![](http://4.bp.blogspot.com/-6MQ2kZdF_TQ/TWNbLeylw5I/AAAAAAAACmM/UHYna1do5Ok/s400/ST.jpg)
![](http://1.bp.blogspot.com/-QAVN5oCnhiU/TWJbljBKymI/AAAAAAAACkM/WN-l21Ck2EE/s400/t.jpg)
சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக - விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பங்கீடுட்டுகுழுக்களிடையிலான பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் 21.02.2011 அன்று நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீட்டுக்கான கழக குழுவினரான துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராச்சாமி, பொன்முடி ஆகியோரும், விடுதலை சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன், ரவிக்குமார், வன்னி அரசு ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘’தொகுதி பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. அடுத்தடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்படும்.
திருப்திப்படும் வகையில் எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று நம்புகிறோம்’’ என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment