கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

மீண்டும் கருணாநிதி முதல்வரானால் தமிழகம் ஒளிமயமாகும் - தங்கபாலு



“மீண்டும் கருணாநிதி முதல்வராக பதவி ஏற்கும்போது தமிழ்நாடு ஒளிமயமான நாடாகத் திகழும்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் தங்கபாலு, 30.03.2011 அன்று வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். முன்னதாக, கோபாலபுரத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து தங்கபாலு வாழ்த்து பெற்றார்.
பின்னர், 115வது வட்டம் எல்டாம்ஸ் ரோடு & தேனாம்பேட்டை சிக்னல் அருகே பிரசாரத்தை தொடங்கினார். அவருடன் அவரது மனைவி ஜெயந்தி தங்கபாலுவும் ஆதரவு திரட்டினார்.
மாசிலாமணி தெரு, வெங்கட்ராமன் தெரு, திருவள்ளுவர் சாலை, அருந்ததி நகர் ஆகிய இடங்களில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். தங்கபாலுவுக்கு அப்பகுதி மக்கள் சால்வைகள் அணிவித்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின்பு தங்கபாலு நிருபர்களிடம் கூறுகையில், “முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றேன். அவர் 6வது முறையாக முதல்வராக வருவார். அவர் பதவி ஏற்கும்போது தமிழ்நாடு ஒளிமயமான நாடாக மாறும். மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது. இதனால், திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்” என்றார்.
தேர்தல் பிரசாரத்தில் கவுன்சிலர் வேலாயுதம், திமுக பகுதி செயலாளர் வேலு, காங்கிரஸ் பிரமுகர் தேவராஜ், வக்கீல் மோகன்தாஸ், பாமகவைச் சேர்ந்த ஜமுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment