கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 13, 2011

திமுகவை ஆதரித்து பிரச்சாரம்: எம்.ஜி.ஆர். கழகம்


தி.மு.க. கூட்டணியை ஆதரித்து எம்.ஜி.ஆர். கழகம் தேர்தல் பணியாற்றும் என, எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 15 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர். கழகம் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியை ஆதரித்து வருகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலிலும் எம்.ஜி.ஆர். கழகம் வழக்கம்போல் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து தேர்தல் பணியாற்றும்.

கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் தொடர்புகொண்டு தேர்தல் பணிகளில் தீவிரமாக பாடுபடக் கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றியை பெறப்போகிறது. அந்த வெற்றியை உறுதிபடுத்தும் வகையில் எம்.ஜி.ஆர். கழகத் தொண்டர்களும், பொறுப்பாளர்களும் உறுதியுடன் பாடுபட வேண்டுகிறேன்.

இவ்வாறு ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.

திமுக கூட்டணிக்கு தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆதரவு :
தொழிலாளர் ஐக்கிய முன்னணி நிறுவன தலைவர் பிரபு நேற்று வெளியிட்ட அறிக்கையில், “வருகிற சட்டபேரவை தேர்தலில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு, தொழிலாளர் ஐக்கிய முன்னணி முழு ஆதரவு அளிக்கிறது. 6வது முறையாக மீண்டும் கருணாநிதி முதல்வராக வேண்டி, தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட போகிறோம்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வள்ளுவர் குல முன்னேற்றச் சங்க தலைவர் ராஜா செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கையில், சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment