கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 22, 2010

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி - காந்தி மகன் தயாநிதி அழகிரி - அனுஷா மணவிழா முதல்வர் கலைஞர் முன்னிலையில் பேராசிரியர் க. அன்பழகன் நடத்தி வைத்தார்




மத் திய அமைச்சர் மு.க. அழகிரி மகன் மண விழாவை முதல்வர் கலைஞர் முன்னிலையில் தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க. அன் பழன் நடத்தி வைத்தார்.

தமிழக முதல்வர் கலை ஞர் அவர்களின் பெய ரன், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி - காந்தி ஆகியோரின் செல்வன் தயாநிதி அழகிரி - அனுஷா ஆகியோரது மணவிழாவை முதல்வர் கலைஞர் முன்னிலையில் தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழ கன் நடத்தி வைத்தார்.

மாநாடுபோல் மணவிழா

தமுக்கம் மைதானத் தில் 18.11.2010 அன்று காலை 9 மணிக்கு மிகச் சிறப்பாக மாநாடுபோல் நடை பெற்ற இம்மணவிழா வில் ஏராளமான அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்

மு.க.ஸ்டாலின்

இம்மணவிழாவிற்கு வந்திருந்த அனைவரை யும் வரவேற்று தமிழக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேடையில் அமர்ந்தி ருந்த முக்கியப் பிரமுகர் களுக்கு மத்திய அமைச் சர் மு.க. அழகிரி, மு.க. தமிழரசு ஆகியோர் பொன்னாடை அணி வித்தனர்.

மத்திய மேநாள் அமைச்சர் டி.ஆர்.பாலு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

மணமக்களுக்கு மாலை மாற்றிக் கொள் ளச் செய்து மண விழாவை நடத்தி வைத் தார் - தமிழக நிதியமைச் சர் பேராசிரியர் க.அன் பழகன்.

உரையாற்றியோர்:

மணமக்களைப் பாராட்டி, வாழ்த்தி எஸ்றா சற்குணம், புரட்சி பாரதம் பூவை ஜெகன் மூர்த்தி, காங்கிரஸ் கட் சியைச் சார்ந்த திருநா வுக்கரசர், சாலமன் பாப் பையா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய் தீன், பா.ஜ.க. இல.கணே சன், சபாநாயகர் ஆவு டையப்பன், தவத்திரு பொன்னம்பல அடிக ளார், கவிஞர் வைர முத்து, விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பி னர் தொல். திருமா வளவன், காங்கிரஸ் கட் சித் தலைவர் கே.வி.தங்க பாலு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நடிகர் ரஜினிகாந்த், மத் திய உள்துறை அமைச் சர் ப.சிதம்பரம், மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகி யோர் உரையாற்றினர். நிறைவாக தமிழக முதல் வர் கலைஞர் சிறப்புரை யாற்றினார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன் மோகன்சிங் ஆகியோ ரது ஆங்கில வாழ்த்துக் கடிதத்தை மத்திய அமைச் சர் தயாநிதி மாறன் வாசித்தார்.

மதியம் 11.45 மணிக்கு மணவிழா நிறைவு பெற் றது.

கட்சி வேறுபாடின்றி தமிழகத்தின் அனைத் துப் பகுதிகளிலிருந்தும் தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர்.

அரசு அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் பல் வேறு துறைகளைச் சார்ந் தவர்கள் இம்மணவிழா விற்கு வந்திருந்தனர்.

திருமண நிகழச்சிக்கு வந்தவர்களை தயாளு அம்மாள், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, காந்தி அழகிரி, முரசொலி செல்வம், செல்வி செல்வம், சன் குழும தலைவர் கலாநிதிமாறன், மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், மு.க.முத்து, மு.க.தமிழரசு, ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி, கயல்விழி வெங்கடேஷ், அஞ்சுகசெல்வி, விவேக், உதயநிதி ஸ்டாலின், அறிவுநிதி மற்றும் சீதாராமன் குடும்பத்தினர் வரவேற்றனர்.
திருமணத்தை முன்னிட்டு மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருமண நிகழ்ச்சிகள் தமுக்கம் மைதான வளாகத்தில் மெகா சைஸ் டிஜிட்டல் திரைகள் மூலம் 5 இடங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பந்ததலில் சிறப்பு சைவ விருந்து அளிக்கப்பட்டது. கூட்டத்தினர் அனைவரும் விருந்து சாப்பிட வேண்டும் என்பதற்காக ராஜாமுத்தையா மன்றம், காந்தி மியூசியம் ஆகிய இடங்களில் விருந்து அளிக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், கள்ளழகர் திருக்கோயில், நரசிங்கம் பெருமாள் கோயில், மதுரை நகர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஆதரவற்றோர், முதியோர், பார்வையற்றோர் இல்லங்களிலும் திருமண விருந்து அளிக்கப்பட்டது. மதியம் 2.30 மணி வரை மணமக்களை நீண்ட வரிசையில் நின்று விருந்தினர்கள் வாழ்த்தினர்.
விழாவில் மத்திய அமைச்சர் நெப்போலியன், தொழிலதிபர் விஜய்மல்லையா, சுகவனம் எம்.பி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டிஆர்.பாலு, ராஜா, சபாநாயகர் ஆவுடையப்பன், தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, வேலு, ஐ.பெரியசாமி, பெரியகருப் பன், சுப.தங்கவேலன், சாத்தூர் ராமசந்திரன், நேரு, தங்கம் தென் னரசு, மைதீன்கான், பரிதிஇளம்வழுதி, பூங்கோதை, தமிழரசி உள்ளிட்ட மாநில அமைச்சர்கள், நடிகர் ஒய்ஜி.மகேந்திரன், நடிகை லட் சுமி ராய், இயக்குனர் அமீர், சிவாஜி மகன் ராம் குமார், டிஎம்.சவுந்தர்ராஜன், குமரிஅனந்தன் உட்பட பலர் பங்கேற்று வாழ்த்தினர்.

No comments:

Post a Comment