கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, September 10, 2011

பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முப்பெரும் விழாவில் பரிசளிப்பு : கலைஞர் பரிசுகளை வழங்குகிறார்


முரசொலி அறக்கட்டளை 08.08.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டிகள், ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் அனைத்து மாவட்டங்களிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதி போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டன.
பள்ளிகளுக்கான போட்டிகளில் கோவையைச் சேர்ந்த ஏ.எம்.ஆல்வின் ஆண்டோ முதலிடம் பிடித்துள்ளார். கல்லூரிகளுக்கான போட்டிகளில் தஞ்சாவூர் மாவட்ட மாணவர் ந.மணியரசன் முதலிடம் பிடித்துள்ளார். மொத்தம் 10 மாணவர்களுக்கு பரிசு அளிக்கப்பட உள்ளது. வரும் 30ம் தேதி சென்னையில் நடக்கும் முப்பெரும் விழாவில், திமுக தலைவர் கருணாநிதி பரிசுகளை வழங்குகிறார், என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment