்வுக்கு காரணம் என்றார்.

No comments:

Post a Comment