கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, November 5, 2010

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தி.மு.க. ஆட்சியில்தான் அதிக நீர் கிடைத்தது


முதல்வர் கருணாநிதி நேற்று (04.11.2010) வெளியிட்ட கேள்வி & பதில் அறிக்கை:
காவிரி நதிநீர் ஆணையத்தை அமைக்குமாறு பலமுறை வலியுறுத்தியும், கண்டுகொள்ளாததால்தான், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அ.தி.மு.க. வாபஸ் பெற்றுக் கொண்டது என்று ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறாரே?
அப்போதைய அரசியல் நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்து வந்தவர்களுக்கு, இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியும். வாஜ்பாய் தலைமையில் அரசு அமைந்ததில் இருந்து, இங்கிருந்த திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும், ராமகிருஷ்ண ஹெக்டேவை அமைச்சரவையில் இருந்து விலக்க வேண்டும், உள்துறை அமைச்சர் அத்வானிக்கு இருந்த முக்கியத்துவத்தை குறைத்திட வேண்டும், தன் மீதுள்ள ஊழல் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இவை நிறைவேறாத காரணத்தால் கோபம் கொண்டு, ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.
அதனால்தான், ‘அ.தி.மு.க.வுடன் கூட்டணி இருந்த காலம்தான், எனது அரசியல் வாழ்க்கையிலேயே மிகவும் வேதனையான காலம்’ என்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய் 22.8.1999 அன்று சொன்னதை, இன்னமும் யாரும் மறந்து விடவில்லை.
‘கர்நாடக அரசு ஹேமவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை’ என்று 6.3.1970 அன்று சட்டப்பேரவையில் தாங்கள் பேசியிருப்பதாக ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
1974க்கு முன்பே கர்நாடக மாநில அரசினர் 1924ம் ஆண்டு ஒப்பந்தமே 1974ம் ஆண்டு முடிந்து விடுகிற ஒப்பந்தம் என்று வாதிடத் தலைப்பட்டு, அதற்கு முன்னதாகவே, 1924ம் ஆண்டு ஒப்பந்தப் பிரிவுகளுக்கு மாறாக, 1966ம் ஆண்டு ஹேமவதி, ஹேரங்கி அணைகளைக் கட்டத் தொடங்கி விட்டனர். அண்ணா தலைமையிலான திமுக அரசு தனது எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், மத்திய அரசு உடனடியாக தலையிட கோரியது. 1924ம் ஆண்டு ஒப்பந்தப்படி, இரு மாநிலங்களும் ஒப்புக் கொண்ட பின்னர்தான், புதிய அணைகளைக் கட்ட வேண்டும். ஆனால், கர்நாடக அரசு தன்னிச்சையாக 1966ல் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் அணைகளைக் கட்டத் தொடங்கியது. இது குறித்து இரு மாநிலங்களுக்கிடையே 1966&68ல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து கடிதப் போக்குவரத்துகளும் நடந்தன.
இவை பயனளிக்காததாலும், கர்நாடக அரசு அணைகளைக் கட்டுவதில் முனைப்பாக இருந்ததாலும்; 17.2.1970ல் நடுவர் மன்றம் அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு நான் கடிதம் எழுதினேன். இவை அனைத்தையும் மனதிலே கொண்டுதான், 1924ம் ஆண்டு ஒப்பந்தத்தைத் தூக்கியெறிந்து விட்டு, அதற்குப் பிறகு இரு அரசுகளும் கூடிப் பேசலாம் என்ற அடிப்படையிலேயே பேசி வருகிறார்கள். ஹேமவதி அணைக்கட்டு கட்டுவதில் தமிழக அரசுக்கு எந்தவிதமான மறுப்பும் இல்லை. ஆனால், அந்த அணை கட்டப்படுகிற நேரத்தில், அதனால் தமிழ்நாட்டினுடைய நிலவளம் எந்த அளவுக்குப் பாதிக்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான், 1924ம் ஆண்டு ஒப்பந்தத்தின் ஷரத்துகள் மீறப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கண்ணுங்கருத்துமாக இருக்கிறோம். சில நிபந்தனைகளை வைத்துக்கொண்டு உத்தரவாதம் அளிக்கிறோம். மைசூர் அரசு முன்வந்தால், மைசூர் அரசும், தமிழக அரசும் இரு அரசுகளும், மத்திய அரசின் முன்னிலையில் மீண்டும் கூடிப்பேசி இதுபற்றி நல்ல முடிவு காண்பதில் எனக்கு எந்தவிதமான மறுப்பும் இல்லை என்று 6.3.1970 அன்று நான் பேசியிருக்கிறேன். ஜெயலலிதா கற்பனை செய்வது போல நான் பேசவில்லை.
ஹேமவதி அணையை 1966ம் ஆண்டே கர்நாடக அரசு கட்டத் தொடங்கிவிட்டது. இதுகுறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும், மத்திய அரசுடன் தமிழக அரசு கொண்டிருந்த கடிதப் போக்குவரத்துகளும் பலனளிக்காததால், நடுவர் மன்றக் கோரிக்கையை நான் முன்வைத்தேன். இந்த பின்னணியில் படித்துப் பார்த்தால்தான், காவிரிப் பிரச்னை பற்றிய வரலாறு அறிந்தவர்களுக்கு, நான் பேசியதன் பொருளைப் புரிந்துகொள்ள முடியும்.
1990ம் ஆண்டு திமுக ஆட்சியில், அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங்கை சந்தித்து, நடுவர் மன்றம் தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க. முதலில் ஒப்புக் கொண்டபோதிலும், கடைசி நேரத்தில் வர மறுத்து, அவர்கள் தனியாகச் சென்று, ஒரு மனுவினைப் பிரதமரிடம் அளித்தார்கள்.
நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பையாவது நிறைவேற்றுவதற்கு திமுக அரசு பாடுபட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?
நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை நடைமுறைப்படுத்துவது பற்றி ஜெயலலிதாவின் ஒப்புதல் வேண்டி 9.6.1992 அன்று மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கடிதம் அனுப்பினார். இந்த முக்கியமான பிரச்னையில் 9 மாதங்கள் கழித்துதான் பதில் எழுதினார். அப்படிப்பட்ட ஜெயலலிதாதான் யோசனை கூற முன்வந்திருக்கிறார்.
ஜெயலலிதா ஆட்சியில் 205 டி.எம்.சி. தண்ணீரைப் பெறுவதற்கு எந்த அளவுக்கு முயற்சி செய்தார் என்பதை, மேட்டூரில் கிடைத்த நீரின் அளவு பற்றிய புள்ளி விவரங்களை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2001&2002ம் ஆண்டில் 162.74 டி.எம்.சி, 2002&2003ல் 94.87, 2003&2004ல் 65.16, 2004&2005ல் 163.96 டிஎம்சி தண்ணீரும்தான் கிடைத்தது. ஆனால், தி.மு.க. ஆட்சியில், மேட்டூரில் கிடைத்த நீரின் அளவு 2006&2007ல் 235.93 டி.எம்.சி, 2007&2008ல் 346.73, 2008&2009ல் 204.48, 2009&2010ல் 219.48 டி.எம்.சி. இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment