கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, March 4, 2011

அண்ணாவின் கவிதை: கடவுள் எங்கே?


விண்மீது கடவுள் உளர்.
என்றே விளம்புகின்றாரா சிலர்?
இல்லை! இல்லை! கடவுளர் ஆங்கிலை!
மூடமதியினர் மூடமதிக் கதைகூறி
முடமாக்க முனைகின்றார், இசையாதீர்!
காரணம் காட்டுவேன் கருத்தில்
கொண்டு உண்மை காண்பீர்!
கொலையோடு கொள்ளை சூது
சூழ்ச்சிகள் செய்திடும் மன்னர்
திருநகர் பலவும் தீக்கிரையாக்குவர்,
இச்செயல் புரிந்திடும் இவரெலாம்
சாந்தசீலர் தமைவிட இன்பமாய்
வாழ்கின்றார்! கடவுளை நம்பிடும் சிறுநாடு பல
கடவுள்நெறி இகழும் பேரரசுக்குப் பலியாயின!
படைபலம் கொண்டவன்
அடிமை கொள்கிறான்!


காஞ்சி ஆண்டு மலர் 1965


No comments:

Post a Comment