கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

120வது பிறந்த தினம் அம்பேத்கர் சிலைக்கு ஸ்டாலின் மாலை


அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அம்பேத்கரின் 120வது பிறந்த தினம், நாடு முழுவதும் 14.04.2011 அன்று கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் சார்பில் கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 14.04.2011 அன்று காலை 9.15 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மேயர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன், தனசேகரன், பா.குமரன், ஏ.டி.முருகன், கோயம்பேடு குமார், டி.ஆர்.கோவிந்தன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், 9.45 மணிக்கு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். மாநில செய்தி தொடர்பாளர் வன்னியரசு, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் வீரமுத்து, ராவணசங்கு, முத்தமிழன், ‘இலைக்கடை’ செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment