கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

கோடநாட்டில் வழி விடாத ஜெயலலிதா எப்படி நல்வழி காட்டுவார்? - குஷ்பூ பேச்சு


கோடநாட்டில் வழிவிடாத ஜெயலலிதா எப்படி பொதுமக்களுக்கு நல்வழி காட்டுவார் என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளர்.
திமுக கூட்டணி சார்பில் நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து கோத்தகிரியி நடைபெற்ற பொது கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியதாவது:
தமிழகத்தில் சின்ன குழந்தையை கேட்டாலும் கலர் டிவி, இலவச கேஸ் இணைப்பு, திருமண உதவி தொகை, கான்கிரீட் வீடுகள் என திமுக அரசின் சாதனைகளை சொல்லும். கருணாநிதியின் அஸ்திரமாக அவரது வாரிசுகள் அழகிரி, ஸ்டாலின் விளங்குகின்றனர்.
ஏப்ரல், மே மாதத்தில் சூரியன் உச்சத்தில் இருப்பதால் வெயில் அதிகமாக இருக்கும். உதயசூரியன் இப்போது உச்சத்தில் உள்ளது. ஆறரை கோடி மக்களின் இதய சூரியன் கருணாநிதி. எனவே உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு போட்டு கலைஞரை மீண்டும் முதல்வராக்குவோம்.
கடந்த 25ம் தேதி மதுரையில் ஜெயலலிதாவுக்கு ஒரு கேள்வி எழுப்பினேன். கருணாநிதி, தான் வாழ்ந்த வீட்டை தானமாக கொடுத்தார். உங்களால் போயஸ் தோட்ட அரண்மனையை தானமாக கொடுக்க முடியுமா? வேண்டாம், தேர்தல் அறிக்கையில் தெரிவித்த 3 சென்ட் நிலத்தையாவது பொதுமக்களுக்கு கொடுக்க முடியுமா?
கோடநாடு எஸ்டேட்டில் 172 குடும்பத்தினர் காமராஜர் நகருக்கு 17 கி.மீ சுற்றி செல்ல வேண்டியுள்ளது. தனது சொந்த எஸ்டேட் பகுதியிலுள்ள பொது மக்களுக்கு வழி விடாத ஜெயலலிதா, உங்களுக்கு நல்வழியை காட்டுவாரா? என சிந்தித்து ஓட்டு போடுங்கள்.

இவ்வாறு குஷ்பு பேசினார்.

No comments:

Post a Comment