கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, January 30, 2011

மு.க.அழகிரி மணி விழா : துணை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து


மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மணி விழாவை முன்னிட்டு அவருக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சகோதரி செல்வி செல்வம் நேரில் வாழ்த்தினர்.
இன்று (30.01.2011) மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி 60வது பிறந்த நாள் மணி விழாவாகும். அவரை வாழ்த்துவதற்காக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது சகோதரி செல்வி செல்வம் ஆகியோர் 29.01.2011 அன்று மதியம் விமானத்தில் மதுரை வந்தனர். இங்கு சத்திய சாயி நகரிலுள்ள அவரது இல்லத்திற்கு சென்ற னர்.
மு.க.அழகிரி, காந்தி அழகிரிக்கு பூங்கொத்து கொடுத்து மணி விழா வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் தளபதி, மூர்த்தி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி, தணிக்கை குழு உறுப்பினர் குழந்தைவேலு உடன் இருந்தனர்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு மு.க.ஸ்டாலினும், செல்வி செல்வமும் புறப்பட்டனர். மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறும்போது “அண்ணன் மு.க.அழ கிரி நாளை மணி விழா நாளில் வெளியூர் செல் வதாக தெரிவித்துள் ளார். எனவே இன்று வந்து வாழ்த்தினோம்“ என் றார்.
அ.தி..மு.க.வில் சேர்ந்த சேகர்பாபு குறித்து கேட்டதற்கு " அவர் சிறந்த தொண்டர், நல்ல உழைப்பாளி. அவர் தி.மு.க.வில் சேர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வரும் வரவேற்றுள்ளார்“ என பதிலளித்தார்.

No comments:

Post a Comment