
இந்தியா அளவில் 100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் சிறப்பாக செயல்படுகிறது என திருவண்ணாமலை மாவட்டத்திற்க்கு மததியரசின் சார்பில் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி 2ந்தேதி நடந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் விருது பெற்று திருவண்ணாமலை திரும்பிய ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, 100 நாள் வேலை திட்டத்தில் பெண்களை அதிகளவில் ஈடுபடுத்திது திருவண்ணாமலை மாவட்டம் என்பதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்றார்.
விருதினை பெற்ற மாவட்ட ஆட்சியர் 4ந்தேதி தலைமை செயலகத்தில் முதல்வர் கலைஞர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், வேலு ஆகியோரிடமும் வாழ்த்து பெற்றார்.
No comments:
Post a Comment