கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, November 2, 2010

காலை, மாலை நேரங்களில் மாணவர்களுக்காக சிறப்புப் பேருந்துகள் - முதலமைச்சர் கலைஞர் உத்தரவு


சென் னையில் 12 வழித்தடங் களில் காலை, மாலை ஆகிய நெரிசல் நேரங் களில், பள்ளி மாணவ-மாணவியருக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க முதலமைச்சர் கலைஞர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் பள்ளிக் கூடங்களுக்குச் செல்லும் பெரும்பாலான மாணவ - மாணவியர், மாநகர பேருந்துகளையே நம்பி உள்ளனர். காலை நேரத் தில் மாநகர பேருந்து களில், அலுவலகம் செல் வோர், கல்லூரிகளுக்குச் செல்வோர் என அனைத்து தரப்பினருடன், பள்ளி மாணவர்களும் பயணம் செய்ய வேண்டி இருப்ப தால் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள் ளது. மேலும் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

இவற்றை கருத்தில் கொண்டு, பள்ளிக்கூட வாசலில் இருந்து பேருந் துகள் புறப்பட்டுச் செல் லும் வகையில் ஏற்பாடு செய்யலாமா?

பள்ளிக்கூடங்களின் நேரத்தை மாற்றி அமைக் கலாமா?

பள்ளி மாணவர்களுக்கு தனிச் சேவையை இயக் கலாமா?

என்பது போன்ற பல் வேறு பரிசீலனைகளை அரசு மேற்கொண்டு வந் தது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, சென்னை கோட்டையில் தலை மைச் செயலாளர் எஸ். மாலதி தலைமையில், உள்துறை, பள்ளிக் கல்வி, போக்குவரத்து துறை அதிகாரிகளின் கூட்டம் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெற் றது. இந்தநிலையில், சென்னை பள்ளி மாணவ - மாணவிகளுக்கு சிறப்பு பேருந்துகளை இயக் குவது தொடர்பாக முத லமைச்சர் கலைஞர் புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று (01.11.2010) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை மாநகரில் பள்ளி மாணவர்கள், பள் ளிக்குச் செல்லும்பொழு தும், வீடு திரும்பும் போதும் பேருந்துகளில் ஏற்படும் நெரிசல் கார ணமாக பயணம் செய்வ தில் சிரமம் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்கும் நோக்குடன்-பள்ளி களுக்கு மாணவ, மாண வியர் சென்று வருவதற்கு வசதியாக, `23சி', `29ஏ', `11ஜி', `12பி', `21எல்', `27டி', `29சி', `47', `5பி', `6டி', `37பி', `38சி' ஆகிய 12 வழித் தடங்களில் காலையில் இரண்டு நடைகளும், மாலையில் இரண்டு நடை களும் பள்ளி மாணவ, மாணவியர்க்கான சிறப்பு பேருந்துகளை உடனடியாக இயக்கிட முதலமைச்சர் கலைஞர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment