கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

பெண்கள் சொந்த காலில் நிற்க நடவடிக்கை எடுத்தவர் கருணாநிதி - திமுக கூட்டணியை ஆதரித்து நடிகை குஷ்பு பிரசாரம்



பெண்கள் சொந்த காலில் நிற்க நடவடிக்கை எடுத்தவர் கருணாநிதி என்று நடிகை குஷ்பு பேசினார்.
கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி உட்பட கோவை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார்.
அப்போது குஷ்பு பேசியதாவது:
திமுக தேர்தல் அறிக்கை, ஒரு கதாநாயகியாக திகழ்ந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் அடித்தட்டு மக்களுக்கும் போய்ச்சேரும் வகையில் நடவடிக்கை எடுத்த அரசு திமுக அரசு. இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்கள் தமிழக அரசை பார்த்து அரசியல் கற்று வருகின்றன.
அதிமுக கூட்டணியில் சுய மரியாதைக்கு முக்கியத்துவம் இல்லாததால் வைகோ வெளியேறினார். சில கட்சிகள் சுய மரியாதை பற்றி கவலைப்படாமல், அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளன. கருணாநிதி ஆட்சியில் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக கோடிக்கணக்கான ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு, ஒவ்வொரு பெண்ணும் தனது சொந்தக்காலில் நிற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல தனியார் நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டு, படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசு பணியும் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக பொற்கால ஆட்சி மீண்டும் தொடர வேண்டும். தமிழகத்தில் 6வது முறை முதல்வராகி சாதனை படைக்க உள்ளவர் கருணாநிதி. நான் இந்த ஊரின் மருமகள். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு குஷ்பு பேசினார்.

No comments:

Post a Comment