கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

தமிழகத்தில் 77.4% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


தமிழகத்தில் சராசரியாக 77.4 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.
சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் 14.04.2011 அன்று வெளியிட்டார்.
அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சராசரியாக 77.4 சதவீதம் வாக் குகள் பதிவாகி உள்ளன. முதல்வர் கருணாநிதி போட்டியிட்ட திருவாரூர் தொகுதியில் 75 சதவீதமும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீரங்கம் தொகுதியில் 80 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 60 சதவீத வாக்குகளும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்ட ரிஷிவந்தியம் தொகுதியில் 78 சதவீத வாக்குகளும் பதிவாகின.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியிலும், ஆரணியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியிலும் மின்னணு வாக்கு இயந்திரத்தில் எண்ணிக்கை தவறாக காட்டியுள்ளது. இதனால் அந்த இரு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதவிர வாக்குப்பதிவு முடிந்தவுடன் நெய்வேலி தொகுதிக்கு உட்பட்ட சமட்டிக்குப்பம் என்ற வாக்குச்சாவடிக்கு வெளியே இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில் வாக்குச்சாவடிக்குள் இருந்த 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வாக்குச்சாவடியிலும் மறுதேர்தல் நடத்தப்படும். மறு வாக்குப்பதிவு குறித்து தேர்தல் கமிஷனிடம் உரிய உத்தரவு பெறப்பட்டு, அதற்கான தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு பிரவீன்குமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment