கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, January 24, 2012

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக இடமாற்றத்துக்கு எதிர்ப்பு : ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு


தமிழக ஆளுநர் ரோசய் யாவை முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 06.01.2012 அன்று   சந்தித்து பேசி னார். அப்போது அவர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக இட மாற் றத்துக்கு எதிர்ப்பு தெரி வித்து ஒரு லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுவை கொடுத்தார். அண்ணா நூற் றாண்டு நினைவு நூல கத்தை இடமாற்றம் செய்யக் கூடாது என்ற கோரிக் கையை வலியு றுத்தி தி.மு.க. மாணவரணியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள். இந்த கையெழுத்து இயக்கத் தின் போது ஒரு லட்சத்து 17 ஆயிரம் கையெழுத்துக் களை பெற்றனர். இந்த கையெழுத்து பிரதிகள் தமிழக ஆளுநரிடம் ஒப் படைக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந் தனர்.இதையொட்டி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ரோசய்யாவை 06.01.2012 அன்று   மாலை சந் தித்தார். அவருடன் டி.கே.எஸ். இளங்கோ வன் எம்.பி., மாணவ ரணிச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி, சட்டத்துறைச்செய லாளர் ஆலந்தூர் ஆர். எஸ்.பாரதி, மாணவரணித் துணைச் செயலாளர் கோவை கணேஷ் குமார், டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ., கோவி. செழியன் எம்.எல்.ஏ., ஆர். கிரிராஜன், குத்தாலம் க.அன்பழகன், பூவை. சி.ஜெர்ரால்டு ஆகியோர் உடன் சென்றனர். ஆளு நரை சந்தித்து விட்டு வெளியே வந்த மு.க.ஸ்டா லின் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதா வது:-
ஆசியாவிலே முதல் தரமான நூல்நிலைய மாக அண்ணாவின் நூற்றாண்டு நினைவை போற்றத்தக்க வகையில் கலைஞரின் முயற்சி யோடு அமையப் பெற்ற அண்ணா நூற் றாண்டு நினைவு நூல கத்தை அ.தி.மு.க. ஆட் சிக்கு வந்தபிறகு மாற்றுவ தாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறி விப்பை வெளியிட்டார். ஏற்கெ னவே இந்த பிரச்சினை உயர்நீதி மன்றத்துக்கு சென்று, இடைக்கால தடைஉத்தரவும் போடப்பட் டுள்ளது. நீதி மன்றத்தில் இடைக்கால தடைஇருந்தாலும், தி.மு.க. மாணவர் அணி சார் பில், அரசை கேட்டுக் கொள்வ தற்காக, ஜெய லலிதாவால் போடப்பட்ட அந்த உத் தரவை, அவர் உடனே திரும்பப் பெற்றுக் கொண்டு மீண் டும் அதே இடத்தில் அந்த நூல்நிலையம் இயங்கிடவேண்டும் என்ற அடிப்படையில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் கையொப்பங்களை பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், மருத் துவர்கள் போன்றவர்களி டம் பெற்றோம்.
அந்த கையெழுத்து பிரதியை ஆளுநரிடம் எனது தலைமையில் மாணவர் அணி நிருவா கிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து வழங்கியிருக் கிறோம். ஆளுநர் நாங்கள் கொடுத்த மனுவை படித்துப் பார்த்து, இந்த பிரச்சினை உயர்நீதி மன்றத்தில் இருக் கிறது.  எனவே ஆளுநர் என்ற முறையில் என்ன நட வடிக்கை எடுக்கமுடியுமோ, அந்த வகையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள் ளார். 
இவ்வாறு மு.க.ஸ்டா லின் கூறினார்.

No comments:

Post a Comment