கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, February 1, 2012

32 பேருக்கு கலைஞர் நிதியுதவி

நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக திமுக தலைவர் கலைஞர் 32 பேருக்கு 11.01.2012 அன்று  3,20,000 ரூபாய் வழங்கியுள்ளார். 


கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக திமுக தலைவர் கலைஞர் வழங்கிய நிதி வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வட்டி தொகையில் இருந்து, கடந்த 2007ஆம் ஆண்டு முதல் நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதி வழங்கப்பட்டு வருகிறது. 

அதன்படி இந்த மாதம் கிடைத்த வட்டித் தொகையில் இருந்து, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 32 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் 3,20,000 ரூபாயை திமுக தலைவர் கலைஞர் வழங்கியுள்ளார். 

நிதி பெறுவோம் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் செலவை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பி வைக்கப்படுவதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment