கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, October 31, 2011

பொய் வழக்கு போட்டால் உண்ணாவிரத அறப் போராட்டம்: திமுக தலைமை


ஜாமினில் வெளிவரும் திமுகவினர் மீது மீண்டும் பொய் வழக்குப் போட்டு சிறை வாசலிலேயே அதிமுக அரசு கைது செய்தால், திமுகவினர் உண்ணாவிரத அறப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று திமுக தலைமை கூறியுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதிமுக ஆட்சியினரால் பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்ட திமுகவினர் நீதிமன்றங்களில் முறையாக ஜாமின் பெறுகின்றனர். ஜாமின் மனு தாக்கல் செய்து பிணையில் வெளியே வரும்போது அவர்கள் மீண்டும் புதிய பொய் வழக்கில் கைது செய்யப்படுகின்றனர்.

அவர்களை வீட்டிற்கு செல்லவிடாமல் சிறை வாசலிலேயே கைது செய்து சிறையில் அடைக்கும் கொடூரச் செயலை அதிமுக அரசு செய்து வருகிறது.

பிணையில் வெளியில் வரும் திமுகவினர் மீண்டும் கைது செய்யப்பட்டால், கட்சியினல் ஜனநாயக ரீதியாக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். இதனைக் கண்டித்து திமுகவினர் அடையாள உண்ணாவிரத அறப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment