கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, October 31, 2011

3 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்ய அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: கலைஞர்


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் மீண்டும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பது தம்முடைய ஆசைகளில் ஒன்றாக இருந்த போதிலும் அந்த ஆசை உரிய நேரத்தில் நிறைவேற முடியாமல் போனதற்கான காரணத்தை அனுபவ ரீதியாக தமிழர்கள் அனைவரும் அறிவார்கள்.

டெல்லியிலேயே ராஜீவ்காந்தியை தாமும், முரசொலி மாறனும் சந்தித்தப்போது ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து முழுமையாக விவாதிக்கப்பட்டது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு மாறனையும், வைகோவையும் அனுப்பி வைப்பதாக ராஜீவ் கூறினார்.

நளினிக்கு தூக்குத் தண்டனையை திமுக அரசு ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான முறையான ஏற்பாடுகளை திமுக அரசு செய்தது மன ஆறுதலை தருகிறது.

நளினிக்கு கிடைத்துள்ள அந்தச் சலுகை விரிவுப்படுத்தப்பட்டு இருபதாண்டு காலத்திற்கு மேலாக சிறையில் வாடிவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கும் கிடைத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அவர்கள் மீதான குற்றம் மிகப் பெரியது என்றபோதிலும், அவர்கள் அனுபவித்த தண்டனை காலத்தைக் கருத்தில் கொண்டு மனிதாபிமானத்தோடு இரக்கம் காட்ட முன்வர வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தேன். தற்போதும் அதையே கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளேன்.

தியாகு, கலியபெருமாள் ஆகியோரின் மரண தண்டனை திமுக ஆட்சியின்போது திமுக
ஆட்சியின் போது மாற்றியமைக்கப்பட்டது.

இன்றைய தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு, கடமைமுடிந்துவிட்டதாக கருதக்கூடாது. திமுக ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறைப்படி உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment