கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, February 1, 2012

இளைஞர் அணியில் மாநில நிர்வாகிகளுக்கு வயது வரம்பு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


ஆட்சி பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளை தி.மு.க. தொடர்ந்து செய்து வரு கிறது என தி.மு.க. பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விழுப்புரம் மாவட் டத்தில் ஒன்றிய நகர, பேரூர் இளைஞரணி நிருவாகிகள் நேர்முக தேர்வு விழுப்புரம் கலை ஞர் அறிவாலயத்தில் நடந்தது. நேர்முக தேர்வை தி.மு.க. பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் நடத்தி இளைஞரணி நிருவாகிகளை தேர்வு செய்தார். கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதா வது:

திமுக இளைஞரணி 1980இல் மதுரையில் ஆரம்பிக்கப்பட்டது. தி.மு.க. வளர்ந்ததற்கு காரணம் இளைஞரணி மட்டும்தான். இதனை மற்ற அணியில் இருப்ப வர்களும் ஒப்புக்கொண் டுள்ளனர். தி.மு.க.வில் தொமுச, தொண்டரணி, நெசவாளர் அணி எத் தனையோ துணை அமைப்புகள் உள்ளன.

ஆனால், அனைத் துக்கும் முன்னோடியாக இருப்பது தி.மு.க. இளை ஞரணி மட்டும்தான். இன்றைக்கு உள்ள மந் தமான நிலையை மாற்றி முனைப்புடன் செயல் பட தி.மு.க. தலைவரும், பொதுச்செயலாளரும் அறிவுரை வழங்கியுள்ளனர்.

ஒவ்வொரு ஒன்றியத் துக்கும் ஒரு இளைஞ ரணி அமைப்பாளர், 3 துணை அமைப்பாளர் கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
திமுகவில் ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும் இளைஞரணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டதுபோல மாநில நிர்வாகிகளுக்கும் விûவில் வயது வரம்பு நிர்ணயிக்கப்படும் என்றார்.

இளைஞரணி யினர் சோதனைகளுக் கும், வேதனைகளுக்கும் இடம் கொடுக்காமல் இளைஞரணியின் அங்க மாகவும், சிங்கமாகவும் வெற்றியின் சின்னமாக வும் இருக்க வேண்டும். ஆட்சி பொறுப்பில் தி. மு.க. இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளை செய்து வருகிறது.
- இவ்வாறு மு.க.ஸ்டா லின் பேசினார்.
இதனைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 22 ஒன்றிய நிர்வாகிகளிடம் நேரிடையாக கலந்தாய்வு நடத்தினார். 

இதில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment